Wednesday, November 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஒரு சீரியல் நடிகைக்கு கிடைத்த அனுதாபம் கூட இவருக்கு கிடைக்கவில்லை. தமிழக ஊடகங்கள் நிலை இதுதான்.

Oredesam by Oredesam
December 11, 2020
in செய்திகள், தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

கோவைசாந்திகியர்ஸ்_சுப்பிரமணியம் காலமானார் .

ஒரு சீரியல் நடிகைக்கு கிடைத்த அனுதாபம் கூட இவருக்கு கிடைக்கவில்லை. தமிழக ஊடகங்கள் நிலை இதுதான். இவர் மலிவு விலையில் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் இவைகளை லாப நோக்கமின்றி செயல்படுத்தி வந்தார்.

????????????????
கோவை திருச்சி ரோட்டில் கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீனில் மதிய சாப்பாடு சாப்பிட சென்றால் அங்கு …….
பிரமாண்டமான சுத்தமான வளாகம். ராணுவக் கட்டுப்பாடு. பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்படுத்தியது. வரிசையில் நின்று சாப்பாட்டிற்கான டோக்கன் வாங்க வேண்டும்.ஒரு நபருக்கு ரூபாய் 20/- மட்டுமே. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். பார்சல் கிடையாது.

அருமையான சாப்பாடு. அங்கு வேலை செய்பவர்களிடம் இயந்திரம் தோற்றுப் போகும். அவ்வளவு வேகம். ஒரு நாளுக்கு மதிய வேளையில் 3000 நபர்களுக்கு சாப்பாடு தயார் செய்து விநியோகிப்பதாக தெரியவந்தது. அதற்கு மேல் கண்டிப்பாக கிடையாது.

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

இதனை நிறுவியர் பெயர் உயர்திரு பி.சுப்பிரமணியம் அவர்கள். சாந்தி கியர்ஸ் அதிபர் என்றால் அனைவருக்கும் தெரியும். அவரது மனைவியின் பெயர் திருமதி சாந்தி. தனது மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் இதனை அவர் நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் தரமான உணவுகளை இவர்கள் அளவிற்கு எந்த உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூ.20-க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் நூறு ரூபாய் ஆகாது. இதனால், இந்த பகுதியில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அங்கு குடியிருப்பவர்கள் அந்த வீடுகளில் சமையல் செய்வதும் கிடையாது.

ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கென தனி உணவு விடுதியுள்ளது. அங்கு அவர்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது என்பது விசேஷ செய்தி.

உணவில் மட்டுமல்லாமல், கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று பல சேவைகளை செய்து வருகிறார்கள். இந்த வளாகத்திலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 % கட்டணம் குறைவு.

இந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம். ஆனால், வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல, இதுவரை தன்னை எங்கேயும் இவர் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை. பெரும்பாலான ஊடகங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டியெடுக்க முயற்சி செய்தன. ஆனால், அவர் எந்த ஊடகத்தையும் சந்திக்கவுமில்லை. பேட்டி கொடுக்கவுமில்லை. எங்குமே அவர்கள் புகைப்படம் இருக்காது. இன்டர்நெட்டில் தேடினால் கூட அவரது புகைப்படம் கிடைக்காது.

ஒரு அரசு தன் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை சத்தமே இல்லாமல் சுத்தமாக செய்து வந்த சுப்பிரமணியம் அவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை.

முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் வாழ்த்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறது சுப்பிரமணியத்தின் குடும்பம். நல்ல மனம் வாழ்க…!

மேலும் இங்கு பல்வேறு வகையான சிற்றுண்டிகளும் விற்கப்படுகின்றன. மைதாமாவில் எந்தவிதமான பதார்த்தங்களும் செய்வதில்லை.

காலை 4.30 மணி முதல் 200க்கும் மேற்பட்டோர் நடைபெயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிறகு
6 மணி முதல் கம்பங்கூல், சூப் (அருகம்புல், கீரை, மனத்தக்காளி மற்றும் பல) மற்றும் ஜூஸ் (மாதுளை, முருங்கை, கேரட் மற்றும் பல) அனைத்தும் 5 ரூபாய்க்கு ஒரு டம்ளர் என்று விற்பனை செய்கிறார்கள்.

களி, சுண்டல், முளைகட்டிய பயிர்களும் விற்கிறார்கள்.
அனைத்தும் சுத்தமாகவும், அளவில் அதிகமாகவும், விலை குறைவாகவும் கொடுக்கிறார்கள்.

முக்கியமாக ஒரே நேரத்தில் குறைந்தது 200 குழந்தைகள் விளையாடும் அளவிற்கு விளையாட்டுக் கருவிகளும், பெரிய விளையாட்டுத்திடலும் உள்ளது.

மேலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில்
5 மழலையர் பள்ளிகள்
(PRE KG, LKG, UKG) இலவசமாக நடத்திக்கொண்டிருக்கிறார்.
இங்கு பயிலும்
அனைத்து குழந்தைகளுக்கும் காலையில் சிறப்பான சிற்றுண்டியும், இடைவேளையில் பாலும்-சுண்டலும்,
மதியம் மிக உயர்தரமான மதிய உணவும் இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் இங்கிருக்கும் பார்மசியில் குறைந்தது நூறு பேராவது வேலை செய்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய பார்மசி என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். மருந்துகளுக்கு
20 முதல் 25% வரை சிறப்புத் தள்ளுபடியும் கொடுக்கிறார்கள்.

மருந்து வாங்க வருபவர்கள் டோக்கனை பெற்றுக்கொண்டு வரிசையில் அமர்ந்து கொண்டு இருந்தால், டோக்கன் நம்பர் எதிர்புறம் இருக்கும் டிவி ஸ்கிரீனில் ஸ்கோரலாக ஓடுகிறது. மருந்தினைப் பெற்றுக்கொள்ள 10 கவுன்டர்கள் உள்ளன. முதியோர்களுக்கு சிறப்பு தனி கவுன்டரும் உள்ளன.

கோவையில் எரிவாயு மூலம் எறியூட்டும் மையத்தை முதன்முதலில் ஏற்படுத்தியுள்ளார். எரியூட்டும் மையத்திலிருந்து 15Km தொலைவிற்கு Freezer box-ம், அமரர் ஊர்தியும் இலவசமே. எரியூட்டும் மையத்திற்கான கட்டணம் Rs.1000 மட்டுமே.

இவர்களைப் பற்றி இன்னமும் அறிந்து கொள்ள
http://shanthisocialservices.org

அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம்.
????????????????

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், மே 7, 2020ஆம் தேதியில் இருந்து இதுவரை வெளிநாட்டு இந்தியர்கள் 6037 பேர் 31 விமானங்கள் மூலம் நாடு திரும்பி உள்ளனர்.

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், மே 7, 2020ஆம் தேதியில் இருந்து இதுவரை வெளிநாட்டு இந்தியர்கள் 6037 பேர் 31 விமானங்கள் மூலம் நாடு திரும்பி உள்ளனர்.

May 12, 2020
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023

தடுப்பூசி பற்றாக்குறை என பொய் சொல்லும் தமிழகம்! தடுப்பூசியை வீணாக்கியத்தில் 3 ஆம் இடம் பிடித்த தமிழகம்

May 27, 2021
55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம்  விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

முந்தைய அரசுகளுக்கும் மோடி அரசுக்கும் என்ன வித்தியாசம்?

December 10, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x