சாலை விபத்தில் உதவி செய்பவர்களை காக்க புதிய விதிமுறைகள் வெளியீடு.

சாலை விபத்துக்களில் உதவி செய்யும் கருணை உள்ளம் கொண்டவர்களை பாதுகாப்பதற்கான விதிமுறைகளைமத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த விதிமுறைகள்உதவி செய்பவர்களுக்கான உரிமைகளை வழங்குகிறது. விபத்துக்களில் உதவி செய்பவர்கள் மதம்நாடுஜாதி அல்லது பாலினம் என எந்த வேறுபாடும் இன்றி மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என அந்த விதிமுறைகளில் விரிவாக கூறப்பட்டுள்ளது. உதவி செய்தவரிடம் எந்த போலீஸ் அதிகாரியோ அல்லது மற்றவர்களோபெயர்அடையாளம்முகவரி அல்லது வேறு எந்த விவரத்தையோ  கட்டாயப்படுத்தி கேட்க கூடாது எனவும்ஆனால்அவர் தானாகமுன்வந்து அவரைப் பற்றிய தகவலை தெரிவிக்கலாம் எனவும் அந்த விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டத் திருத்தம்  2019-ல் சேர்க்கப்பட்டுள்ள  134 ஏ பிரிவில் உதவி செய்பவர்களுக்கான பாதுகாப்பு’  விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.  இதில் உதவி செய்வோருக்கான உரிமைகள் அடங்கிய சாசனத்தை,  ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையும்ஆங்கிலம்இந்தி மற்றும் உள்ளூர் மொழியில்நுழைவாயில் பகுதி மற்றும் இணையதளத்தில்  வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்உதவி செய்தவர்  தானாக முன்வந்துவிபத்து வழக்கில் சாட்சியாக மாற ஒப்புக் கொண்டால்அவரிடம் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி விசாரிக்க வேண்டும். 

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தில்சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய பிரிவின் கீழ்,  விபத்தில் சிக்கியவர்உதவி செய்தவரின் கவனக்குறைவால் உயிரிழந்தால் கூட எந்தவித குற்றநடவடிக்கையையும் சந்திக்க தேவையில்லை.

Exit mobile version