உதயநிதி குறித்த கேள்வி … இறங்கி அடித்த வானதி ..கோவிலை இடித்துதான் பாபர்மசூதி கட்டப்பட்டது.. பட்டாசு போல் வெடித்த பதில்கள்

Vanathi Srinivasan

Vanathi Srinivasan

கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதியே கட்டப்பட்டது எனக் கூறிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தரமான பதிலை கொடுத்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சனாதன தர்மத்தின் ஒரு பகுதிதான் ஜல்லிக்கட்டு கூறினார்.

வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது : அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் செவ்வாய்கிழமை ராமர் விக்ரஹத்தின் பிராணப்பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இந்நிலையில், அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்

இதனை தொடர்ந்து கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் திருக்கோவிலுக்கு சென்ற பாஜக எம்.ல்.ஏ வானதி சீனிவாசன் ஆலயத்தினில் தூய்மை பணியினை மேற்கொண்டார் அதைத்தொடர்ந்து, அவர் சுவாமி தரிசனமும் செய்து வழிபட்டார் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “வருகின்ற ஜனவரி 22 ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கான அட்சதை, அழைப்பிதழ்கள் கோடிக்கணக்கான வீடுகளுக்கு சென்று வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அவற்றை ராமர் வந்ததை போல மக்கள் பக்தி பரவசத்துடன் பெற்று கொண்டு, ராமர் கோவிலுக்கு வர சங்கல்பம் எடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பா.ஜ.கவினர் ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். கும்பாபிஹேக நாளான்று வீடுகளில் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் விழா போல கொண்டாட உள்ளனர். நாடு முழுவதும் ஆன்மிக பேரலை எழுந்துள்ளது. அடிமை சின்னத்தை மாற்றி கலாச்சார நாயகனுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும் பொன்நாள் பாரத வரலாற்றின் திருநாள். அதனை நாடு கொண்டாட தயாராகி வருகிறது.

சென்னையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா குறித்த கேள்விக்கு பதிலளித்தஉதயநிதி ஸ்டாலின், அயோத்திராமர் கோயில் திறப்பதற்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்றார் இதுகுறித்த கேள்விக்கு

பதிலளித்த வானதி சீனிவாசன் மசூதி கோவிலை இடித்து தான் கட்டப்பட்டு இருந்தது.இதை உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. நியாயப்படி அந்த இடத்தை உரிமையாளரிடம் தான் ஒப்படைக்க வேண்டும். அது தான் நடந்துள்ளது. முதலமைச்சர் ராமர் கோயில் அழைப்பிதழை நேரில் வாங்கவில்லை. ஆனால் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அழைப்பிதழை வாங்கி, அயோத்திக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். தகப்பனார் அரசியல் வேறு. மனைவி அரசியல் வேறு. மகன் அரசியல் வேறு என வேறு வேறு அரசியல் வழியில் செல்கின்றனர். ராமர் கோவிலுக்கு ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்வது போல ராமர் பக்தர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

காவி திருவள்ளுவர் குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன் : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமய அடையாளம் இல்லாத திருவள்ளுவர் வரையப்பட்டது.பல்வேறு ஆன்மிக மடங்களில் சமய அடையாளம் உள்ள திருவள்ளுவர் படம் உள்ளது. அதனை தான் பாஜக எடுத்து பயன்படுத்துகிறது. திருவள்ளுவர் சமய‌ சார்பற்றவர் என்றால், திருக்குறளில் எத்தனை இடங்களில் விஷ்ணு, லட்சுமி பற்றி வந்துள்ளது தெரியவில்லையா? திருக்குறளை அவர்கள் ஒழுங்காக படிக்கவில்லையா? தமிழகத்தில் தாமரை மலர்ந்து 4 பேர் சட்டமன்றத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் ஆளுங்கட்சியாக வருவதை லட்சியமாக கொண்டுள்ளன. நாங்கள் எங்கள் கட்சியல வளர்க்க வேலை செய்கிறோம்.

ஜல்லிக்கட்டு குறித்த கேள்விகளுக்கு பதில் : ஜல்லிக்கட்டு மஞ்சள் விரட்டு அனைத்தும் கோவிலோடு தொடர்புடையது. அதனை சு.வெங்கடேசனால் மறுக்க முடியாது. சாமி கும்பிடாமல் காளைகளை அவிழ்த்து விடுவதில்லை. மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து கலாச்சாரத்தை சீரழிப்பதை திமுக, கம்யூனிஸ்ட்கள் வேலையாக கொண்டுள்ளனர். கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள்தனம்.

ஜல்லிக்கட்டு சனதான தர்மத்தின் ஒரு பகுதி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம். அடிக்கடி தேர்தல் வருவதால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாது. அமைச்சர்களின் நேரம் தேர்தலில் செலவாகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தலை திமுக மறுப்பது சரியாக வராது‌. எப்படி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என கருத்துகளை சொல்லுங்கள். விவாதிப்போம். அரசியலமைப்பு சட்ட அதிகாரப் படி ஆளுநர் வேலை செய்கிறார். அனைத்து மக்களும் சமமாக பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் மதம், நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அரசு அனைத்து மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Exit mobile version