பெரம்பலுாரில் போலி வாக்காளர் அட்டை தயாரித்த முகமது சமீம் கைது !

பெரம்பலுார் மாவட்டம், லப்பைக்குடிகாடு அபுபக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது சமீம், 33, இவர், லப்பைக்குடிகாடு மெயின் ரோட்டில், கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த முகமது சாஜித், 19, என்பவர், வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க இவரை அணுகினார். 250 ரூபாய் பெற்று, வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினார். அந்த அட்டையை ஆதாரமாக வைத்து, முகமது சாஜித் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார். போலீஸ் விசாரணையில், அவரது வாக்காளர் அடையாள அட்டை போலியானது என தெரிந்தது.

இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முகமது சாஜித்துக்கு வழங்கியது போல பலருக்கு போலி வாக்காளர் அடையாள அட்டையை முகமது சமீம் வழங்கியது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version