Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கிளாம்பாக்கம் வந்துருச்சு….அடுத்து குத்தம்பாக்கம் வருது.. இது எங்க இருக்கு.. இப்போவே தலையை சுற்றுதே..

Oredesam by Oredesam
February 14, 2024
in செய்திகள், தமிழகம்
0
Kuthambakkam Village in Tamil Nadu

Kuthambakkam Village in Tamil Nadu

FacebookTwitterWhatsappTelegram

தென் மாவட்ட ஊர்களுக்கு செல்வதற்காக திறக்கப்பட்டது. கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. போதிய வசதி இல்லை,போதுமான பேருந்துகள் இல்லை, சென்னையிலிருந்து 30 கிலோமீட்டருக்கு தள்ளி இருக்கும் இந்த பேருந்து நிலையத்தை அடைய பல மணிநேரம் ஆகிறது என தினம் தோறும் ஒரு பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில் அடுத்த பேருந்து நிலையத்தை திறப்பதற்கு மும்முரம் காட்டி வருகிறது தமிழக அரசு.

கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தைதொடர்ந்து குத்தம்பாக்கம் என்கிற இடத்தில் புதிய பேருந்து நிலையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்துநிலையம் எங்கே இருக்கிறது என சென்னைவாசிகள் கேட்டு வருகிறார்கள். பேருந்து நிலையம் அருகில் எதாவது லோக்கல் ரயில் நிலையம் எதாவது உள்ளதா இல்லை லோக்கல் பேருந்து நிலையம் உள்ளதா என ஆராய ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும், என கேள்விகள் தொடங்கிவிட்டது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இந்த நிலையில் குத்தம்பாக்கம் பேருந்து நிலயத்திற்கு செல்ல புறநகர் ரயில் வசதியோ, மெட்ரோ வசதியோ இப்போது வரை இல்லை என குறிப்பிடத்தக்கது. மக்கள் இந்தப் பேருந்து முனையத்திற்குச் செல்ல வேண்டுமெனில் பேருந்தையோ அல்லது தனிப்பட்ட வாகனங்களையோதான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை தான் உள்ளது

20 ஆண்டுகளைக் கடந்து கோயம்பேடு பேருந்துநிலையம் இயங்கி வந்தது. மேலும் சென்னையின் மைய பகுதியில் அமைந்துள்ளது. மேலும் கோயம்பட்டில் வேறொரு பெரிய திட்டம் வரவிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார்.

மேலும் கோயம்பேட்டிலிருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் கிளம்பும்போது நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் புகார்களும் கிளம்பியிருந்தன. இந்நிலையில்தான் கோயம்பேடு பேருந்து முனையத்தில் மொத்தமாகக் குவியும் பேருந்துகளை நகரின் பல்வேறு எல்லைகளுக்கு பிரித்துவிடும் வகையில் பல்வேறு பகுதிகளில் பேருந்து முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே ஆந்திரா,தெலங்கானா மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாதவரம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் புதிதாகக் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் ஒன்று செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.

குத்தம்பாக்கத்தில் பேருந்து முனையம் கட்ட வேண்டும் என்கிற திட்டம் 2019 ஆம் ஆண்டே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. 336 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டு 2021 பிப்ரவரியில் வேலைகள் தொடங்கின. இடையிலேயே பட்ஜெட் கொஞ்சம் கூட்டப்பட்டு 396 கோடி ரூபாய் பட்ஜெட்டாக அறிவிக்கப்பட்டது.

எங்கே இருக்கிறது குத்தம்பாக்கம்?

கோயம்பேட்டிலிருந்து சரியாக 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது குத்தம்பாக்கம் பேருந்து முனையம். மதுரவாயிலைத் தாண்டி பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் ஈவிபி ஃபிலிம் சிட்டியும் ஈவிபி சினிமாஸூம் அமைந்திருக்கும். அதற்கு நேர் எதிரில் வீட்டு வசதி வாரியத்தின் திருமழிசை துணைக்கோள் நகரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலத்தில்தான் இந்தப் பேருந்து முனையம் அமைந்திருக்கிறது.

எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும்?

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என இப்போதைக்கு திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள்.

வருகிற டிசம்பருக்குள் வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார். ஆனால், இந்த குத்தம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு செல்ல புறநகர் இரயில் வசதியோ மெட்ரோ வசதியோ இப்போது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் இந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டுமெனில் பேருந்தையோ அல்லது தனிப்பட்ட வாகனங்களையோதான் பயன்படுத்த வேண்டும்.

மாதவரம், கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து முடிச்சூரிலும் ஒரு ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கத்தில் மக்களுக்கு என்னென்ன மாதிரியான நடைமுறை சிக்கல்கள் இருக்கும் என்பதை அரசு அனுமானிக்கத் தவறியிருந்தது. அதனால் பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்து ஒன்றரை மாதத்தைக் கடந்தும் தினந்தோறும் மக்கள் எக்கச்சக்க சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே மக்கள் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அனுமானித்து தீர்வுகளை தேடி தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழக அரசியல் களத்தை மற்றும் கந்தசஷ்டி கவசம்! கறுப்பர் கூட்டம் மொத்த விவரங்களையும் திரட்டி, அமித் ஷாவிடம் ஒப்படைத்த உளவுத்துறை !

தமிழக அரசியல் களத்தை மற்றும் கந்தசஷ்டி கவசம்! கறுப்பர் கூட்டம் மொத்த விவரங்களையும் திரட்டி, அமித் ஷாவிடம் ஒப்படைத்த உளவுத்துறை !

August 3, 2020
மோடி அரசுக்கு மேலும் ஒருமகுடம் சீனாவை தோற்கடித்து இந்தியா பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி.

மோடி அரசுக்கு மேலும் ஒருமகுடம் சீனாவை தோற்கடித்து இந்தியா பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி.

August 7, 2021

மனித வாழ்வியலை கூறும் சனாதன தர்மம் இது மற்றவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல.

March 8, 2020
உத்திர பிரேதேசத்தில் யோகியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கருத்து கணிப்பில் தகவல்.

உத்திர பிரேதேசத்தில் யோகியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கருத்து கணிப்பில் தகவல்.

September 4, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x