இந்தியா நிலவில் இறங்குகிறது.,பாகிஸ்தான் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள் ” – பாகிஸ்தான் எம்.பி., பேச்சு வைரல்

Narendra Modi

Narendra Modi

இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது” என அந்நாட்டு பாராளுமன்றத்தில் எம்.பி., பேசியது வைரல் ஆகி உள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் முட்டாஹிடா குவாமி கட்சி எம்.பி சையத் முஸ்தபா கமால் பேசியதாவது:-
இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது” என அந்நாட்டு பாராளுமன்றத்தில் எம்.பி., பேசியது வைரல் ஆகி உள்ளது.

இன்று, உலக நாடுகள் நிலவிற்கு சென்று தரையிறங்கி சாதனை படைக்கும் நிலையில், கராச்சியில் நமது குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவல நிலை நிலவுகிறது. இந்தியா நிலவில் கால் பதித்த செய்திக்கு, இரண்டு வினாடிகளுக்குப் பிறகு கராச்சியில் திறந்தவெளி சாக்கடையில் ஒரு குழந்தை இறந்ததாக செய்தி வருகிறது.

பாகிஸ்தானின் வருவாய் இயந்திரமாக கராச்சி உள்ளது. பாகிஸ்தான் உருவானதில் இருந்து கராச்சியில் தான் இரண்டு துறைமுகங்கள் செயல்படுகின்றன. பாகிஸ்தான், மத்திய ஆசியா முதல் ஆப்கன் வரை நுழைவு வாயிலாகவும் இருக்கிறோம். கராச்சியில் 70 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 2.6 கோடிக்கும் அதிகமான குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

ஆனால் 15 ஆண்டுகளாக கராச்சிக்கு சிறிதளவு கூட தூய்மையான தண்ணீர் தர முடியவில்லை. அப்படி தண்ணீர் வந்தால் கூட, டேங்கர் மாபியா கும்பல் தண்ணீரை பதுக்கி வைத்து, கராச்சி மக்களுக்கு விற்கிறார்கள் என்றார். வ்வாறு அவர் பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. மேலும்

ஆனால் 15 ஆண்டுகளாக கராச்சிக்கு சிறிதளவு கூட தூய்மையான தண்ணீர் தர முடியவில்லை. அப்படி தண்ணீர் வந்தால் கூட, டேங்கர் மாபியா கும்பல் தண்ணீரை பதுக்கி வைத்து, கராச்சி மக்களுக்கு விற்கிறார்கள் என்றார். வ்வாறு அவர் பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. மேலும் பாகிஸ்தானை சொந்த நாடாக கொண்ட அமெரிக்கவாழ் தொழிலதிபர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பாராட்டி பேசி இருக்கிறார்பாக்-அமெரிக்க தொழிலதிபர் சஜித் தரார், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை புதிய உயரத்திற்கு அழைத்துச் சென்ற மிகவும் வலிமையான தலைவர் என்று பாராட்டி இருக்கிறார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார். நரேந்திர மோடியின் தலைமை இந்தியாவுக்கு மட்டுமின்றி, பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும் நல்லது செய்யும் என்றும், பாகிஸ்தானுக்கும் அவரைப் போன்ற தலைவர் தேவை என்றும் தரார் பேசி இருக்கிறார்.

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நிலவின் தென் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி இந்தியா சாதனை படைத்தது. இதன் மூலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆனால், பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து, ஐஎம்எப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்த்து கொண்டு இருந்தது

Exit mobile version