Tuesday, July 8, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

கொரோனா வைரஸை எதிர்கொள்ள மத்திய அரசு சித்த மருத்துவர்களின் ஆலோசனைகள்.

Oredesam by Oredesam
May 18, 2020
in கொரோனா -CoronaVirus
0
நோய் எதிர்ப்பு திறனுக்கு மூலிகை மருந்து  வழிகாட்டியை  வெளியிட்டது மத்திய அரசு !
FacebookTwitterWhatsappTelegram

கொரோனா வைரஸை அழிப்பதற்கோ உடலில் தொற்றாமல் முன்கூட்டியே தடுப்பதற்கோ மருந்துகள் இல்லாத நிலையில் நமக்கு இருக்கும் ஒரே வழி நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதே ஆகும்.  நோய் எதிர்ப்பாற்றல் திறம்பட செயல்பட்டால் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பை பெருமளவில் குறைத்துவிட முடியும்.  உணவு, மருந்து மற்றும் உடற்பயிற்சி மூலம் நமது நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க முடியும்.  சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான பண்டைய மருத்துவ முறை ஆகும்.  சித்தர்கள் கூறிய மருந்துகள், வாழ்க்கை முறைகள், மூச்சுப் பயிற்சிகள் முதலானவை எல்லாம் முறையாகத் தொகுக்கப்பட்டு தற்போது இந்திய மருத்துவ முறைக்ளில் ஒன்றாக சித்த மருத்துவம் விளங்கி வருகிறது.  ஆயுஷ் அமைச்சகத்தின் ஒரு மருத்துவ முறையாகவும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. 

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பல முறைகளிலும் நமது உடலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.  ஆயுஷ் அமைச்சகமும் இந்த தொற்றுக் காலத்தில் இந்திய மருத்துவ முறைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.  தமிழக அரசும் ஆரோக்கியம் என்ற திட்டத்தின் மூலம் ஆயுர்வேத, சித்த மருந்துகளை பரிந்துரைத்து உள்ளது.  நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் இரண்டும் சித்த மருத்துவ முறையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் மருந்துகள் ஆகும்.

READ ALSO

அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்! இதெல்லாம் பெருமையா முதல்வரே?

கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!

இந்தியாவில் சித்த மருத்துவத்திற்கான உயர்நிலை அமைப்பாக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (CCRI) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.  மருந்து ஆராய்ச்சி மற்றும் மூலிகை ஆராய்ச்சிகளில் இந்தக் குழுமம் ஈடுபட்டு உள்ளது.  இந்தக் குழுமத்தின் கீழ் 8 மருத்துவ நிலையங்கள் / ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  சென்னை, மேட்டூர், பாளையங்கோட்டை என தமிழ்நாட்டில் மட்டும் 3 மையங்களும் திருவனந்தபுரம், பெங்களூர், புதுச்சேரி, திருப்பதி, புதுடெல்லி ஆகிய இடங்களில் 5 மையங்களும் செயல்படுகின்றன.

கொரோனா வைரசை எதிர்கொள்வதில் சித்த மருத்துவத்தின் பங்கு என்னவென்று புதுச்சேரியில் உள்ள மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய மருத்துவர்களிடம் கேட்டோம்.  அவர்களின் கருத்துகள் கீழே தொகுத்துத் தரப்படுகின்றன.

டாக்டர் ஆர்.ராஜேந்திரகுமார், ஆராய்ச்சி அலுவலர்(சித்தா) / நிர்வாக அதிகாரி – நம்மிடையே மறந்து போன நறுமணப் புகை போடுதல், ஆவி பிடித்தல் ஆகிய இரண்டையும் நாம் திரும்பவும் கடைபிடிக்க வேண்டும்.  வீடுகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குங்கிலியப் பவுடர் அல்லது நொச்சி இலைகளைப் பயன்படுத்தி புகை போட வேண்டும்.  இது சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளைக் கொல்வதற்கும் தாக்கத்தைக் குறைப்பதற்கும் உதவும். அதே போன்று தினமும் நொச்சி, தும்பைப் பூ / இலை, விரலி மஞ்சள், கற்பூரவள்ளி இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொதிநீரில் போட்டு ஆவி பிடிக்க வேண்டும்.  இது சுவாச மண்டலத்தை சீராக்கும்.

