ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா… கிராமத்து பெண்களிடம் சிக்கி சின்னாபின்னமான தி.மு.க பேச்சாளர்!.

Jakkama

Jakkama

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன், குடுகுடுப்புக்காரன் வேஷம் போட்டு வீதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மூடநம்பிக்கையை ஒழிப்பதே கொள்கை என வைத்துக்கொண்டு குடுகுடுப்பைக்காரன் வேடமிட்டு வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறது ஈவேரா கொள்கைவாதிகள்.

திமுகவிற்கு வாக்குகள் சேகரித்த ஜக்கம்மா கோவிந்தன், கிராமத்து பெண்களிடம் வசமாக சிக்கி சின்னாபின்னமானார். சராமாரிக் கேள்விகளால் ஜக்கம்மா கோவிந்தனை தெறிக்கவிட்டனர் கிராமத்து பெண்கள். இதனால் ஜக்கம்மா கோவிந்தன் எஸ்கேப் ஆன சம்பவம் தான் ஹைலைட்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன், குடுகுடுப்புக்காரன் வேஷம் போட்டு வீதிகளில் வாக்கு சேகரித்தார். திமுகவுக்கு ஓட்டுபோடுங்கள் உங்கள் குறையெல்லாம் தீர்ந்துவிடும்.இந்த தருமபுரி தொகுதியில் திமுக வெற்றி பெறும், ஸ்டாலின் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என ஜக்கம்மா சொல்கிறார், என குடுகுடுப்பை ஆட்டிக்கொண்டு பெண்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார் .

அப்போது ஒரு முதலில் ஒயின் ஷாப்பை மூட சொல்லுங்க, இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றது, ஆட்சிக்கு வந்தால் மூடுவேன்னு சொன்னாரே ஏன் செய்யலன்னு கேள்வி எழுப்பினார்வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர், இதனால் தமிழக இளைஞர்களுக்கு படித்த ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாது, எங்க வீட்டு பிள்ளைகள் வேலையில்லாம இருக்குன்னு ஆவேசமானார்

பூண்டு விலை 400 ரூபாயிடுச்சி என்று விலைவாசி உயர்வை பட்டியலிட்டு ஒரு பெண் ஜக்கம்மா கோவிந்தனை ஒரு பிடி பிடிக்க.பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார் ஜக்கம்மா கோவிந்தன் நிலமை மோசமாவதை உணர்ந்த உடன் வந்த திமுக நிர்வாகி ஒருவர் டைம் ஆச்சு அடுத்த ஏரியாவுக்கு கிளம்பலாம் எனக்கூறியதும் அங்கிருந்து கூட்டத்துடன் ஜகா வாங்கினார் ஜக்கம்மா கோவிந்தன்

Exit mobile version