Sunday, January 29, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் சொத்து வரி உயர்வு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா? புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கேள்வி !

Oredesam by Oredesam
April 2, 2022
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் சொத்து வரி உயர்வு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா? புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கேள்வி !
FacebookTwitterWhatsappTelegram

நகர்ப்புற அபரிமித சொத்து வரி உயர்வு தமிழக அரசின் அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டும் ! சொத்து வரியை உயர்த்த மத்திய நிதி ஆணையம் மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது எப்போது? 100 முதல் 200 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்த கட்டளையிட்டதா?தமிழக அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்!வரிவிதிப்புகள் இல்லாமல், அரசு நிர்வாகம் நடைபெற இயலாது.

ஆனால், வரிவிதிப்புகள் மக்கள் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். தாறுமாறான வரிவிதிப்புகள் அபரிமிதமான விலை உயர்வுக்கும், மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்து, அவர்களை வீதிக்கு வந்து போராடவும் தூண்டும். கரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள், ரஷ்ய உக்ரைன் போரால் ஏற்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுகளினால் அனைவரும் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

READ ALSO

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

ஐந்து மாநில தேர்தலுக்காக மட்டுமே, கடந்த மூன்று மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த பத்து தினங்களாக தினமும் 70 முதல் 80 பைசாக்கள் வரை உயர்த்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டை தி.ஸ்டாக்கிஸ்டுகள் தினமும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளினுடைய சொத்து வரிகளை அபரிமிதமாக உயர்த்தி, மார்ச் 30 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருக்கிறது. ஆனால், ஏப்ரல் 1 ஆம் தேதி மாலை தான் பத்திரிகைகளுக்குச் செய்தியாகப் பகிரப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில், முகாமிட்டிருக்கின்றபொழுது, அவருக்குத் தெரியாமலேயே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்குமோ என்று திமுகவின் பிரதான கூட்டணிக் கட்சியின் தலைவர் ஒருவர் ’வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்.

முதல்வரின் அனுமதி இல்லாமல் இந்த உத்தரவு எப்படிப் பிறப்பிக்க முடியும்?மத்திய அரசினுடைய 15வது நிதிக்குழு அறிக்கையின் அடிப்படையிலேயே, தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காலி மனைகள், கல்விக்கூடங்கள் என அனைத்திற்கும் 100 முதல் 200 சதவிகித வரி அதிகரிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக, இந்த வரி உயர்வை நியாயப்படுத்தி, மொத்த பழியையும் மத்திய அரசின் மீது சுமத்தி அறிக்கை வெளியிட்டு அமைச்சர் நேரு அவர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்.

1. மத்திய அரசினுடைய 15வது நிதிக் குழு எந்த ஆண்டு, எந்த மாதம், எந்தத் தேதியில் இந்த அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பியது என்பது குறித்தும்,2. 100 முதல் 200 சதவிகிதம் வரியை உயர்த்த வேண்டும் என ஏதாவது கட்டளையை மத்திய அரசின் நிதி கமிஷன் சொல்லியிருக்கிறதா? அப்படி இருந்தால் அது குறித்தும்,

3. மத்திய நிதிக்குழு, நகர்ப்புற சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டிருந்தால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஏன் அதை அமலுக்குக் கொண்டு வரவில்லை? என்பது குறித்தும்,

4. ஒவ்வொரு செயலுக்கும் மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ எனக் குறைத்துப் பேசிக் குற்றம் சுமத்துபவர்கள் மத்திய அரசின் நிதிக்குழு அறிக்கையை மட்டும் சிறிதும் பரிசீலிக்காமலும், மக்களிடம் கருத்துக் கேட்காமலும் ஏன் அவசர அவசரமாக நிறைவேற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது? என்பது குறித்தும்,- தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, வரி உயர்வு செய்யப்படுமேயாயின், அது திமுகவின் வெற்றிக்குப் பாதிப்பை உண்டாக்கும் என்று தானே.

ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் வரையிலும் அதை மூடிமறைத்து இருக்கிறீர்கள். ’மாடல்’ அரசு பற்றி சுய தம்பட்டம் அடித்துக் கொண்டே, இது போன்ற மக்களுக்கான பிரச்சனைகளை மூடி மறைக்கின்ற இந்த அரசை எப்படி அழைப்பது? ’மாடல்’ அரசு என்றா? ’மூடல்’ அரசு என்றா?வீடுகள், வணிக நிறுவனங்கள், காலிமனைகள் மற்றும் கல்விக் கூடங்களுக்கான வரி விதிப்பு எந்த அடிப்படையிலானது என்பது குறித்து எவ்வித தெளிவான விளக்கமும் அளிக்கப்படாததால் பொதுமக்கள் இதுவரையிலும் இருளிலேயே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். Zone-களின் அடிப்படையில் என்று சொல்லிக் கொண்டு வீதிக்கு வீதி, ஊருக்கு ஊர், நகரத்திற்கு நகரம் இஷ்டம் போல் வரி விதிக்கிறார்கள். ஆனால், அந்த Zone-கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது என்பது குறித்தான விளக்கம் இல்லை.இந்நிலையில், எவ்வித நியாயமான அடிப்படை காரணங்களும் இல்லாமல் ஏழை, எளிய, நடுத்தர மக்களினுடைய தலையில் பாறாங்கல்லுக்குச் சமமான 100 முதல் 200 சதவிகிதம் வரி உயர்வைச் சுமத்துவது ஏற்புடையது அல்ல. எனவே, பொது மக்களின் கருத்துக்களை அறியாமல், கடந்த 30 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள நகர்ப்புற சொத்து வரி உயர்வு அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் சொத்து வரி உயர்வு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா?நகர்ப்புற அபரிமித சொத்து வரி உயர்வு தமிழக அரசின் அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டும்!சொத்து வரியை உயர்த்த மத்திய நிதி ஆணையம் மாநில அரசுக்குப் பரிந்துரை செய்தது எப்போது? 100 முதல் 200 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்த கட்டளையிட்டதா?தமிழக அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்!- டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLAநிறுவனர் & தலைவர்புதிய தமிழகம் கட்சி

ShareTweetSendShare

Related Posts

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை  பாஜக தலைவர் அதிரடி…
அரசியல்

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

January 10, 2023
ஜீ ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக மாறியிருக்கிறது சி.எம்.டி.ஏ -அண்ணாமலை.
அரசியல்

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

January 4, 2023
“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
அரசியல்

“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…

December 18, 2022
பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .
செய்திகள்

பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

December 1, 2022
தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
செய்திகள்

5 ஆண்டாக உள்ள அா்ச்சகா் பயிற்சி காலத்தை ஓராண்டாகக் குறைக்கக்கூடாது: அண்ணாமலை.

December 1, 2022
குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.
இந்தியா

குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

December 1, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

தமிழகத்தில் தொடரும் சோகம்!  காவலரை தாக்கிய தி.மு.க வர்த்தக அணி மாவட்ட துணை தலைவர் அஷ்ரப்.

தமிழகத்தில் தொடரும் சோகம்! காவலரை தாக்கிய தி.மு.க வர்த்தக அணி மாவட்ட துணை தலைவர் அஷ்ரப்.

March 7, 2022

What Your Legs Could Be Telling You About Your Heart Health

January 16, 2020
பாஜகவில் இணைந்தார் குஷ்பு..!

பாஜகவில் இணைந்தார் குஷ்பு..!

October 12, 2020
ஆசிரியரை மிரட்டும் அரசு பள்ளி மாணவர்கள்! வாய் மூடி நிற்கும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர் அமைப்பு

ஆசிரியரை மிரட்டும் அரசு பள்ளி மாணவர்கள்! வாய் மூடி நிற்கும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர் அமைப்பு

April 27, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…
  • கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …
  • “சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
  • பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x