டாக்டர் இர.இரத்தினமாலா, ஆராய்ச்சி அலுவலர்(சித்தா) – கடுமையான கோடைக்காலத்தில் நாம் கொரோனா வைரசோடு போராடிக் கொண்டு இருக்கிறோம்.  இந்த சமயத்தில் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும்.  கோடை வெப்பத்தால் தலைபாரம், நீரேற்றம், உடல்சோர்வு, தலைவலி ஆகியன ஏற்படும்.  கற்பூரத்தையும் சீரகத்தையும் துணியில் பொட்டலமாகக் கட்டி அடிக்கடி முகர்ந்து வரலாம். 

டாக்டர் பா.சித்ரா, ஆராய்ச்சி அலுவலர்(சித்தா) – கோவிட்-19க்கு சித்த மருத்துவத்தில் என்ன மருந்து சொல்லப்பட்டு இருக்கிறது என்ற கேள்வி பொதுவாக கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  கொரோனா வைரசுக்கு என்று தனிப்பட்ட முறையில் மருந்து ஏதும் இல்லை.  நோய்தடுப்பு மருந்தாக நிலவேம்புக் குடிநீரை காலை மற்றும் இரவு என இரண்டு வேளை 14 நாட்கள் குடிக்கலாம்.  நோய் அறிகுறிகள் தெரிந்தால் கபசுர நீர் குடிக்கலாம்.  தொற்று ஏற்பட்டது உறுதியானால் இணை மருந்தாக ஆடாதொடை மணப்பாகு எடுத்துக் கொள்ளலாம்.  எதுவாயினும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உட்கொள்ள வேண்டும்.

டாக்டர் அ.ஃபரிதா, இணை ஆராய்ச்சியாளர் – சித்த மருத்துவம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக யோகப் பயிற்சிகளையும் ஆசனங்களையும் பரிந்துரைத்து உள்ளது.  நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பதால் தூக்கமின்மை, செரிமானமின்மை மற்றும் மன உளைச்சல் ஆகியன ஏற்படும்.  வஜ்ஜிராசனம் போன்ற எளிய ஆசனங்களையும் ஓங்காரப் பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளையும் செய்தால் உடலும் மனமும் கொரானாவை எதிர்க்க தயார் நிலையில் இருக்கும்.

டாக்டர் லாவண்யா, ஆராய்ச்சி அலுவலர்(சித்தா) – உணவே மருந்து; மருந்தே உணவு என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படை ஆகும்.  காலையில் காஃபி, தேநீர் குடிப்பதற்குப் பதில் சித்தரத்தை அல்லது துளசி தேநீர் / சுக்குக் காஃபி குடிக்கலாம்.  முற்பகலில் இஞ்சித் தேனூறல் மிகவும் நல்லது.  தமிழர்களின் வாழ்வில் ரசம் மிகவும் இன்றியமையாத உணவாகும்.  தூதுவளை, வேப்பம்பூ போன்றவைகளால் செய்யப்படும் ரசம் உடலுக்கு மிகவும் நல்லதாகும்.  மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு முசுமுசுக்கை, கல்யாண முருங்கை, வாதநாராயணன் போன்ற இலைகளைக் கொண்டு தின்பண்டங்கள் செய்து தரலாம்.

டாக்டர் காயத்ரி குணாளன், ஆராய்ச்சி அலுவலர்(உயிர் வேதியியல்) – கொரோனா வைரசுக்காக யாரும் பயப்படத் தேவையில்லை.  மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள பரிந்துரைகளை பின்பற்றினாலே போதும்.

