ஜி.எஸ்.டிக்குள் வரும் பெட்ரோல் டீசல் விலை ! மத்திய அரசு அடிக்கும் மெகா சிக்ஸர்! நிதி அமைச்சர் கசியவிட்ட தகவல்!

OREDESAM

OREDESAM

இது நாள் வரை ஜிஎஸ்டிக்கு வெளியே இருந்த டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். இது வரை தர்மேந்திர பிரதான் (முன்னாள் பெட்ரோலிய அமைச்சர்) இதை பற்றி பேசி வந்திருந்தாலும், இம்முறை நிதி அமைச்சரே அந்த விவகாரம் பற்றி பேசியிருப்பதால் மத்திய அரசு முடிவெடுத்து விட்டதாகவே டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றார்ள்.

சர்வதேச சந்தையில் கச்சா விலையும் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இனி டீசல் பெட்ரோல் விலை ஏறுமுகமாக இருக்க வாய்ப்பு. டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர, ஜிஎஸ்டி குழுவின் 75% அனுமதி பெற வேண்டும்.

பெரும்பாலும் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் இருப்பதால், இது நிறைவேற வாய்ப்பு. இது நாள் வரை டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வராததற்கு காரணம் தமிழகம் உட்பட பல மாநிலங்களின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த வரிகளில் பெரும் பகுதி மாநிலங்களுக்கே சென்றாலும், ஆர். எஸ் பாரதி ஊடகங்கள் மத்திய அரசையே குற்றம் சாட்டி வந்தன. ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால், இனி எவரும் மத்திய அரசின் மீது பழி போட இயலாது.

மத்திய அரசுக்கு கிடைத்த வரியிலிருந்து கிட்டத்தட்ட ரூ 15 லட்சம் கோடி உள்நாட்டு கட்டுமானத்தில் செலவிட்டுள்ளது. அவை இப்போது தேசிய சொத்துகள்.

ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால், அடுத்த 5 மாநில தேர்தல்களிலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்.

டீசல் பெட்ரோல் வரி & மது ஆகியவற்றை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் விடியல் அரசு துண்டை தலையில் போட்டுக் கொள்ள வேண்டியதுதான். தேர்தல் வாக்குறுதிகளை – இலவசங்களை – ஒரு போதும் கொடுக்க வாய்ப்பில்லை ராஜா..

Exit mobile version