டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) மேற்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்லாமல் பஹல்காம் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், பயங்கரவாத சம்பவம் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனர்.பஹல்காம் பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள், அப்பகுதி மக்களிடம் பயங்கரவாத சம்பவம் மற்றும் பயங்கரவாதிகளின் அடையாளங்கள் தொடர்பாக கேட்டறிந்தனர். மேலும் பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்களாக சந்தேகப்படும் நபர்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அத்துடன் மகாராஷ்டிரா, ஒடிஷா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பஹல்காம் படுகொலை சம்பவத்தில் உறவுகளை பறிகொடுத்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தோரை நேரில் சந்தித்து, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விவரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் உருவபடங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. 3 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரை ஒருவரே இந்த கோரத் தாக்குதலை நடத்தியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை தொடர்பாக என்.ஐ. ஏ வட்டாரங்கள் கூறுகையில், பஹல்காம் தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது; பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பேருக்கு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 2 பேர் உதவியிருப்பதும் தெரியவந்துள்ளது என்கின்றன.இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், ஸ்லீப்பர் செல்களின் வீடுகளை தேடி கண்டுபிடித்து அவற்றை வெடிவைத்து தகர்த்து அழிக்கும் நடவடிக்கைகளையும் அம்மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டும் வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரிகள் சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக மயிலாடுதுறையைச் சேர்ந்த அல்பாசித் என்பவரை சென்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாலை முதல் சோதனைகள் நடந்தன. சந்தேகத்திற்கு உரிய நபர்களின் மறைவிடங்களில் நடத்தப்படும் இந்த சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்கும் உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் தொடர்புடைய நபர்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதே என்.ஐ.ஏ அதிகாரிகளின் நோக்கம் என தகவல்கள் கூறுகின்றன.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக மயிலாடுதுறையைச் சேர்ந்த அல்பாசித் என்பவரை சென்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதம் மற்றும் ஆட்சேர்ப்பு வழக்குகளை என்ஐஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஐஎஸ்ஐஎஸ் ஊக்குவித்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை என்ஐஏ கைது செய்தது.
இந்த வழக்கில் என்ஐஏ விசாரணையில், கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் பயங்கரவாத செயலுக்கு நிதி வழங்க கூட்டு சேர்ந்தது தெரியவந்தது. தீவிரவாதம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஒரு கிளை வழக்கு தனித்தனியாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை என்ஐஏவால் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழிவகுத்தது.
இந்த நிலையில் பஹல்காம் இந்த தாக்குதலுக்கு பின்னால் ‘நாங்கள் தான் இருக்கிறோம்’ என்று ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ என்னும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.’தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா-வின் ஒரு பிரிவாக சொல்லப்படுகிறது.’தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பு ஆன்லைன் மூலம் இளைஞர்களை வேலைக்கு எடுத்தல், ஆயுதங்களை வாங்குதல், போதை பொருள்களை கொண்டு வருதல், தீவிரவாதிகளை ஊடுருவச் செய்தல் போன்ற நாசவேலைகளை செய்துவருகிறது எனவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்ட் அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இந்த அமைப்பின் தலைவரான ஷேக் சஜ்ஜாத் தீவிரவாதி என அறிவித்தது. தற்போது இந்த அமைப்பின் கீழ் தான் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கும் கோவை கார் குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் இருக்கிறதா என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்