ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைதுக்குப் பிறகு இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3-ம் தேதி, கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

அவருடன் சேர்ந்து மேலும் எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டனர். தற்போது வரை, இந்த வழக்கில் மொத்தம் 20 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கில், ஆர்யன் கானும் அவருடன் கைதுசெய்யப்பட்ட அர்பாஸ் மெர்ச்சன்ட், தமாசா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மூன்று பேரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நிதின் சாம்ப்ரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நேற்று நடைபெற்ற ஜாமீன் மீதான வழக்கில் மூவருக்கும் பல கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் வரும் வெள்ளி கிழமை தான் அவர்கள் சிறையிலிருந்து வெளி வரமுடியும்.

இந்த நிலையில் உலகத்தினை ஆட்டி படைத்து வரும் போதை பொருட்கள் விவகாரம் உலக நாடுகளுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். மேலும் போதை பொருள் பயன்படுத்தி விட்டு கற்பழிப்பு கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் சிறுவர்கள் இளைஞர்கள். இது அனைத்து நாடுகளுக்கும் சவாலாக உள்ளது.

தாய்லாந்து, தான் தற்போது போதை பொருட்களின் தலைமை இடமாக உள்ளது. இங்கிருந்து தான் மலேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்தியாவிற்கும் போதை மாத்திரைகள் தாய்லாந்தில் இருந்துதான் சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள லாவோஸ் நகரில் ஆசிய அளவில் மிகப்பெரிய போதை மருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.6 கோடி போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

‘மெத்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மெத்தாம்பிடாமைன் என்கிற போதை மாத்திரை மிகவும் பிரபலமானது. மியான்மார், தாய்லாந்து ஆகிய எல்லைகளில் இந்த போதைப்பொருளை கடத்த மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலை கைது செய்ய தாய்லாந்து போலீசார் பல காலமாக நிழல் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்த மாத்திரைகள் கடத்தப்படுகின்றன. ஆசிய வரலாற்றில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 6 கோடி போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்ரக பார்கள், ரெஸ்டாரன்ட் கள், சுற்றுலாத்தலங்கள் ஆகிய இடங்களில் இந்த மாத்திரைகளை விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. குறிப்பாக செல்வந்தர்களின் வாரிசுகள் பலர் இவற்றை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மாத்திரைகளுடன் 1500 கிலோ எடை கொண்ட கிரிஸ்டல் வடிவிலான மெத்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.இத்தகவலை ஐ .நா போதைப்பொருள் தடுப்பு பிரிவு தூதர் ஜெரமி டக்லஸ் உறுதி செய்துள்ளார்.

கடந்த ஆண்டு லாவோஸ் நகரில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களைக் காட்டிலும் தற்போது மூன்று மடங்கு அதிக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதற்கு முன் மியான்மர் நாட்டின் ஷான் பகுதி போதைப்பொருள் கடத்தலின் இதயப் பகுதியாக திகழ்ந்து வந்தது. இங்கிருந்து ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படும்.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதிமுதல் மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று வருவதால் இந்த போதை பொருட்கள் தாய்லாந்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Exit mobile version