டாக்டர் நித்யா, ஆராய்ச்சி அலுவலர்( நோயியல்)– கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவிகிதம் நபர்களுக்கு தானாகவே குணமாகி விடுகிறது.  ஆறில் ஒருவருக்கு மட்டுமே மருத்துவக் கண்காணிப்புத் தேவைப்படுகிறது.  இந்த நேரத்தில் தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் ஆகியவற்றைப் பார்த்து எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.

கொரோனா வைரஸ் நமது உடல் மீதான அக்கறையை அதிகரித்துள்ளதோடு பாரம்பரிய உணவு மற்றும் பாரம்பரிய மருத்துவம் மீது நமது கவனத்தைக் குவித்துள்ளது. உடலுழைப்பின் அவசியம் பல வகைகளில் நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கை முறையின் பாதகமான அம்சங்களைக் கண்டறிந்து அவற்றில் இருந்து மீள்வதுதான் கொரோனா கற்றுத் தந்த பாடமாக இருக்க வேண்டும்.

டாக்டர் ராஜேந்திர குமார், ஆராய்ச்சி அலுவலர் (சித்தா) & நிர்வாக அதிகாரி

டாக்டர் அ.ஃபரிதா, ஆராய்ச்சி அலுவலர் (சித்தா)

டாக்டர் பா.சித்ரா, ஆராய்ச்சி அலுவலர் (சித்தா)

டாக்டர் இ.நித்யா, ஆராய்ச்சி அலுவலர் (நோயியல்)

டாக்டர் அ.லாவண்யா, ஆராய்ச்சி அலுவலர் (சித்தா)

டாக்டர் இர.இரத்தினமாலா, ஆராய்ச்சி அலுவலர் (சித்தா)

டாக்டர் காயத்ரி குணாளன், ஆராய்ச்சி அலுவலர் (உயிர் வேதியியல்)

ShareTweetSendShare

Related Posts

அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்!  இதெல்லாம் பெருமையா முதல்வரே?
கொரோனா -CoronaVirus

அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்! இதெல்லாம் பெருமையா முதல்வரே?

November 29, 2021
கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த  பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!
இந்தியா

கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!

November 14, 2021
இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை.
கொரோனா -CoronaVirus

மோடி அரசின் இலவச தடுப்பூசி ! தமிழகத்தில் ஒரே நாளில் 22.52 லட்சம் பேர் இலவச தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள் !

October 11, 2021
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்தியா

ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மாபெரும் மோடி சாதனை.

August 28, 2021
oredesam Vanathi Srinivasan
இந்தியா

பா.ஜ.க சார்பில் 4 லட்சம் பேர் கொண்ட ‘சுகாதார தன்னார்வலர்கள் படை’ – வானதி சீனிவாசன் MLA

August 9, 2021
டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து நடக்குமா?
உலகம்

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து நடக்குமா?

July 29, 2021

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!

சைலண்டாக சாதிக்கும் பாஜக அஸ்ஸாமில் ஒரே நாளில் 246 தீவிரவாதிகள் சரண் !

January 28, 2022
133-வது நாள் – 20.86 கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பு டோஸ்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

133-வது நாள் – 20.86 கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பு டோஸ்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

May 29, 2021
தமிழக மக்களுக்கு ஷாக் மேல் ஷாக்!  நீட் பிரச்னை முடியவில்லை அதற்குள் மின்கட்டண பிரச்சனை!  விழிபிதுங்கும் திமுக!

திராவிட மாடலில் என்றைக்காவது ஒரு தலித் முதல்வராக முடியுமா ?

May 1, 2022
Modi Nirmala

நிர்மலா சீதாராமன் போட்ட உத்தரவு … அதிர்ந்த அரசியல் கட்சிகள்… முக்கிய முடிவை எடுத்த மத்திய அரசு….

February 1, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
  • காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !
  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.
  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x