ஏன் இத்தனை எதிர்ப்பு புதிய விவசாய சட்ட திருத்த மசோதா குறித்து படித்து பகிர்ந்து விவசாயம் காப்போம்.

எப்பொழுதும் எல்லா சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியாவில் இப்பொழுது விவசாய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கின்றது

இந்த சட்ட திருத்தம் என்ன சொல்கின்றது என்றால் இதுதான், அதாவது அரிசி கோதுமை பருப்பு எண்ணெய் வித்துக்கள் போன்றவை அத்தியாவாசியம் என்ற வகையில் இருந்து ஏற்றுமதி போன்ற பிரிவுக்கு மாற்றபடுகின்றது

இது போக விலை உத்திரவாதம், வேளான் சேவைகள் திருத்தம் என கூட இரு திருத்தங்களை செய்கின்றது

இது விவசாயிகளை கொந்தளிக்க வைக்கின்றது, நெல்லும் கோதுமையும் அரசால் ஒரு குறைந்த விலையில் கொள்முதல் செய்யபடும். இனி தனியார்கள் அடிமாட்டு விலைக்கு வாங்குவார்கள் என அச்சமூகம் அஞ்சுகின்றது

அரசோ அப்படி அல்ல எங்களின் கொள்முதல் எக்காலம் போல் நடக்கும் அது அல்லாமல் நாம் நியாவிலை கடைகளை நடத்தமுடியாது, எங்களை விட தனியார் அதிக விலை கொடுத்தால் அது உங்களுக்கு லாபம் அல்லவா என விளக்கம் அளிக்கின்றது

இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம்

ஒரு குறைந்தபட்ச விலை எப்பொழுதும் உண்டு, அரசு கொள்முதலும் உண்டு,அதற்கு மேல் நல்ல விலை இருந்தால் தாராளமாக விற்கலாம் என அரசு சொல்வதும் ஏற்புடையதே

இது எதை நோக்கி செல்கின்றது என்றால் ஏற்றுமதியினை நோக்கி செல்கின்றது

அதாவது இங்கு அத்தியவாசியம் என சொல்லி பல விவசாய பொருட்கள் தேக்கி வைக்கபடுகின்றன. அரிசி கோதுமை பருப்பு என ஏகபட்டது உண்டு

அவைகள் பலநேரம் வீணாகவும் போவது உண்டு

மிகுந்த கட்டுபாட்டுக்கு இடையில் ஏற்றுமதி உண்டே தவிர இங்கு தேங்குவதும் நாசமாவதும் அதிகம்

இந்தியாவின் பரப்பில் 50ல் ஒருபங்கு கூட இல்லா வியட்நாமும், பர்மாவும், தாய்லாந்தும் உலகுக்கே அரிசி விற்கின்றது, பாகிஸ்தான் அரிசி கோதுமையினை அள்ளி எறிந்து வீசுகின்றது

இந்தியாவில் இருந்து சிலவகை அரிசிகள் பெரும் கட்டுப்பாட்டுடன் ஏற்றுமதியாகும், இது மிக சிறிய அளவே

மீதெமல்லாம் உணவு பாதுகாப்பு என இங்கு வைக்கபடும், இப்பொழுது இந்தியாவில் உணவு பஞ்சம் இல்லை எனும் நிலையில் அரசு அதை விற்பனை செய்ய எண்ணுகின்றது

ஏற்றுமதிகள் பெருகினால் நமக்கு அன்னிய செல்வாணி பெருகும் விவசாயிகளுக்கும் லாபம் வரும் என்பது அரசின் கணக்கு

இப்பொழுது வெங்காயம் ஏற்றுதியாகும் ஆனால் ஒரு கட்டத்தில் நாட்டில் தட்டுபாடு என்றால் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கின்றோம் அல்லவா, அப்படி உணவு பொருள் தட்டுபாடு வந்தால் அதையும் தடை செய்வோம் என்கின்றது அரசு

இது நியாயமான விளக்கமாகவே படுகின்றது

விவசாயத்தில் வாழை ஓரளவு லாபம், அதுவும் எப்பொழுது லாபமென்றால் ஏற்றுமதி சரியாக இருக்கும் காலங்களில் லாபம், ஏற்றுமதி இல்லையென்றால் அதுவுமில்லை

விவசாயி செய்யும் செலவுக்கு ஒரு வாழைதார் 2000 ரூபாய்க்கு சென்றால்தான் கட்டுபடியாகும், அந்த விற்பனை இந்தியாவில் சாத்தியமில்லை, ஏற்றுமதி ஒன்றேதான் வழி

கவனியுங்கள் இந்தியாவில் திடீரென தக்காளி தெருவெல்லாம் கிடக்கும், காய்கறி தேடுவாரற்று கிடக்கும், விலையில்லா நிலையில் விவசாயி அழுவான்

இதையே ஏற்றுமதி என சொல்லிபாருங்கள் அவை நிச்சயம் நல்ல காசுக்கு செல்லும் விவசாயி நஷ்டபட மாட்டான்

தேவைக்கு அதிகாக இருப்பதை விற்பது ஒன்றும் தவறல்ல, இதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.

