சிறுபான்மையினர் பாதுகாவலர் மோடி ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மொஹரம் ஊர்வலம் !

இஸ்லாமியர்களில் சியா பிரிவினர் மொஹரம் ஊர்வலம் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்
ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மொஹரம் ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மோடி ஆட்சி ஏற்றபின் ஜம்மு காஷ்மீரில் பல சீர்திருத்த நடவடிக்கைள் மேற்கொண்டார்கள். பிரிவு 356 நீக்கம் யூனியன் பிரேதேசமாக மாற்றியது அங்கு சுற்றுலா தளங்களை மேம்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளபட்டது . தீவிரவாதிகளை வேட்டையாடியது மோடி அரசு.

இந்த நிலையில் தான் ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மொஹரம் ஊர்வலம் நடத்துவதற்கு தடையை நீக்கி மொஹரம் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீநகரில் குருபஜார் என்ற பகுதியில் இருந்து டல்கேட் வரை ஷியா பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்றனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

காலை 8 மணி அளவில் இந்த ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது. மொஹரம் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்ததற்காக துணை நிலை ஆளுநர் நிர்வாகத்திற்கு ஷியா பிரிவினர் நன்றி தெரிவித்தனர். “இந்த ஊர்வலத்தை நடத்த கடந்த 34 வருடங்களாக நாங்கள் ஏங்கினோம். ஹஸ்ரத் இமாம் ஹுசைனை நினைவுகூரும் வகையில் நாங்கள் கொடிகளை ஏந்தியது ஒரு வரலாற்று தருணம்” என்று ஊர்வலத்தில் பங்கேற்ற அமீர் ஜாஃபர் தெரிவித்தார்.

Exit mobile version