Friday, December 1, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

சிம்ம ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2023 முழு பலன்கள்.

Oredesam by Oredesam
November 2, 2023
in ஆன்மிகம்
0
சிம்ம ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2023 முழு பலன்கள்.
FacebookTwitterWhatsappTelegram

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம் வரை)

READ ALSO

திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.

ஒளிமிக்க சூரியனை ராசி நாதனாகக் கொண்டு புகழ் மிக்கவர்களாக விளங்குவதுடன், எந்த நிலையிலும் எதற்காகவும் அச்சம் கொள்ளாமல் விடாமுயற்சியால் வெற்றியை எட்டுவதுடன், உங்களை எதிர்ப்பவர்களை அடக்குகிற ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நண்பர்களே….

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு 9 ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ராகு பகவான், 3 ம் இடமான சகோதர, தைரிய, வீரிய ஸ்தானத்தில கேது பகவான் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களையும் எதிர்பார்த்த ஒவ்வொன்றிலும் வெற்றிகளையும் சில சங்கடங்களையும் வழங்கி வந்தார்கள். உங்கள் உடல்நிலை மனநிலை யாவற்றிலும் பெரும்பாலும் உற்சாகம் நிறைந்திருக்கும். குடும்பத்திலும் ஒரு சில நற்காரியங்கள் நடந்திருக்கும். நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றும் நடந்தேறி நீங்கள் மகிழும்படி இருந்திருக்கும். எதிர்பாராத திருப்பங்களும் உண்டாகியிருக்கும். கடந்த காலத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி சந்தோஷமான நிலையை அடைந்திருப்பீர்கள். இதற்கெல்லாம் காரணம் பாக்கிய ஸ்தானமான 9 ம் இடத்தில் அமர்ந்து உங்களுக்கு பலன் வழங்கிய ராகு பகவானும், சகோதர ஸ்தானமான 3 ம் இடத்தில் அமர்ந்து யோகமான பலன்களை வழங்கி வெற்றி நடைபோட வைத்த கேது பகவானும் என்றே சொல்லலாம்.

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் கடந்த ஒன்றறை ஆண்டுகளில் உங்களை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் சென்றிருப்பார்கள். சில நேரத்தில் சில சங்கடங்கள் உண்டாகியிருக்கும். அவை எல்லாவற்றையும் சமாளித்திடக் கூடிய சக்தியையும் அடைந்திருப்பீர்கள்.

உங்கள் தசா புத்தி நன்றாக இருந்திருந்தால் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றியையே அடைந்திருப்பீர்கள். உங்கள் நிலையில் புதிய மாற்றம் உருவாகி இருக்கும். நோய் நொடிகளில் இருந்து விடுதலைக் கிடைத்து ஆரோக்கியமாக செயல்பட்டிருப்பீர்கள். குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் திட்டமிட்டு காரியங்கள் ஆற்றியிருப்பீர்கள். பிள்ளைகள் வழியிலும் எதிர்பார்த்த நன்மைகளை அடைந்திருப்பீர்கள். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகி இருக்கும். புதிய சொத்துகள் சேர்க்கையும் ஏற்பட்டிருக்கும். உங்கள் பூர்வ புண்ணிய பலனுக்கேற்ப நன்மைகளை அடைந்திருப்பீர்கள்.

இந்த நிலையில்தான் 8.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8 ம் இடமான ஆயுள் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கும். கேது பகவான் 2 ம் இடமான தன, குடும்ப ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாகி 26.4.2025 வரை அங்கிருந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களை வழங்கிட இருக்கிறார்கள்.

இந்த ராகு – கேது பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது? எட்டாம் இடத்து ராகு ஏற்றமான பலன்களை வழங்குவாரா? அல்லது சங்கடமான பலன்களை வழங்குவாரா? இரண்டாம் இடத்து கேது குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவாரா? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையை உண்டாக்குவாரா? முன்பிருந்த நிலையில் முன்னேற்றம் இருக்குமா? அல்லது, முன்பைவிட சங்கடங்கள் தோன்றுமா? கோச்சார ராகுவும் கேதுவும் எத்தகைய பலன் களை வழங்குவார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது….

