மதுரையில் நேற்று கூட்டமாகக் கூடி தடை செய்யப்பட்ட பகுதியைத் திறந்து விடச் சொல்லி பிரச்சனை செய்துள்ளனர் ஜமாத் ஆட்கள் சிலர்.

தமிழகத்தில் இது முதல் முறை அல்ல. இது போல் மாநிலம் முழுவதும் செய்கிறார்கள். இது திட்டமிட்டே தான் செய்கிறார்கள் என்று சந்தேகம் வலுவாக எழுகிறது.

காரணம் ஒரு இடம் இரண்டு இடம்
பல இடங்கள் இது நடைபெறுகிறது.

நோய் பாரவலை தடுக்க தனிமைப்படுத்தப்பட்ட தெருவை திறந்து விட கோரி 150-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலை மறியல் செய்ய முயன்றனர்!

இதை என்ன சொல்லி திருத்துவது!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி எது , அனுமதிக்கப்படும் பகுதி எது என்பதை தீர்மானம் செய்வது ஜமாத் தலைவர்களா இல்லை அரசு சுகாதார ஊழியர்களா?

இவர்கள் செய்யும் அட்டூழியத்தால் என்ன ஆகும்? மொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும் நடுத்தெருவுக்கு கொண்டுவரும் வேலையைத் தான் சில ஜமாத் ஆட்கள் செய்கின்றனர்.

கேட்டால் மதம் சொல்லிவிட்டார்கள் சிறுபான்மையினருக்கு உரிமை போச்சு
அது இது என்று ஒப்பாரி ஆரம்பிப்பது.

அவன் அவன் வேலை வெட்டிக்குப் போகமுடியாமல் தினமும் உணவுக்கு
நொந்து கிடக்கும் போது…

தமிழகத்தில் பரவுவதற்கே தப்லீகி ஜமாத் தான் காரணம் அதையும் பொறுத்துக் கொண்ட இந்த மக்களை மேலும் மேலும் கஷ்டப்படுத்த நிச்சயம் இது பெரும் சிக்கலைத் தான் சமூகத்தில் உருவாக்கப் போகிறது.

இஸ்லாமிய மொத்த சமூகத்தின் மீது மக்களுக்கு ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்து இந்த செயல்களை இஸ்லாமியர் சகோதரர்கள் நிறுத்த வேண்டும்.

அரசு நிறுத்தலாமே?
கட்சிகள் கண்டிக்கலாமே?

ஆளும் அரசு மத ஓட்டை கணக்கிடுகிறது;

எதிர்க்கட்சி திமுக மத
ஓட்டை தூண்டிவிடுகிறது;

தவறே செய்யாத பொது மக்கள்
வாழ்வு தினமும் நாசம் ஆகிறது.

ஆனால் இறுதியாக வந்து மதம் பார்க்காதீர் மனிதம் பாருங்கள் என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உபதேசம் செய்ய மட்டும் வந்துவிடுவார்கள் இந்த தலைவர்கள்.

-மாரிதாஸ்

Exit mobile version