Monday, May 29, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

புதிய கல்விக்கொள்கை வேலை வாய்ப்பை உருவாக்கும் தலைமுறையை உருவாக்கும்-முனைவர் தீனதயாளன்

Oredesam by Oredesam
August 19, 2020
in செய்திகள், தமிழகம்
0
புதிய கல்விக்கொள்கை வேலை வாய்ப்பை  உருவாக்கும் தலைமுறையை உருவாக்கும்-முனைவர் தீனதயாளன்
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக “தேசிய கல்வி கொள்கை 2020” குறித்த காணொளி கருத்தரங்கம் மதுரை பெட்கிராட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்போடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து பேசிய பெட்கிராட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு எம்.சுப்புராம், ”பல்வேறு கலந்தாய்வுகளுக்கு பிறகு, 36 ஆண்டுகளுக்கு பின் புதிய கல்விக்கொள்கையை அரசு அறிவித்துள்ளது. இக்கல்விக்கொள்கையை முழு அளவில் அமல்படுத்தும் பொழுது நமது மாணவச்செல்வங்கள் உலக அரங்கிலே பிரகாசிப்பார்கள்” என குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசிய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குனர் திரு காமராஜ், கடந்த ஆறு ஆண்டுகளாக நமது பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற பொழுது இந்தியர்கள் அவருக்கு விழா எடுத்துக் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். இந்தியா பல்வேறுதுறைகளிலே தலைமைத்துவம் பெற்று வரும் இந்த நேரத்தில் கொரோனா பரவல் என்பது ஒரு சிறு தடங்கலாக அமைந்துள்ளது. இருப்பினும் நம்முடைய வளர்ச்சி முன் எப்ப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. இத்தகைய சூழலில் கடந்த 29ம் தேதி மத்திய அரசு தேசிய கல்வி கொள்கை 2020ஐ அறிவித்து உள்ளது. இதனால் இந்தியா உலக அளவில் அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கக்கூடிய நிலை உருவாகும் என்றார். தேசிய கல்விக் கொள்கையின் அவசியத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் . கல்வியின் தரத்தை உயர்த்தல், அனைவருக்கும் கல்வி அளித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் நம் சந்ததியினரை உலக அளவில் மேம்படுத்துவதற்கான, செயல்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இருப்பதால் இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை அவசியம் என காமராஜ் குறிப்பிட்டார்.

READ ALSO

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

நிகழ்ச்சியில் மதுரை கல்லூரியின் பொருளாதாரத் துறை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முனைவர் எஸ்.தீனதயாளன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கல்விக் கொள்கை குறித்து விளக்கவுரை ஆற்றினார். 130 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியாவில் நாளிதழ் வாசிப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 40 கோடிதான் என்றும் செய்தித்தாள்களை படிப்பது என்பது எல்லோராலும் இயலாத காரியமாக உள்ளது எனவும் இச்சூழலில் இதுபோன்ற மெய்நிகர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து மக்களுக்கு செய்திகளை கொண்டுபோய் சேர்க்கும் மக்கள் தொடர்பு கள அலுவலகத்திற்கு பாராட்டுகளை தீனதயாளன் தெரிவித்தார். ஒரு நாடு வளரவேண்டும் என்றறால் அந்நாடு கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும், கல்வி ஒன்றுதான் நாட்டினுடைய அழியாத செல்வம். மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்துவிடும். ஒரு நாடு சமூக ரீதியிலே, பொருளாதார ரீதியிலே, கலாச்சார ரீதியிலே அறிவியல் ரீதியிலே வளரவேண்டுமென்றால் அதற்கு மூல காரணமாக இருப்பது கல்விதான். வள்ளுவர் ” கற்க கசடறக் கற்பவை கற்றபின் / நிற்க அதற்குத் தக” என்கிறார். நமக்கு என்ன பிரச்னை என்றால், படிக்க முடிகிறது ஆனால் அதற்கு தகுந்தபடி வாழமுடியவில்லை. இதற்கு விடையளிக்கும் விதமாக இருப்பதுதான் தற்போதைய கல்விக்கொள்கை எனக் குறிப்பிட்டார். இக்கொள்கையில், பள்ளிக்கல்வி 5 +3 +3 என்றும் உயர்கல்வி 4 ஆண்டுகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய முறையில் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு என முதல் வகுப்பு தொடங்கி பனிரெண்டாம் வகுப்புவரை 36 தேர்வுகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. ஆனால் புதிய கொள்கையில் 3, 5, 8 , 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மட்டுமே தேர்வுகள் நடக்கும் என்றும் இடைப்பட்ட தேர்வுகள் மதிப்பீடு செய்பவையாக மட்டுமே இருக்கும். இதனால் மாணவர்களுக்கான மன அழுத்தம் குறையும் என தீனதயாளன் தெரிவித்தார்.

ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியிலேயே கற்பிக்கப்படும் என்றும் எட்டாம் வகுப்புவரை தாய்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட தீனதயாளன் இந்தியாவில் உள்ள 130 கோடி பேரில் 7 முதல் 7 ½ கோடி பேர்கள்தான் தமிழ் படிக்கிறார்கள் என்றும் 130 கோடி மக்களும் தமிழ் படிக்க இதில் வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் இதனால் இக்கல்விக்கொள்கை வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் எனவும் கூறினார்.

எம்.பில் படிப்பு இனி கிடையாது. மாணவர்கள் தாங்கள் விருப்பப்படும் பாடங்களை தேர்வு செய்து படிக்க வாய்ப்புள்ளது. பள்ளிக்கல்வியோடு தொழில் கல்வி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை வாய்ப்பை தருபவர்களாக உருவாவார்கள் என்று தெரிவித்த தீனதயாளன் பங்குபெற்றோர் எழுப்பிய சந்தேகங்களுக்குப் பதில் அளித்தார்.

மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி அலுவலர் திரு வேல்முருகன் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் செய்திருந்ததோடு, வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும் எடுத்துரைத்தார். பெட்கிராட் நிறுவனத்தை சேர்ந்த திருமதி கிருஷ்ணவேணி நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பல்வேறு மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள், சுயவேலைவாய்ப்பு பயிற்சி மாணவர்கள், ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினர் 100க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.

ShareTweetSendShare

Related Posts

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
உலகம்

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

May 25, 2023
புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
செய்திகள்

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

May 25, 2023
தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !

May 25, 2023
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !
ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

May 25, 2023
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு
இந்தியா

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.
உலகம்

“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.

May 24, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

அமித் ஷாவின் எச்சரிக்கை வழிக்கு வந்த மம்தா மத்திய அரசின் நடவடிக்கைளுக்கு மே.வங்கம் முழு ஒத்துழைப்பு தரப்படும் !

அமித் ஷாவின் எச்சரிக்கை வழிக்கு வந்த மம்தா மத்திய அரசின் நடவடிக்கைளுக்கு மே.வங்கம் முழு ஒத்துழைப்பு தரப்படும் !

April 23, 2020

அண்ணாமலை ஐ.பி.எஸ்-ஐ சமாளிக்க ஜாதி அரசியலை கையில் எடுத்த திமுக !

September 29, 2020
சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர் !

சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர் !

June 29, 2022
வட்டி வசூலா வச்சு செஞ்சுடுவோம் தமிழக அரசு எச்சரிக்கை !

வட்டி வசூலா வச்சு செஞ்சுடுவோம் தமிழக அரசு எச்சரிக்கை !

March 27, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
  • புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
  • தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
  • பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x