Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

ஐயா விட்றாதீங்க… நீங்கதான் இனி எல்லாமே… காப்பாத்துங்க மோடியிடம் சரணாகதி அடைந்த மாலத்தீவு !

Oredesam by Oredesam
October 14, 2024
in உலகம்
0
ஐயா விட்றாதீங்க… நீங்கதான் இனி எல்லாமே… காப்பாத்துங்க மோடியிடம் சரணாகதி அடைந்த மாலத்தீவு !
FacebookTwitterWhatsappTelegram

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் மாலத்தீவுக்கு 3000 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. இது உலக அரங்கில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னசா சின்ன தீவுக்கு நிதி கொடுப்பது எப்படி உலக அரங்கில் பேசுபொருளாகும் என அனைவரும் கேட்கலாம். தற்போது சிறிய நாடுகள் தான் உலக போருக்கே வித்திட்டு வருகின்றது.மாலத்தீவுக்கு இந்தியா நிதி கொடுத்தது ராஜ தந்திரமாக பார்க்கப்படுகிறது.

மாலத்தீவில் கடந்த நவம்பர் மாதம், அதிபர் பதவிக்கு போட்டியிடும் போது,‘இந்தியா அவுட்’ பிரச்சாரத்தை முகமது முய்சு முன்வைத்தே தேர்தலைச் சந்தித்தார். கடந்த டிசம்பரில், மாலத்தீவில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியப் படைகளை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வைத்தார்.மாலத்தீவின் முந்தைய அரசாங்கங்கள் இந்தியாவிற்கு நெருக்கமாக இருந்த நிலையில், முய்சுவின் இந்த கொள்கை இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

மாலத்தீவில் இந்தியா நீண்ட காலமாக செல்வாக்குச் செலுத்தி வருகிறது. மாலத்தீவில் இருந்து இந்தியப் பெருங்கடலின் கணிசமான பகுதியை இந்தியாவால் கண்காணிக்க முடிந்தது.ஆனால், முய்சு சீனாவுடன் மாலத்தீவின் உறவை மேம்படுத்த விரும்பினார். இதற்கு முன் இருந்த அரசாங்கங்கள் பின்பற்றிய பாரம்பரிய கொள்கையை மாற்ற விரும்பினார். மாலத்தீவின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி லட்சத்தீவின் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர்மோடியை வசைபாடினார்கள்
இதற்குப் பதிலடியாக, மாலத்தீவைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் இந்தியர்கள் கோரிக்கை வைத்தனர். இதன் விளைவாக, மாலத்தீவின் சுற்றுலாத்துறை 150 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பெரும் இழப்பை சந்தித்தது.

கடந்த பிப்ரவரி மாதம், மாலத்தீவில் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் நங்கூரமிட அதிபர் முகமது முய்சு அரசு அனுமதி வழங்கியது. இப்படி, இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வந்த முகமது முய்சு மீண்டும் மாலத்தீவின் அதிபராக வெற்றிபெற்றார்.மாலத்தீவில் அதிபராகும் தலைவர்கள், அதிபரானதும் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வரும் பாரம்பரியத்தை அதிபர் முகமது முய்சு மீறினார். கூடுதலாக, மாலத் தீவின் அதிபரானதும் துருக்கிக்கும் சீனாவுக்கும் முகமது முய்சு பயணம் மேற்கொண்டார். அங்கு உதவி கேட்டுள்ளார் அனால் கைவிரித்து விட்டார்கள்.

இந்தச் சூழலில்,மாலத் தீவு, வெறும் ஒன்றரை மாதத்துக்கு மட்டுமே போதுமான அளவில் அந்நிய செலாவணி கையிருப்பை வைத்திருக்கிறது. 440 மில்லியன் அமெரிக்க டாலராக அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும், பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது மாலத்தீவு.

இந்தியாவின் பொருளாதாரத்தின் சக்தியையும், இந்திய நடுத்தர வர்க்கத்தின் செல்வாக்கையும் குறைத்து மதிப்பிட்டதன் விளைவுகளை மாலத்தீவு நன்கு உணர்ந்து விட்டது. அதனால் தான், நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்யவும், இந்தியாவுடனான ஒத்துழைப்பு தேவை என்பதால், அதிபர் முகமது முய்சு இந்தியா வந்திருக்கிறார்.

பிரதமர் மோடியுடன் கரன்சி பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. இந்தியா வழங்கியிருக்கும் நிதி உதவி, மாலத்தீவின் அந்நிய செலாவணி தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் மாலத்தீவின் ஊழல் தடுப்பு ஆணையம் இடையே ஒப்பந்தமும், மாலத் தீவு நீதித்துறை அதிகாரிகளுக்கான பயற்சி அளிக்க, இந்திய நீதித்துறை சேவைகள் ஆணையத்துடன் ஒரு ஒப்பந்தமும்,இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் ஒரு ஒப்பந்தமும், நாணய மாற்று ஒப்பந்தமும்,இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளன.

மாலத்தீவின் கடலோரக் காவல் படை கப்பல் ஹூரவீயை இலவசமாக சீரமைக்க இந்திய அரசு உறுதி அளித்திருக்கிறது.மாலத்தீவு மக்களுடன் உறுதியுடனும் இருப்பதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மாலத்தீவின் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல்லா ஷாஹித், இருநாடுகளுக்கும் இடையேயான பழமையான உறவுகள் புத்துயிர் பெறுவதை கண்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது என்பதால், இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக உறவை ஏற்படுத்திக் கொள்வதே நல்லது என்பதை பிற அண்டை நாடுகளும் முடிவுக்கு உணர வேண்டிய தருணமாக, மாலத்தீவு அதிபரின் இந்திய பயணம் அமைந்திருப்பதாக புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது வங்கக்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சீனா பக்கம் சென்ற மாலத்தீவு ! ஒரே சம்பவத்தில் மொத்த சோலியை முடித்த மோடி ! ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு !

சீனா பக்கம் சென்ற மாலத்தீவு ! ஒரே சம்பவத்தில் மொத்த சோலியை முடித்த மோடி ! ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு !

January 8, 2024
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட தி.மு.க சதி!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இடைத்தரகர்களுக்கு ஆதரவளிக்கும் தி.மு.க அரசு! அணிதிரளுமா விவசாய சங்கங்கள்!

August 29, 2021
ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மீண்டது தாராவி : சென்னைக்கு  பாடம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மீண்டது தாராவி : சென்னைக்கு பாடம்!

June 15, 2020
மோடி அரசு கொண்டுவந்ததே உண்மையான மாபெரும் சமூக நீதிச்சட்டம்,இதை ஒத்துக்கொள்வாரா முகஸ்டலின்.

அடுத்த 6 மாதங்களில் திமுக உள்ளிட்ட குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும் பிரதமர் மோடி அதிரடி பேச்சு.

May 29, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x