Monday, June 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கள்ளநோட்டு நக்ஸல்களுடன் கனெக்சனா?.. சிக்கியது சிறுத்தை குட்டி செல்வம்! மொத்தமாக மாறிய வழக்கு! திடுக்கிடும் தகவல்கள்!

Oredesam by Oredesam
May 3, 2025
in செய்திகள், தமிழகம்
0
VCK

VCK

FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல், மேடை கிடைத்ததும், ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி திருமாவளன் ஆகியோர் தற்பெருமை பேசியே நான்கு ஆண்டுகளை ஓட்டி விட்டனர்.ஆனால் தமிழகத்தில் நடக்கும் அவலங்களை தினம் தோறும் பட்டியலிட வேண்டும். அவ்வாறு நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதியில் தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரையில், ஒரு மாதத்தில் நிகழ்ந்த 38 கொலைகள், தமிழகத்தையே பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன. 48 மணி நேரத்தில் எட்டுக் கொலைகள் நிகழ்ந்திருப்பது, மக்களை அச்சத்தில் உறையவைத்திருக்கிறது. இந்தக் கொலைகளில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியது, நெல்லையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.ஐ ஜாகிர் உசேன் பிஜிலி கொடூரமாக வெட்டிச் சாய்க்கப் பட்ட கொலைச் சம்பவம்தான்.

ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களை போலீசார் கண்டுகொள்வதில்லை. அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே போலீசார் பயன்படுத்தப்படுகின்றனர்.இது ஒருபுறம் இருந்தால் பாலியல் குற்ற சம்பவங்கள் அடிதடி சாதி ரீதியான பிரச்சனைகள் என பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளது திமுக கூட்டணி அரசு.

READ ALSO

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

கடலூரில் கள்ள நோட்டு புழக்கம் இருப்பதாக காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளருக்கு சொந்தமான இடத்தில் கள்ள நோட்டு கும்பல் கைது செய்யப்பட்டது. இந்த நிலையில் கள்ள நோட்டு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சுமார் ஒரு மாதத்திற்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் செல்வம் (வயது- 39) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வருகிறார்.இவருக்கு சொந்தமான வயலில் தகர சீட் கொட்டாய் அமைத்து அதில் கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரங்களை வைத்து கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட்டு வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் காலை அவரது வயலில் உள்ள தகர சீட் கொட்டகைக்கு சென்ற போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விசிக பிரமுகர் செல்வம் அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது கள்ள நோட்டு அச்சடித்தது புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. தொடர்ந்து கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வாக்கி டாக்கிகள், அச்சடிக்கும் பேப்பர், ரூ. 83,000 – ரொக்க பணம், வாக்கி டாக்கி – 1, லேப்டாப் – 1, ஏர்கன் – 1, பிஸ்டல் ஏர்கன் – 1, கவுண்டிங் மெஷின் – 1, பிரிண்டிங் மெஷின் – 1, பேப்பர் பண்டல் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விவசாய நிலத்தில் ஷெட் அமைத்து கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் செல்வம் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கள்ள நோட்டு அச்சடிக்கும் விவகாரத்தில் சிக்கிய செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

இது ஒரு புறம் இருக்க கள்ளநோட்டு கும்பலை கைது செய்ய கடலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடைபெற்ற நிலையில் செல்வம் எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஒட்டுமொத்தமாக கள்ள நோட்டு கும்பல் தலைமறைவான நிலையில் வழக்கை முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் செல்வத்தின் உறவினர் ஒருவரின் செல்போனை ரகசியமாக கண்காணித்த போது அவருடன் கர்நாடகாவில் உள்ள நபர் பேசி வருவது தெரிய வந்தது. இதனையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் அது செல்வம் தான் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து கர்நாடகா விரைந்த தமிழ்நாடு போலீசார் அங்கு பதுங்கி இருந்த செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் ஐந்து பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கள்ள நோட்டு விவகாரத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்கின்றனர் போலீசார்.இந்த நிலையில் கள்ள நோட்டு கும்பலுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் உள்ள கள்ள நோட்டு கும்பலுடன் செல்வத்துக்கு தொடர்பு இருக்கிறதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், ஆகியவை பிடிபட்டுள்ளதால் நக்ஸல்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை திரும்பியுளது. மேலும் இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகாமை களத்தில் இறங்க உள்ளது. ஏற்கனவே தேசத்திற்கு எதிராக பேசிய விசிகவினர். சேலத்தில் வனத்துறை அதிகாரிகளை தாக்கிய விவகாரம் .. இந்து கோவில்கள் குறித்து திருமா விமர்சனம் மேலும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியது போதை பொருள் கடத்தல் விவகாரம் என விசிக பழைய பைல்களை தூசு தட்ட ஆரம்பித்துள்ளது மத்திய புலனாய்வு அமைப்பு இதனிடையே கள்ளநோட்டு விவகாரம் சேர்ந்திருப்பதால் வரும் தேர்தலில் வி.சி.க கட்சி இருக்குமா என பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

ShareTweetSendShare

Related Posts

condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

india america

இறக்குமதி வேணாம்.. இந்தியாவின் அதிரடி முடிவு… போச்சே ஆழ்ந்த கவலையில் அமெரிக்கா!

August 30, 2023
Smriti Irani

144 கோடி ரூபாயை சுருட்டிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்.. பற்ற வைத்த ஸ்ம்ரிதி இராணி-பதறும் எதிர்க்கட்சிகள்!

August 27, 2023

பாராளுமன்றத்தில் டில்லி கலவரம் பற்றி அனல் தெறிக்கவிட்ட அமித்ஷா

March 12, 2020
டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் பயங்கரவாதிகள் பைல்களுடன் அமித்ஷாவுடன் சந்திப்பு நடக்கபோவது என்ன !

டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் பயங்கரவாதிகள் பைல்களுடன் அமித்ஷாவுடன் சந்திப்பு நடக்கபோவது என்ன !

September 22, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?
  • 9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!
  • மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!
  • ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x