ஒரே நாடு ஒரே தேர்தல்! 2024ல் தான் 16 மாநிலங்களுக்கு தேர்தல்! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே எதிர்கட்சிகள் புலம்பல்!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் குறித்து இந்திய நாட்டின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் இந்திய அரசியல் சாசன நாளில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி பேசுகையில் ஒவ்வொரு சில மாதங்களிலும் பல தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் நாட்டின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நடைமுறையில் கொண்டுவந்து நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இரண்டு முறை தேர்தல் நடத்துவதால் இரண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது காலம், பொருள் மற்றும் மக்களின் உழைப்பு ஆகியவை வீணாவதாகவும் அந்த சக்திகள் வீணாவதை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். லோக்சபா, சட்டசபை அதிகாரிகளை உள்ளடக்கிய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோதே மோடி அவர்கள் இதை தெரிவித்து உள்ளார்.

இது மோடி பாஜக அரசின் திட்டம் இல்லை இதுகுறித்து 1960 ல் இருந்தே அவ்வப்போது பலராலும் எழுப்பப்படுவதும் பின்னர் அது மறக்கப்படுவதுமாக இருக்கிறது. 1983ல், தேர்தல் ஆணையம் தன்னுடைய வருடாந்திர அறிக்கையில் ஒரே நேரத்தில் நாடு தழுவிய மத்திய மாநில தேர்தல்களை நடத்துவது குறித்து பரிசீலிக்க பரிந்துரை செய்தது. இதை 1999ம் ஆண்டு சட்டக் கமிசனும் இதை வழிமொழிந்தது. ஆனால் போதிய ஆதரவு அல்லது கருத்து விவாதம் நடக்காத காரணத்தால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

2014 தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க இதை ஒரு வாக்குறுதியாகவே கொடுத்து இருந்தது. 2016 ஆம் ஆண்டு இது குறித்து பேசப்பட்டது. ஆனால் அதை யாரும் விவாதிக்க ஆர்வம் காட்டாததால் அது கிடப்பில் போடப்பட்டது. 2018ஆம் ஆண்டு சட்டக்கமிசன் ஐந்து அரசியல் அமைப்பு திருத்தங்களை செய்தால் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமே என்று கூறியது. இன்று பிரதமர் மோடி இது குறித்து பேசியதால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மீண்டும் விவாதிக்கப்படலாம் என்று பலரும் கருதுகிறார்கள்.இது ஆர் எஸ் எஸ் அமைப்பின் சூழ்ச்சி என்று யாரும் நினைக்க வேண்டாம். அனைத்து கட்சிகளிலும் இதற்கு ஆதரவும் உண்டு எதிர்ப்பும் உண்டு.

வருகிற 2022 ல் கோவா,மணிப்பூர்,பஞ்சாப்,உத்திர பிரதேசம்,உத்தரகாண்ட்,ஹிமாச்சல்,குஜராத்,ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்களில் தேர்தல் நடக்க வேண்டும்.காஷ்மீர் மூன்றாக பிரிக்கப்பட்டுவிட்டது அதில் 2 மாநிலத்தில் தேர்தல் வர வேண்டும்.இப்போது கவர்னர் ஆளுகையின் கீழ் உள்ளது.மீதமுள்ள 7 மாநிலத்தில் 6 பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்

அதே போல,2023 ல் சட்டமன்ற தேர்தல்கள் மேகாலயா, நாகலாந்த்,திரிபுரா,கர்நாடகா, சத்தீஷ்கர்,மத்திய பிரதேஷ்,மிசோரம்,ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 9 மாநிலங்களில் நடக்கவிருக்கிறது.இந்த 9 மாநிலத்தில் 6 மாநிலம் NDA அரசு நடப்பவையாகும். மொத்தமாக 16 மாநிலத்தில் 12 பாஜகவும் அதன் கூட்டணி ஆட்சியும் நடக்குமிடம்.

கொரோனாவை கருத்தில் கொண்டு,நடிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை சிந்தித்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முறையில் 2024 க்கு மொத்தமாக எல்லா மாநிலத்துக்கும் தேர்தலை வைத்துவிட முடியுமா? என ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.2025 ஹரியானா,டெல்லி,மஹாராஷ்டிரா,ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் வரும்.அவற்றையும் இதனோடு இணைத்துவிட முடியும்.தற்போது தேர்தல் நடைபெற்ற 5 மாநிலத்தில் 2 பாஜக மற்றும் அதன் கூட்டணி அரசே உள்ளது. இதன் காரன்னமாக பாஜக ஒரு வியூகத்தினை அமைத்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது, மேலும் தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் என்பதால் இதை செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இதை எதிர்பார்க்காத எதிர் கட்சிகள் என்ன செய்வதென்று புரியாமல் முழித்து வருகிறார்கள்.

Exit mobile version