தற்போது உலகம் முழுவதும் பேசபப்டுவது இந்தியா பாகிஸ்தானை எப்படி எப்போது தாக்கபோகிறது என்ற பேச்சுதான். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.இதற்கிடையே பாகிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்துள்ளது தலிபான்கள் பாகிஸ்தானை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய இடியை
இறக்கியுள்ளது
2021ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்திற்கு இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறித்து இந்த நிலையில், சென்ற மாதம் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் நான்கு இடங்களில் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 46 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டனர். இன்னொரு குடும்பத்தில் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் 7 கிராமங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தலிபான் அரசாங்க துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிட்ராத் தெரிவித்திருந்தார்.மேலும் பாகிஸ்தானை நோக்கி தாக்குதல் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் அதன் மேற்கு எல்லைப் பகுதிகளில் மீண்டும் தீவிரவாத வன்முறையுடன் போராடி வருகிறது. தாலிபான்கள்
இந்த நிலையில், கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பஜாயுர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனைச் சாவடியை கைப்பற்றியதாக தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும். அந்த இடத்தில் தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு வெளியிட்டுள்ளது.பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் வடக்கு வஜிரிஸ்தானில் பாகிஸ்தான் தலிபான் அமைப்பான தெரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பை சார்ந்த பஷ்தூன் வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ முகாமை தாக்கி 10க்கும் மேற்ப ட்ட பாகிஸ்தான் ராணுவத்தின ரை மரணமடைய செய்து இருக் கிறார்கள். இந்த பஷ்தூன் பழங்குடியினர்தான் 1947 அக்டோபரில் நடைபெற்ற முதல் காஷ்மீர் போரில் பாகிஸ்தானின் முதல் நிலை வீரர்களாக இந்திய ராணுவத்தைஎதிர்த்து நின்றார்கள்.இவர்களின் ஆக்ரோசமான சண்டையால்தான் முதல் காஷ்மீர் போர் 15மாதம் வரை நீடித்தது.இந்த பஷ்தூன்களால் தான் இந்தியா காஷ்மீரின் ஒரு பகுதி யை பாகிஸ்தானுடன் இழக்க வேண்டிய நிலை உருவானது.
காலம் விசித்திரமானது.75 வருடங்களுக்கு முன் எந்த பஷ்தூன்கள் இந்தியாவிற்கு எதிராக சண்டை போட வந்தார்களோ அவர்கள் இப்பொழுது பாகிஸ்தானுக்கு எதிராக சண்டை போட்டுகொண்டு இருக்கிறார்கள்.இது தான் நேரு மாமாவிற்கும் மோடிக்கும் உள்ள வித்தியாசம்.இந்த பஷ்தூன்களின் தலைவராக இருக்கும் முப்தி நூர் வாலி மசூத்தை இந்தியா தான் இயக்கி கொண்டு இருக்கிறது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் நேற் று கூறி இருக்கிறார்.பாகிஸ்தான் இந்தியாவுடன் ஒரு பெரிய போரை நடத்தினால் கண்டிப்பாக பாகிஸ்தான் 5 பகுதிகளாக உடைந்து நிற்கும். இந்த பஷ்தூன்களின் கைபர் பக்துன்வா பகுதி ஆப்கானிஸ்தான் உடன் இணைந்து விடும்.என்கிறார்கள்.
இது ஒருபக்கம் என்றால் சென்ற மதம் பலுச்சிஸ்தான் மாநிலத்தின் நவுஷ்கி என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் வந்த கான்வாய் மீது பலுச்சிஸ்தான் விடுதலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். குவெட்டாலில் இருந்து டஃப்டானுக்குச் சென்ற பாதுகாப்புப் படையினரின் கான்வாயில் 7 பேருந்துகள் மற்றும் 2 வாகனங்கள் வந்துள்ளன. இந்த தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் 22 பேர் படுகாயமடைந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், 90 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலுச்சிஸ்தான் விடுதலைப் படையினர் கூறியுள்ளனர்.
பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகள் கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனாலும், இந்தப் பகுதி போதிய வளர்ச்சி இல்லாமல் உள்ளது. எனவே, இப்பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசு மற்றும் அதிகாரிகள் மீது அதிருப்தியில் உள்ளனர். பலுச்சிஸ்தான் பல ஆண்டுகளாகவே பாதுகாப்புப் பற்றாக்குறையால் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து பலுச்சிஸ்தான் விடுதலையடைய வேண்டி பலுச்சிஸ்தான் விடுதலைப்படை உள்ளிட்ட பல ஆயுதக்குழுங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கு இவர்களும் நெருக்கடி கொடுப்பார்கள். வரும் காலத்தில் பாகிஸ்தான் சிறு சிறு துண்டுகளாக பிளக்கப்பட்டு சுவடே இல்லாமல் போகும் என உலக அரசியல் வல்லுநர்கள் கணித்துளார்கள்