காஷ்மீர் லால் சௌக்கில் தேசியக்கொடி ஏற்றிய இஸ்லாமிய பெண்மணி.

லால் சௌக்கில் தேசியக்கொடி ஏற்றிய ருமிஷ ரபிக் என்கின்ற இஸ்லாமிய பெண்மணி.

ஜம்மு&காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த அரசியல் சாசன சட்டப் பிரிவு 370 & 35A உம் நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

பாக். பயங்கரவாதிகளால் ஏதாவது தாக்குதல் நடைபெறக்கூடும் என்ற காரணத்தினால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. பாக். ஆதரவு குழுக்களும் எவ்வித கொண்டாட்டங்களும் இருக்கக் கூடாது என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று காலையில் தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள லால் சௌக்கில் துணிச்சலுடன் முன்வந்து நமது தேசியக்கொடியை ஏற்றியுள்ளார் ருமிஷ ரபிக்.

அவரின் தேசபக்தியைப் பாராட்டுவோம்.

கட்டுரை:- சடகோப்பன் நாராயணன் வலதுசாரி சிந்தனையாளர்

Exit mobile version