Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

10 ஆண்டுகளில் எனக்காக வீடு கட்டவில்லை;டில்லியில் பிரதமர் மோடி உருக்கம்!

Oredesam by Oredesam
January 4, 2025
in செய்திகள்
0
10 ஆண்டுகளில் எனக்காக வீடு கட்டவில்லை;டில்லியில் பிரதமர் மோடி உருக்கம்!
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், திரளாகக் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய மோடி,தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.2025-ம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான வாய்ப்புகளைக் கொண்ட ஆண்டாக இருக்கும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். “இன்று, இந்தியா அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் உலகளாவிய அடையாளமாக நிற்கிறது” என்று பிரதமர் கூறினார்.

இந்த ஆண்டில் நாட்டின் நற்பெயர் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 2025-ம் ஆண்டிற்கான தொலைநோக்குத் திட்டத்தை சுட்டிக் காட்டிய மோடி, இந்தியா உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாறுவதற்கும், இளைஞர்களுக்கு புதிய தொழில்முனைவு வாய்ப்புகளையும்தொழில்முனைவோருக்கான அதிகாரத்தையும் அளிப்பதற்கும், புதிய வேளாண் சாதனைகளைப் படைப்பதற்கும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வாழ்க்கையை எளிதாக்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கும் இந்த ஆண்டு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, மக்களை வாழ்த்திய பிரதமர், இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களில் ஏழைகளுக்கான வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் தொடர்பான திட்டங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு வகையில் புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள அந்த மக்களையும், குறிப்பாக பெண்களையும் அவர் வாழ்த்தினார். குடிசை வீடுகளுக்குப் பதிலாக உறுதியான வீடுகள், வாடகை வீடுகளுக்கு பதிலாக சொந்த வீடுகள் உண்மையில் ஒரு புதிய தொடக்கத்தை அர்த்தப்படுத்துகின்றன என்று அவர் மேலும் கூறினார். மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் சுயமரியாதை, புதிய விருப்பங்கள் மற்றும் கனவுகள் நிறைந்த இல்லத்தின் அடையாளமாக இருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். அவர்களின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க தாம் வந்திருப்பதாக அவர் கூறினார். கடந்த காலத்தில் நெருக்கடி நிலையின் இருண்ட நாட்களை நினைவுகூர்ந்த மோடி, தாமும் தம்மைப் போன்ற பல கட்சித் தொண்டர்களும் அவசர நிலைக்கு எதிரான தலைமறைவு இயக்கத்தின் ஒரு பகுதியாக அசோக் விஹாரில் தங்கியிருந்ததாகக் கூறினார்.

“இன்று ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது” என்று மோடி கூறினார். வளர்ந்த இந்தியாவில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உறுதியான வீடு இருப்பதை உறுதி செய்வதற்கான தீர்மானத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் அவர் கூறினார். இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தில்லிக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். எனவே, குடிசைகளுக்கு பதிலாக உறுதியான வீடுகளை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குடிசைவாசிகளுக்காக கல்காஜி விரிவாக்கப் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகளைத் திறந்து வைக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார். எந்த நம்பிக்கையும் இல்லாமல் பல தலைமுறைகளாக குடிசைகளில் வாழ்ந்த குடும்பங்கள் முதல் முறையாக உறுதியான வீடுகளுக்கு குடிபெயர்ந்தன என்று அவர் கூறினார். இது ஒரு ஆரம்பம் தான் என்று தாம் அப்போது கூறியிருந்ததை அவர் இப்போது நினைவு கூர்ந்தார். இன்று சுமார் 1,500 வீடுகளின் சாவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதாக திரு மோடி குறிப்பிட்டார். “ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்புகள் மக்களின் சுயமரியாதையை மேலும் உயர்த்தும்,” என்று அவர் கூறினார். இன்றைய தினம் பயனாளிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, அவர்களிடையே புதிய உற்சாகமும், சக்தியும் இருந்ததை தாம் உணர்ந்ததாக பிரதமர் கூறினார். வீட்டின் உரிமையாளர் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தமது குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.

டில்லிக்கு முக்கியமான நாள். வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. வீடுகள் வழங்கி 4 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றினேன். எனக்காக வீடு கட்டியிருக்கலாம்; ஆனால் கட்டவில்லை.இது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

தற்போது கூரை இல்லாமல் வசிக்கும் அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு நிச்சயம் கிடைக்கும் என்ற செய்தியை அனைவருக்கும் எடுத்துச் சொல்லுமாறு அவர் கூட்டத்தினரைக் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏழை மக்களின் சுயமரியாதையை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், இதுவே வளர்ச்சியடைந்த பாரதத்தின் உண்மையான சக்தி என்றும் மோடி கூறினார். தில்லியில் சுமார் 3000 புதிய வீடுகள் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். வரும் ஆண்டில் நகரவாசிகளுக்கு ஆயிரக்கணக்கான புதிய வீடுகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இந்தப் பகுதிகளில் ஏராளமான அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர், அவர்கள் வசித்து வந்த வீடுகள் மிகவும் பழமையானவை. புதிய, நவீன வீடுகளின் கட்டுமானம் அவர்களுக்கு மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தை வழங்கும், இது அவர்களின் நல்வாழ்வுக்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். நகரில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் நகரமயமாக்கலின் வெளிச்சத்தில், நரேலா துணை நகரத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதன் மூலம் தில்லியின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மத்திய அரசு மேலும் துரிதப்படுத்தி வருவதாக பிரதமர் அறிவித்தார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

SenthilBalaji-DMK

ஆகஸ்ட்-11 செந்தில் பாலாஜி ஆஜராக சம்மன் அனுப்பிய அமலாக்க பிரிவு! தரமான சம்பவமே இனிதான்..

August 10, 2021
பங்க் கடைகளில் பங்கு..? எழும்பூர் தி.மு.க எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு – பாஜக வினோஜ்செல்வம் பகீர் தகவல்..!

பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது திமுக அரசு FIR.

January 28, 2022
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அமெரிக்காவுக்கு சிலைகளை கடத்துவத்தை தடுக்க சிறப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா !

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அமெரிக்காவுக்கு சிலைகளை கடத்துவத்தை தடுக்க சிறப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா !

July 29, 2024
முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் காவல்துறைக்கு சவால் விட்ட  புரட்சி நாயகி பிக்பாஸ் மீரா மிதுன்!

உதயநிதியால் பெண்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் தி.மு.கவினர்! விழி பிதுங்கி நிற்கும் தி.மு.க வேட்பாளர்கள்!

September 30, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x