காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் பாகிஸ்தான் திணறிப்போனது. மொத்தம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில் சீனாவை நம்பி பாகிஸ்தான் நம் நாட்டிடம் அடி வாங்கி உள்ளது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.நம் எல்லையில் ரஃபேல் போர் விமானங்களை பறக்கவிட்டு அதில் இருந்து ஏவுகணை, ஹம்மர் குண்டுகளை பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மொத்தம் 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
நள்ளிரவில் வெறும் 25 நிமிடத்தில் இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கு ‛ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிந்தூர் என்பது குங்குமத்தை குறிக்கும். காஷ்மீரில் ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கி பெண்களின் குங்குமத்தை அழித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த பதிலடிக்கு ‛ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பஹவால்பூரில் உள்ள மார்கஸ் சுபன் அல்லா முகாம், தெஹ்ரா காலனில் உள்ள சர்ஜால் முகாம், கோட்லியில் உள்ள மார்கஸ் அப்பாஸ் முகாம், முசாபராபாத்தில் உள்ள சைதினா பிலால் முகாம் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. அதேபோல் லஷ்கர் இ தொய்பாவுக்கு சொந்தமான முரித்கேவில் உள்ள மார்கஸ் தொய்பா, பர்னாலாவில் உள்ள மார்கஸ் அஜில் ஹதித் முகாம், முசாபராபாத்தில் உள்ள ஷாவாய் நல்லா முகாம், ஹிஜாபுல் முஜாகிதீன் அமைப்பின் சியால்கேட்டில் உள்ளமெக்மூனா ஜோயா, கோட்லியில் உள்ள மாஸ்கர் ரஹீல் ஷாகித் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டன.
இந்நிலையில் தான் சீனாவை நம்பி பாகிஸ்தான் கெட்டுப்போய் நம் நாட்டிடம் அடிவாங்கி உள்ளது தெரியவந்துள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டின் ஏவுகணைகளை இடைமறித்து வானிலேயே அழிக்கும் ஏவுகணை தடுப்பு சிஸ்டம்களை தயாராக வைத்திருந்தது. குறிப்பாக எச்க்யூ – 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டமை தயாராக வைத்திருந்தது. இந்த எச்க்யூ – 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் என்பது சீனா தயாரிப்பாகும். ஆனால் இந்த ஏவுகணை தடுப்பு சிஸ்டமால் எதிரி நாடுகளின் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்க முடியும். இது ஒரு லாங்க் ரேஞ்ச் ஏர் டிபென்ஸ் சிஸ்டம். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் ரஷ்யாவின் எஸ் 300 ஏர் டிபென்ஸ் சிஸ்டமுக்கு நிகரானது என சீனா மட்டுமே சொல்லி கொண்டிருந்தது.
ஆனால் இன்று நம் ஏவுகணைகள் பாகிஸ்தானை தாக்கியபோது இந்த சீனாவின் தயாரிப்பான எச்க்யூ 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் என்பது செயல்படவில்லை. இது தான் பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை தரைமட்டாகின. பொதுவாக சீனாவின் தயாரிப்பு மீது பல கேள்விகள் இருக்கும். சீனாவின் பொருட்கள் தரம் குறைவாகவும், ஆபத்து காலத்தில் கைக்கொடுக்காது எனவும் சொல்லப்படுவது உண்டு. அது பாகிஸ்தான் விஷயத்தில் சரியாக நடந்துள்ளது. இதன்மூலம் சீனாவை நம்பி பாகிஸ்தான் நம்மிடம் சம்மட்டி அடி வாங்கி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..
இனி பாகிஸ்தானே நினைத்தாலும்.. இந்தியாவை தாக்க முடியாது.. ஆம் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு பெரிய செக் ஒன்றை வைத்துள்ளது இந்தியா.. அது என்ன செக் என்று பார்க்கலாம்
- இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன. இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவில்லை.
- இப்போது பாகிஸ்தான் திருப்பி அடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. இந்தியாவில் பாகிஸ்தான் எங்கே தாக்கும்? இந்திய ராணுவ தளவாடங்களை தாக்க முடியாது. தாக்கினால் அது போர் ஆக மாறும்.
- இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவில்லை. அதனால் பாகிஸ்தானும் இந்திய ராணுவ தளவாடங்களை தாக்க முடியாது.
- சரி.. நாம் தாக்கியது போல தீவிரவாத தளவாடங்களை தாக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவில் அப்படி கேம்ப் எதுவுமே இல்லை.
- காஷ்மீரில் உள்ள ஒரு சில தீவிரவாத கேம்ப் கூட பாகிஸ்தானுக்கு ஆதரவானது.
- இப்போது பாகிஸ்தான் நினைத்தால் கூட எங்கே தாக்குவது என்ற முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
- ஏனென்றால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தளங்களில் மட்டுமே இந்தியா தாக்கியது.
- இதற்கு பதிலடியாக இந்தியாவில் பாகிஸ்தான் எங்கே தாக்கினாலும் அது போர். பாகிஸ்தானுக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போன்ற நிலை ஏற்பட்டுவிட்டது.