Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவின் பொறியியல் அதிசயம்! ஈபிள் டவரை விஞ்சும் பிரமாண்டம்! உலக அதிசயமே அசந்துபோகும் அதிசயம்! திறந்து வைத்த மோடி!

Oredesam by Oredesam
June 7, 2025
in இந்தியா, உலகம், செய்திகள்
0
ChenabBridge

ChenabBridge

FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாகக் காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, அங்கு செனாப் பாலத்தைத் திறந்து வைத்தார். சுமார் 359 மீட்டர் அதாவது சுமார் 1177 அடி உயரத்தில் அமைந்துள்ள இதுதான் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள ரயில்வே பாலம் ஆகும். இந்த பாலத்தின் சிறப்புகள் குறித்து நாம் பார்க்கலாம்.ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று \ பல முக்கிய திட்டங்களைத் திறந்து வைத்தார். அதில் முதன்மையானது மற்றும் முக்கியமானது செனாப் பாலமாகும். உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான இது, இந்தியப் பொறியியல் துறையின் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

பிரதமர் மோடி
பஹல்கம் தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி காஷ்மீருக்குச் சென்றுள்ளார். உலகின் உயரமான பாலத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, பாலத்தின் மீது நமது மூவர்ணக்கொடியுடன் சிறிது தூரம் நடந்தார். இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரைப் பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமிக்க முயலும் நிலையில், அதற்கு அனுப்பப்பட்ட ஒரு மெசேஜாகவே இது பார்க்கப்படுகிறது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இது 272 கி.மீ. நீளமுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதே உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா திட்டத்தில் தான் இந்தியாவின் முதல் கம்பி ரயில் பாலமான அஞ்சி காட் பாலமும் (cable-stayed rail bridge) கட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் சிறப்புகளை நாம் பார்க்கலாம்.

செனாப் பாலத்தின் சிறப்புகள்
1.31 கி.மீ., நீளமுள்ள செனாப் பாலம் திட்டத்திற்குக் கடந்த வாஜ்பாயி ஆட்சி காலத்தில் 2003ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் கட்டுமானத்தை முடிக்கவே 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஆமைவேகத்தில் பணிகள் நடைபெற்றது மீண்டும் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. தாமதம் ஆனாலும் கூட பல காரணங்களுக்காகச் சிறப்பு வாய்ந்ததாகவே இந்த செனாப் பாலம் இருக்கிறது.
ரூ.1,486 கோடி செலவில் கட்டப்பட்டது.. இது, உலகின் மிக உயரமான ரயில்வே பாலமாகும். இது 28,660 மெட்ரிக் டன் எஃகால் ஆனது. இது காஷ்மீர் குளிரைத் தாங்கும் வகையில் பூஜ்ஜிய டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையையும் உறுதியாக இருக்கும்படி கட்டப்பட்டுள்ளது. மேலும், இது 40 டிகிரி வரையிலான வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டது.

அதேபோல இன்றைய தினம் பிரதமர் மோடி காத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். இது காஷ்மீரில் சுற்றுலாவிற்கு ஒரு பெரிய ஊக்கத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்கள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

செனாப் பாலம் 359 மீட்டர் உயரத்தில் உள்ள இது, பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானது. குதுப்மினாரை விட ஐந்து மடங்கு உயரமானது. இந்தியாவின் ரயில்வே துறை சமீப காலங்களில் எதிர்கொண்ட மிகப் பெரிய இன்ஜினியரிங் சவால் என்று அரசு இதை குறிப்பிடுகிறது.
இப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு தான் இந்த பாலத்தின் கட்டுமானத்தில் இருந்த மிகப்பெரிய சவாலாகும். இமயமலைப் பகுதியில் பெரிய இயந்திரங்கள் மற்றும் பிற கட்டுமான உபகரணங்களைக் கொண்டு செல்வது என்பது மிகவும் கடினமான பணி.

இந்த பாலம் மணிக்கு 266 கி.மீ., வேகத்தில் வீசும் காற்று மற்றும் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களையும் தாங்கும் திறன் கொண்டது. ரயில் போக்குவரத்துக்கு ஏற்றதாகவும், மோசமான வானிலையைத் தாங்கும் வகையிலும் இருப்பதை உறுதி செய்யவே பல ஆண்டு ஆய்வு தேவைப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் கட்டுமானம் எதிர்பாராத விதமாகச் சேதமடைந்தாலும், ரயில்கள் குறைந்த வேகத்தில் செல்ல அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் பூஜ்ஜிய டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் கூட இயங்கும் திறன் கொண்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் மிகவும் குளிரான பகுதிகளில் சுமுகமாகச் செயல்பட முடியும். தண்ணீர் உறைவதைத் தடுக்க சிலிகான் ஹீட்டிங் பேட்கள் மற்றும் பயோ-டாய்லெட் தொட்டிகளை இந்த ரயில் கொண்டுள்ளது. இந்த ரயில்களில் ஆட்டோ-டிரெய்னிங் வசதியும், மோசமான வானிலையின்போது ரயிலைப் பாதுகாப்பாக இயக்க உதவும் ஆன்டி-ஸ்பால் லேயரும் உள்ளது.

வடக்கிழக்கில் சிலிகுரி பகுதி, கோழி கழுத்து பகுதி என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்று ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியும் கோழி கழுத்து பகுதி என்று அழைக்கப்படுகிறது. ராணுவரீதியாக இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.இங்கு செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டிருப்பது பாகிஸ்தான், சீனாவுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவால் ஆகும். பாகிஸ்தான் எல்லை பகுதி இங்கிருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ளது. போர்க்காலங்களில் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், ஆயுதங்களை ரயில் பாதை மூலம் மிக எளிதாக எல்லைப் பகுதிக்கு எடுத்துச் செல்ல முடியும். எனவே பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு இணையாக ராணுவ ரீதியாகவும் புதிய ரயில் பாதை மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கோவை மாவட்டத்திற்கு ரூ. 3,749 கோடி கடனுதவி கொண்டு வந்த வானதி! பயனடைந்த 1 லட்சம் பேர்!

கோவை மாவட்டத்திற்கு ரூ. 3,749 கோடி கடனுதவி கொண்டு வந்த வானதி! பயனடைந்த 1 லட்சம் பேர்!

October 7, 2023
Vinoj Selvam

மாஸ் காட்டும் பா.ஜ.க மாநில செயலாளர் வினோஜ் செல்வம்! 1008 பூத்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி!

August 24, 2023
ஐநாவில் பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா !

ஐநாவில் பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா !

September 23, 2023
மோடி எங்க கட்சியில் சேருங்க-இஸ்ரேல் பிரதமர் ! இஸ்ரேல் நாட்டு மக்களிடையே நீங்க ஹீரோ

மோடி எங்க கட்சியில் சேருங்க-இஸ்ரேல் பிரதமர் ! இஸ்ரேல் நாட்டு மக்களிடையே நீங்க ஹீரோ

November 3, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x