Wednesday, June 18, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

வயநாட்டில் பிரியங்காவின் வெற்றிக்காக,ராஜிவ்காந்தி கொலையை வைத்து அனுதாபம் தேடுகிறார் ராகுல்காந்தி-வானதி ஆவேசம்.

Oredesam by Oredesam
November 5, 2024
in அரசியல்
0
வயநாட்டில் பிரியங்காவின் வெற்றிக்காக,ராஜிவ்காந்தி கொலையை வைத்து அனுதாபம் தேடுகிறார் ராகுல்காந்தி-வானதி ஆவேசம்.
FacebookTwitterWhatsappTelegram

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும்,பாஜக தேசிய மகளிர் அணித்தலைவருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதல்,நளினியை சந்தித்த பிரியங்கா, ராஜிவ் காந்தியோடு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்?

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் தனது சகோதரி பிரியங்கா காந்தியை ஆதரித்து நவம்பர் 3-ம் தேதி பிரசாரம் செய்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, “எனது தந்தை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய பெண்ணை நேரில் சென்று சந்தித்து கட்டிப்பிடித்துக் கொண்டவர் பிரியங்கா காந்தி. நளினியை சந்தித்து விட்டு வந்த பின்பு என்னிடம் பேசிய பிரியங்கா மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். நளினி மீது பரிவு காட்டியவர்” என கூறியிருக்கிறார்.

READ ALSO

மருத்துவர்கள் விஷயத்திலும் பொய் கூறுவதா-அண்ணாமலை ஆவேசம்.

தமிழகத்தில் உள்ள இந்துக்கள் கோவில் சொத்துக்களை பாதுகாக்க இதை செய்யவேண்டும் அண்ணாமலை கோரிக்கை !

ஆனால், சிறையில் சந்தித்த பிரியங்கா தன் மீது கோபத்தை கொட்டியதாக நளினி பதிவு செய்திருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் பா. ஏகலைவன் தொகுத்து, யாழ் பதிப்பகம் வெளியிட்ட,
‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற நூலில் வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி தன்னை சந்தித்தபோது நடந்ததை நளினி பதிவு செய்துள்ளார்.
அதில், ‘ராஜீவ் கொலை வழக்கு குறித்து நான் கூறிய தகவல்களைக் கேட்டு பிரியங்கா கோபத்தின் உச்சிக்கு சென்றார்.

அவரது கோபக் கொந்தளிப்பு எனக்கு நடுக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து எதிர்ப்பு கேள்விகளை முன்வைத்தபடியே கோபத்தை கொட்டினார். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கழித்து என்னைத் தேடி வருவானேன் என்ற காரணமும் நோக்கமும் அரசியல் பின்னணி கொண்டதே. அப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கு எங்கள் சந்திப்பை பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கலாம்” என நளினி கூறியிருக்கிறார்.

நளினியின் புத்தகம் குறித்து 2016 நவம்பர் 22ல் ‘பி.பி.சி. தமிழ்’ வெளியிட்ட விமர்சன கட்டுரையிலும் இந்த தகவல்கள் உள்ளன.
உண்மை இவ்வாறு இருக்க, “தந்தை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி மீது பரிவு காட்டியவர் பிரியங்கா” என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பொய் சொல்லியிருக்கிறார். தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்பதற்கு வயநாட்டில் ராகுல் காந்தியின் பேச்சே உதாரணம்.

