பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்களை தயாராக வைத்துள்ளது. கடற்படை, விமானப்படையும் பயிற்சியை தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு நம் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். . இருநாடுகள் இடையே தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
ஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம். நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம் என்று அதிரடியாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் நாங்கள் இந்தியாவுடன் நிற்போம். நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம்.இது தான் இஸ்ரேலின் கொள்கை ரீதியான நிலைப்பாடு.பஹல்காம் தாக்குதலுக்கும், 2023 அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமை உள்ளது. இரண்டும் ஒன்றாக உள்ளது. ஆனால்சூழல் மட்டுமே வேறுபட்டு இருக்கிறது. அதேவேளையில் படுகொலை நடந்த விதம் ஒன்று தான். இந்தியாவை போலவே இஸ்ரேலும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. ஜிகாதி பயங்கரவாத மனநிலையுடன் அப்பாவி மக்களை குறிவைக்கும் பயங்கரவாதத்தை ஆழமாக புரிந்து கொண்டவர்கள் நாங்கள்.
எனவே இந்தியர்களை பயங்கரவாதிகள் குறி வைக்கும் போது, இந்தியாவின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. இஸ்ரேல் இந்தியாவுக்கு துணை நிற்கும். இதற்கு முன்பும் இதை செய்திருக்கிறோம். எதிர்காலத்திலும் இதை தான் செய்வோம்” என்றார்.கடந்த 22ம் தேதி பஹல்காமில் சுற்றுலா பயணிகள் கூடி மகிழ்ச்சியாக குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டபோது தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேபோல் தான் கடந்த 2023 அக்டோபரில் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 1000 பேர் வரை பலியாகினர். 250க்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக தான் இஸ்ரேல் போரை தொடங்கியது. பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த போர் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் நடந்து வருகிறது. இதை தான் பஹல்காம் அட்டாக்குடன் இஸ்ரேல் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஒப்பிட்டு இந்தியாவுக்கு ஆதரவு வழங்கி உள்ளார்.
அதுமட்டும் அல்ல, நம் காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் பயங்கரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கூட்டம் போட்டனர். அந்த கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதியும் பங்கேற்று நம் நாட்டுக்கு எதிராக பேசியிருந்தார்.
மேலும் இஸ்ரேல் – இந்தியா உறவை எடுத்து கொண்டால் நல்ல நிலையில் உள்ளது. இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்களை இந்தியா வாங்கி வருகிறது. ராணுவ ரீதியாக இஸ்ரேல் – இந்தியா இடையே நல்ல உறவு உள்ளது. அதேவேளையில் இஸ்ரேல் – பாகிஸ்தானை எடுத்து கொண்டால் இருநாடுகள் இடையே நல்ல உறவுஎன்பது இல்லை. பாலஸ்தீனம் விவகாரத்தில் இருநாடுகளும் வெவ்வேறு நிலைப்பாட்டில் உள்ளன. இதனால் தான் பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் நேற்று ஏகப்பட்ட ஸ்பைக் எல்ஆர் ரக நான்காம் தலைமுறை ஏவுகணைகளை இந்தியாவிற்கு அளித்து இருக்கி றது. இந்த ஸ்பைக் எல்ஆர் ரக ஏவுகணைகளை இந்திய ராணு வத்தில் காலாட்படை வீரர்கள் பயன்பாட்டிற்கு அழைக்கப்படு கிறது.இந்த ஸ்பைக் ஏவுகணைகளை ஒரு தரைப்படை வீரர் தன்னுடை ய தோளில் சுமந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எந்த ஒரு டாங்கையும் பீரங்கி களையும் தாக்கி அழிக்க முடியு ம்.வானில் பறக்கும் விமானங் களையும் அழிக்க முடியும்.இது பகல் மற்றும் இரவு என்று நேரத்திற்கேற்ப இயங்கும் வ கையில் மாறுபட்ட தொழில் நுட்பங்களை உடையது.ஏற்கனவே இந்த ஸ்பைக் ஏவுகணைகளை இந்தியாவிற்கு இஸ்ரேல்அளித்து டிரைனிங்கும் கொடுத்து விட்டார்கள்.
இப்பொழுது நேற்று ஏகப்பட்டஸ்பைக் ஏவுகணைகளை இஸ்ரேல் இந்தியாவிற்கு அளித்துஇருக்கிறது.ஒரு வேளை இந்தியா பாகிஸ்தான் போர் நிகழ்ந்தால் அது பெரிய அளவில் தரைவழி தாக்குதல்களாகவே இருக் க முடியும்.ஏன் என்றால் இந்தியா பாகிஸ் தான் இடையே உள்ள ஜம்மு காஷ்மீர் குஜராத் பஞ்சாப் மற்றும்ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களும் பாகிஸ்தானுடன் தரைவழி எல்லைகளை வைத்து இருப்பதால் தரைவழிப்போர் தான் பெருமளவில் இருக்க முடியும்.இந்த தரைவழி போருக்கு மிகவும் அவசியமானது ஸ்பைக்ஏவுகணைகள் தான்.அதனால் தான்இந்தியா கேட்க இஸ்ரேல்அள்ளி கொடுத்து இருக்கிறதுஅது மட்டுமல்லாமல் இஸ்ரேல்இந்தியாவிற்கு எங்களிடம் உ ள்ள அனைத்து விதமான ஆயுதங்களையும் அளிக்க தயாரக இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறது.இந்தியாவுடன் இஸ்ரேலும் இறங்கி இருப்பதால் பாகிஸ்தான் நிலை மிகவும் மோசமாகி உள்ளது.