ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதுதவிர, விசா ரத்து, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
பயங்கரவாத தாக்குதல் நடத்திய நம் அண்டை நாடான பாகிஸ்தான் மீது, பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் தாக்குதலை மத்திய அரசு தொடர்கிறது. அந்த நாட்டில் இருந்து அனைத்து வகை இறக்குமதிக்கும் தடை, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு, தபால் மற்றும் பார்சல்களுக்கு அனுமதி இல்லை என, மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.. இதைத் தொடர்ந்து, அந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது.
அதே நேரத்தில், பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நோக்கிலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, துாதரக உறவு துண்டிப்பு, விசா மறுப்பு என, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு, மேலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், ஒரே நாளில் மூன்று அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இறக்குமதிக்கு தடை
இதன்படி, அந்த நாட்டில் இருந்து எந்த ஒரு இறக்குமதிக்கும், அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தாலும் அனுமதி மறுப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று அறிவித்தது.ஏற்கனவே, 2019ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 200 சதவீத வரியை மத்திய அரசு நிர்ணயித்தது. இதனால், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஏற்கனவே மிக மிக குறைந்த அளவே இருந்தது.அதுவும், உலர் பழங்கள், ஹிமாலயன் உப்பு போன்ற ஒரு சில பொருட்கள் மட்டுமே, அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன
அதே நேரத்தில் நம் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி தொடர்ந்தது. கடந்த 2024 – 25 நிதியாண்டில் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 3,786 கோடி ரூபாய். அதே நேரத்தில் இறக்குமதி 3.55 கோடி ரூபாய்.இதன்படி பார்க்கையில், பாகிஸ்தானின் பொருட்களை சார்ந்து நம் நாடு இல்லை. ஆனால், இந்திய பொருட்களை பாகிஸ்தான் பெரிதும் நம்பியிருந்தது. அதனால், அரசின் இந்த புதிய அறிவிப்பால், நமக்கு பெரிய பொருளாதார பாதிப்பு இருக்காது. ஆனால், பாகிஸ்தானுக்கு பெரிய அடியாக இருக்கும்.
செல்ல வேண்டாம்
பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடியை, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கொடுத்துள்ளது.பாகிஸ்தான் கொடியுடன் கூடிய எந்த ஒரு வணிக கப்பல்களும், இந்தியாவில் உள்ள எந்த ஒரு துறைமுகத்துக்குள்ளும் நுழைய உடனடி தடை விதித்து, அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதுபோல, நம் தேசிய கொடியுடன் கூடிய எந்த ஒரு கப்பல்களும், பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
பார்சல் அனுப்ப முடியாது
நாட்டின் பாதுகாப்பு கருதி, பாகிஸ்தானில் இருந்து, தபால் அல்லது பார்சல்கள் நம் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்து, மத்திய தொலைதொடர்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஆகாயம், சாலை என, எந்த மார்க்கத்திலும், பாகிஸ்தானில் இருந்து தபால்கள் மற்றும் பார்சல்களை ஏற்க மாட்டோம் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதுபோல, இங்கிருந்தும், பாகிஸ்தானுக்கு பார்சல்களை அனுப்ப முடியாது.நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த தடை உத்தரவுகள் அமலில் இருக்கும் என, மூன்று அமைச்சகங்களும் தெரிவித்துள்ளன.
மேலும் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் இல்லாம ராணுவமே பயிற்சி செய்ய முடியாமல் திண்டாடும் நிலை! உருவாகியுள்ளது இதைவிட பெரிய வேடிக்கை வேறென்ன இருக்க முடியும்? மோசமான பொருளாதாரம், லாஜிஸ்டிக்ஸ் சிக்கல் என திண்டாடும் பாகிஸ்தானால் ஒரு நீண்டகால போர்னா எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடியும்னு யோசிச்சுப் பாருங்க!
போர்னா சும்மாவா? செலவு ஒருபக்கம்… வெடிமருந்து கையிருப்பு இன்னொரு பக்கம்! கார்கில் போர்லயே பாகிஸ்தானை விட இந்தியா பல மடங்கு அதிகம் செலவு செய்தது வரலாறு! இந்தியாவின் பொருளாதார வலிமை, அந்நியச் செலாவணி கையிருப்பு, தேவைப்பட்டால் கடன் வாங்கும் திறன் என எல்லாமே போர்க்கால செலவுகளை சமாளிக்க கைகொடுக்கும்! வெடிமருந்து கையிருப்பிலும் இந்தியா படு கெட்டியாக இருக்கிறது! நீண்டகால போர் நடந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு போதுமான கையிருப்பு இருக்குதாம்! அதிரடி ஆயுத உற்பத்தியிலும் இந்தியா சுயசார்பை நோக்கி வேகமாக நகர்வது இன்னும் பலம்! ஆயுதங்களை ஏற்றுமதியும் செய்கிறோம்!
ஆனால் பாகிஸ்தான்? பொருளாதாரக் கட்டுப்பாடு, லாஜிஸ்டிக்ஸ் சிக்கல் என திண்டாட்டம்! ஒரு நீண்டகால போர்னா இவங்களால நிக்கவே முடியாது!மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்றால்… இந்தியா இப்போது பழைய இந்தியா இல்லை! பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது! யார் வம்பு செய்தாலும், எங்கு பிரச்சனை செய்தாலும், அதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்! ராணுவ பலம், பொருளாதார வலிமை, தொழில்நுட்ப மேன்மை என எல்லா வகையிலும் இந்தியா பலம் வாய்ந்த நாடாக நிற்கிறது! பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பரிதாப நிலையை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது!
இனி இந்தியாவில் வம்பு செய்தால், பதிலடி பயங்கரமாக இருக்கும் என்பதுதான் டெல்லியில் இருந்து வரும் செய்தி!