“தவ்ஹீத் ஜமாஅத், மோடியை கொல்ல திட்டம்?” – கொந்தளித்த நாராயணன் திருப்பதி
1, கட் & பேஸ்ட் நிதிநிலை அறிக்கை: “இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு முறை, ‘நிதிநிலை நன்றாக இருக்கும்’ என்கிறார் நிதி அமைச்சர். மற்றொரு முறை, ‘நிதிநிலை மோசமாக இருக்கும்’ என்கிறார். இதிலிருந்து தெரிகிறது இது ஒவ்வொன்றும் கட் பேஸ்ட் செய்யப்பட்டது என்று. இது ஒரு பயனற்ற நிதிநிலை அறிக்கை”
2, நேற்று மதுரையில் நடந்த (அமைதிமார்க்க) போராட்டத்தில், பிரதமர், உள்துறை அமைச்சர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொலை செய்வோம் என்று பேசியிருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பயங்கரவாதம் வேகமாக வளர்ந்து வருகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது இது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கோவை சம்பவத்தை மறக்கவில்லை நாம். பாஜக இவர்களை வன்மையாக கண்டிக்கிறது. அவர்களை கைது செய்ய வேண்டும். தவ்ஹீத் ஜமாதை தடை செய்ய வேண்டும்.
என தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















