வானிலை மையம் வார்னிங்!.. வீசப்போகுது கடும் வெப்ப அலை! மக்களே எச்சரிக்கை…

kodai hot

kodai hot

தமிழ்நாட்டில் மே 2 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதானல் கடும் வெயிலோடு அனல் காற்றும் வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு வெயில் வாட்டி வதைது வருகிறது. இதேபோல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் அவ்வப்போது வெப்ப அலை வீசி வருகிறது. ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மற்றும் ராயல சீமா பகுதிக்கும் இந்திய வானிலை மையம் கடுமையான வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கையை நீட்டித்துள்ளது. வெப்ப அலையால் பாதிக்கப்பட கூடிய இந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் தீவிர கவனத்துடன் இருக்குமாறும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதேநேரம் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு வெப்ப அலையின் தாக்கம் இந்த பகுதிகளில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொங்கன், கர்நாடகாவின் உள் மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் வெப்ப அலை நிலைகள் ஒரு சில இடங்களில் அதிகரித்து காணப்படும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் மே 2, 3, மற்றும் 4 ஆகிய தேதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம், தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதோடு தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடைய வடகிழக்கு அசாமில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் தாழ்வான வெப்பமண்டல மட்டங்களில் வடக்கு பீகாரிலிருந்து மணிப்பூர் வரை நீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, அடுத்த ஐந்து நாட்களில் அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் ஒரு சில இடங்களில் பனிப்பொழிவு நிலவும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version