செந்தில் பாலாஜி முன் கேள்வி கேட்ட மூத்த பெண் நிர்வாகி! கட்சியை விட்டு தூக்கிய தி.மு.க தலைமை!

meena jayakumar

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகும் மறைமுகத் தேர்தலுக்கு பிறகும் ஆளும் கட்சியான தி.மு.கவில் சட்டமன்ற உறுப்பினர் முதல் கட்சிக்காக பாடுபட்ட பல மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். இது திமுகவில் புதிதாக உள்ளது. கருணாநிதி கையில் கட்சி இருந்த போது இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லை. தற்போது ஸ்டாலின் கையில் கட்சி இருக்கிறது, அதை விட உதயநிதி கையில் அதிகாரம் உள்ளது. உதயநிதிக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் எதிராக செயல்படும் கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகிறது தி.மு.க தலைமை.

தி.மு.கவின் நகரச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர் என சஸ்பெண்ட் பட்டியல் நீண்ட நிலையில் மகளிர் அணி மாநில நிர்வாகியான மீனா ஜெயக்குமாரும் இப்போது நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்.தி.மு.க மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

கோவை மேயர் வேட்பாளராக பேசப்பட்ட நிலையில், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடக் கூட திமுக தலைமை சீட் கொடுக்காததால் அண்மையில் தனது ஆதங்கத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் கொட்டித்தீர்த்தார் மீனா ஜெயக்குமார்.

“உன்னோட பொண்டாட்டிக்கு சீட் கிடைக்கனும் என்றால் கேட்டுட்டு போ, அதற்காக என்னோட வளர்ச்சியை தடுக்க இந்த ஆள் யாரு?” என மேடையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கு எதிராக காட்டமாக பேசினார்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகும் மறைமுகத் தேர்தலுக்கு பிறகும் திமுகவில் வரிசையாக பல முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர் நகரச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர் என சஸ்பெண்ட் பட்டியல் நீண்ட நிலையில் மகளிர் அணி மாநில நிர்வாகியான மீனா ஜெயக்குமாரும் இப்போது நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்.

முன்னதாக, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் பதவியில் இருந்து எம்.ரவிக்குமார் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், உசிலம்பட்டியில் 4 தி.மு.க பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அந்த வரிசையில் தற்போது, திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். ஜெயலலிதா போல் ஒற்றை ஆளுமை ஸ்டாலின் என்பதை முன்னெடுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இது மட்டுமல்லாமல் உதயநிதி தான் அடுத்த தலைமை என்பதை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும் இல்லையெனில் கட்சியைவிட்டு தூக்கப்படுவார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

Exit mobile version