“வேலூர் சிறையில் தன்னை பிரியங்கா காந்தி சந்தித்தது, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக இருக்கலாம்” என்று நளினி தனது புத்தகத்தில் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். வயநாட்டில் ராகுல் காந்தியின் பேச்சு இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

1991 மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது பெரும் துயரமான சம்பவம். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் எந்த அளவுக்கு வருத்தமும், வேதனையும் கொண்டிருந்தார் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

ஆனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை தங்களது அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பயன்படுத்துகின்றனர் என்பது வயநாட்டில் ராகுல் காந்தியின் பேச்சு உறுதிப்படுத்தி விட்டது. அரசியல் அவலம் இது.
தந்தை ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் சிறைக்கு சென்று நளினியை சந்தித்த பிரியங்கா, ராஜிவ் காந்தி உடன் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 16 குடும்பத்தினரையோ, அல்லது கொலை நடந்த போது படுகாயம் அடைந்தவர்களையோ சந்திக்கவில்லை.

அந்த காயத்தின் வடுக்களோடு இன்றும் வாழ்பவர்கள் மீது பரிவு காட்டவில்லை.சோனியா காந்தி இப்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அவரது மகன் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். இப்போது ராகுலின் சகோதரி வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
அது மட்டுமல்லாது பிரியங்கா காந்தியின் மகனையும் அரசியலுக்கு கொண்டுவர தயார் படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியை ஒரு குடும்பத்துக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா எம்.பியாக வேண்டும் என்பதற்காக, மக்களின் உணர்வுகளை தூண்டி விடுகிறார். தன் தந்தையின் கொலையையும் அதற்கு பயன்படுத்துகிறார். வெட்கக்கேடு.என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Related Posts

Annamalai
அரசியல்

மருத்துவர்கள் விஷயத்திலும் பொய் கூறுவதா-அண்ணாமலை ஆவேசம்.

June 11, 2025
Annamalai IPS
அரசியல்

தமிழகத்தில் உள்ள இந்துக்கள் கோவில் சொத்துக்களை பாதுகாக்க இதை செய்யவேண்டும் அண்ணாமலை கோரிக்கை !

June 11, 2025
ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்கமாட்டீர்களா? மத்தவங்க இளிச்சவாயர்களா- ஊடகங்களை கிழித்த கிருஷ்ணசாமி !
அரசியல்

திமுக சொல்லும் வசனங்களை எழுதாவிட்டால் நீதிபதிகள் மீது ஜாதி சாயம் பூசுவதா-டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம் !

May 22, 2025
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
அரசியல்

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

May 11, 2025
Annamalai
அரசியல்

ஏமாற்றிய ஸ்டாலின்…ஆதராத்தோடு அண்ணாமலை போட்ட போடு.. விவசாயிகள் மத்தியில் ஏற்பட்ட தாக்கம்!

May 2, 2025
annamalai stalin
அரசியல்

ஸ்டாலின் கழுத்துக்கு மேல் கத்தி பொன்முடி,செந்தில்பாலாஜி பதவி பறிப்பு ! அண்ணாமலை ஆவேசம் !

April 28, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

எடப்பாடி அரசின் மன மாற்றத்துக்கு காரணமென்னவோ…?

October 1, 2020
நீட் தேர்வு எழுத ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்.. உதயநிதிக்கு கிடைத்த பெரிய ஷாக்.. இதுவும் போச்சா?

திருவண்ணாமலையில் உதயநிதி நடத்தியது ‘கிரி’வலமா? ‘சரி’வலமா?சனாதன தர்மத்திற்கான பரிகாரமா ? பாஜக நிர்வாகி கேள்வி.

October 19, 2024
பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம்! பா.ம.க நிறுவனர் இராமதாஸ்!

பழனியில் பாலியல் புகாரைக் காவல்துறை வாங்க மறுத்திருப்பது தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்! ராமதாஸ் சுளீர்

July 11, 2021
அயோத்தியில் ராம் கோவில் கட்டுமானத்தை ஆரம்பித்ததை கண்டித்து பாகிஸ்தான் அறிக்கை வெளியிடுகிறது.

அயோத்தியில் ராம் கோவில் கட்டுமானத்தை ஆரம்பித்ததை கண்டித்து பாகிஸ்தான் அறிக்கை வெளியிடுகிறது.

May 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?
  • 9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!
  • மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!
  • ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x