பார்க்கவ குலத்தின் மூத்த முன்னோடி,தமிழ்நாடு பார்க்கவகுல சங்கத்தின் நிறுவன தலைவர்,தமிழ் அறிஞர் ம.ரா.குமாரசாமியின் 96 வது நினைவு நாளை ஒட்டி, விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் மாவட்டம், மணம்பூண்டி பகுதியில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளரும், இந்திய ஜனநாயக கட்சியன் விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவருமான செந்தில்குமார் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற நீதிபதி முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், சதானந்தன்,டாக்டர் சேகர்,அன்பழகன்,ரவிசந்திரன்.
பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின், விழுப்புரம் மாவட்ட தலைவர் தங்கவேல் உடையார், ம.ரா.குமாரசாமி அவர்களின் பேரன்கள் கலைமணி, குமாரசாமி,பாலமுருகன்,கோவல் தமிழ் சங்கத் தலைவர் உதயன்,பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன்,பாஸ்கரன்,கருணாநிதி,விழுப்புரம் மத்திய மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் குருமூர்த்தி,கார்த்திக், சிதம்பரநாதன், கள்ளக்குறிச்சி ஐஜேகே மாவட்ட செயலாளர் பொன்முடி உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















