பாட்டாளி மக்கள் கட்சியை மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மாமல்லபுரம் அடுத்துள்ள திருவிடந்தை பகுதியில் சித்திரை முழு நிலவு மாநாடு ஆனது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
🔸 சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி
🔸 வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
🔸 அனைத்து சமுதாயத்தினருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
🔸 பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப 2 சதவீதம் உயர்த்த வேண்டும்.
🔸 மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
🔸 கிரீமிலேயர் முறையை உடனடியாக நீக்க வேண்டும்.
🔸 தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
🔸 அரசுத்துறையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
🔸 உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பணிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்.
🔸 பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கிட வழங்க வேண்டும்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவுள்ளனர். இதனால் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