மாணவர்கள் உட்பட எல்லோரையும் பயமுறுத்தியே அரசியல் செய்யும் கூட்டம் இப்பொழுது விவசாயிகளை தூண்டிவிட கிளம்பிவிட்டது

சரி இதுகாலம் இவர்கள் விவசாயிக்கு என்ன செய்தார்கள் என்றால் சொல்ல தெரியாது

ஏன் விவசாயிகள் திருத்த சட்டத்துக்கு இவ்வளவு எதிர்ப்பு? விவசாயிகள் மேல் அக்கறையா இல்லை, சுத்தமாக இல்லை

இது விவசாயிகளை சுரண்டும் தனியார் சந்தைகள் உட்பட இரக்கமில்லா வியாபார கூட்டத்துக்கு பெரும் அடியாக அமையும்

ஆம், இங்கு கருணாநிதியின் உழவர் சந்தையெல்லாம் மாடியில் காய்கறி வளர்க்கும் வீட்டுகார விவசாயிக்கானது, சுமார் 50 கிலோ வரைதான் அவனால் சந்தையில் விற்க முடியும்

அதுவும் அவன் இருந்து வியாபாராம் பார்பானா? விவசாயம் செய்வானா?.

ஆயிரம் கிலோ, இரண்டாயிரம் கிலோ என உற்பத்தி செய்யும் விவசாயி காய்கறிகளையோ இல்லை தானியங்களையோ எங்கு விற்பான்?

அவன் சந்தைக்கே செல்வான், அங்குதான் புரோக்கர் உலகம் ஆரம்பிக்கும், வியாபாரிகளோடு கை கோர்த்து அவர்கள் விவசாயினை சுரண்டுவதுதான் உலகின் மிகபெரிய சுரண்டல்

ஆம், உதாரணத்துக்கு ஒரு கத்தரிக்காய் மூட்டையினை ஆயிரம் ரூபாய்க்கு விற்று கொடுத்தால் அவன் புரோக்கர் கமிஷன் 200 ரூபாய் (வியாபாரியிடம் வாங்குவது தனி கணக்கு)

இது போக வாடகை, சந்தை கமிஷன் என உறிஞ்சபட்டு விவசாயிக்கு வருவது வெறும் 400 ரூபாய்தான்

இவ்வளவுக்கும் அந்த மூட்டை 5 ஆயிரத்துக்கு விற்றால்தான் கட்டுபடியாகும், நிச்சயம் அந்த மூட்டை 3 ஆயிரம் ரூபாய்க்கு செல்லும்., ஆனால் புரோக்கரும் வியாபாரியும் செய்யும் தந்திரம் விவசாயியினை சுரண்டும்

இதை தடுக்க சொன்னால் கருணாநிதி அதை செய்யாமல் “உழவர் சந்தை” என உழப்பிவிட்டார்

ஆம், அவர் செய்தது உழவர் துரோகம், மிகபெரும் துரோகம்

காங்கிரஸ் விவசாயிகள் கடன் தள்ளுபடி என சொல்லவருமே தவிர ஒருகாலமும் இந்த தனியார் கொள்ளைக்கும், விவசாயி சுரண்டலுக்கும் முடிவு சொல்லாது.

இங்கு விவசாய மானியமும், கட்ன தள்ளுபடியும் இந்த வியாபார புரோக்கர் கூட்டத்துக்குத்தான் லாபமே தவிர, விவசாயிக்கு மிஞ்சுவது மண்ணே

முதல் முறையாக மோடி அரசு விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கவும், கிடைக்கும் நல்லவிலை இந்த இடைதரக இம்சைகள் இன்றி கையில் கிடைக்கவும், அதனால் ஏற்றுமதி பெருகி நாட்டுக்கும் வருமானம் வரவும் சில நடவடிக்கைகளை எடுக்கின்றது

அதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம்

விவசாயி சந்திக்கும் இன்னல் மிகபெரிது, பெருகிவிட்ட விலைவாசி, ஆட்கிடைக்கா நிலையில் வேலையாள் மிகபெரிய சம்பளம் என அவனின் போராட்டம் பெரிது

இதிலும் வறட்சி, வெள்ளம், காற்று, மின்சாரம், பருவகால நோய் என எல்லாவற்றையும் தாண்டித்தான் அவன் விளையவைக்க முடிகின்றது

ஒரு கிலோ அரிசி 500 ரூபாய்க்கு விற்றால்தான் அவன் வாழமுடியும், ஒரு கிலோ பருப்பு 800 ரூபாய்க்கு விற்றால்தான் அவன் தொடர்ந்து நிற்க முடியும்

அதை இங்கு செய்தால் ஒருவனுக்கும் உணவு கிடையாது, அப்படி செய்யாமல் விவசாயி வாழவும் முடியாது

இதனால் இங்கு உணவுபொருள் எல்லோருக்கும் கட்டுபடியாகும் விலையில் வழங்கவும், அதே நேரம் விவசாயியும் வாழவும் பெரும் கட்டுபாடற்ற ஏற்றுமதி ஒன்றே வழி

இந்திய அரசு அந்த நோக்கில்தான் சட்டத்தை திருத்தியிருக்கின்றது, இது தவறாக புரிந்து கொள்ளபட்டு விவசாயி அழியபோகின்றான் என இங்கு விவகாரமாக்குகின்றது

விவசாயி ஏற்கனவே அழிந்துவிட்டான், அவன் கொஞ்சம் உயிரோடு முணங்குகின்றான், அவனை உயிர்பிக்க நடவடிக்கை எடுக்கின்றது அரசு

இல்லை அவன் அப்படியே கிடக்க வேண்டும், அவ்வப்பொழுது அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்.

கட்டுரை:-எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்

Exit mobile version