அஷ்டம ஸ்தான ராகுவின் சஞ்சாரமும் பார்வைகளும்

8.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8 ம் இடமான மீன ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து 2 ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தையும், 6 ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும், 10 ம் இடமான தொழில் ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கிறார்.

அஷ்டம ஸ்தானம், மறைவு ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் எனும் 8 ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும்போது உடல் நிலையில் சங்கடங்களுக்கு மேல் சங்கடங்கள் உண்டாகும். என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நோயின் தன்மையிருக்கும். மருந்துக்கும் கட்டுப்படாத நோய் வந்து வாட்டி வதைக்கும். காரியங்களிலும் நெருக்கடிகள் உண்டாகும். மனதில் திடமான சிந்தனை இல்லாமல் போகும். எல்லாமும் குழப்பத்திலேயே இருந்து வரும். செய்து வரும் தொழிலில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில் புரிவோருக்கு எதிர்பாராத நஷ்டங்களும் உண்டாகும். வியாபாரத்தில் தடைகள் ஏற்பட்டு வருமானத்தில் பாதிப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் சீற்றத்துக்கு ஆளாக நேரிடும். எவ்வளவுதான் உழைத்தாலும் நல்ல பெயர் ஏற்படாது. குடும்பத்திற்குள்ளும் பற்றாக்குறை
நிலவி வரும். விவசாயத்திலும், கால் நடைகள் வளர்ப்பிலும் நல்ல பலன் கிடைக்காது. வாகன இயக்கத்தில் சங்கடம், விபத்து என்று ஏற்படும். சிலருக்கு இருப்பிட வகைகளில் மாற்றம் ஏற்படும். நெருங்கிய உறவினருக்கு கண்டம் ஏற்படவும் வாய்ப்புண்டு. தெய்வம் இல்லையோ என்ற மனநிலை இக்காலத்தில் உண்டாகும். பொதுவில் பாப கிரகங்கள் எட்டில் இருந்தால் தொட்டவை அனைத்திலும் கேடு உண்டாகும். எந்தவொரு புதிய முயற்சியையும் இக்காலத்தில் தொடங்கிடக் கூடாது. சுப காரியங்கள் குறித்த முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. தெய்வத்தின் மீது நம்பிக்கை கொள்வதும். பக்தி மார்க்கத்தில் மனதை செலுத்துவதும் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய நிலையை உண்டாக்கும். இக்காலத்தில் நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியமாகும்.
இவையெல்லாம் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் உண்டாகப் போகும் பலன்கள் என்றபோது, ராகு பகவானின் பார்வைகளால் எத்தகைய பலன்கள் உண்டாகும்….

குடும்ப ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை

8 ம் இடத்தில் அமர்ந்து 2 ம் இடமான குடும்ப ஸ்தானத்தின் மீது பார்வை செலுத்துகின்ற ராகு பகவானால், உடல்நிலை நன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும் மனதில் இனம் புரியாத பயம் ஏற்படும். செய்து வரும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் உண்டாகும். மனதில் பெரிய திட்டங்கள் எல்லாம் தோன்றும். அத்துடன் சரி, காரியம் எதுவும் நீங்கள் நினைத்ததுபோல் கூடி வராது. பண வரவிலும் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாது. குறுக்குவழி முயற்சி மூலம் பணம் தேட முற்படுவீர்கள். தொழிலில் மந்த நிலை, வருமானக் குறைவால் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும். வீட்டில் அன்னியரது தலையீடு உண்டாகலாம். அவர்களுடைய ஆதிக்கமும் இருக்கும். இருப்பிட வகைகளில் அண்டை அயலார்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். வீண் அலச்சலும் கவலையும் உண்டாகும். தொழிலையும் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். மேலதிகாரிகளால் சங்கடங்கள் உண்டாகும். விவசாயம் குத்தகை போன்றவற்றில் சரிவர பலன் கிடைக்காமல் போகும். பணத் தேவைக்காக பொருட்களை விற்க நேரிடும். வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சிப்பவர்க்ளுக்கு ஏமாற்றுமே மிஞ்சும்.

சத்ரு ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை

8 ம் இடத்தில் அமர்ந்து 6 ம் இடமான ருண ரோக சத்துரு ஸ்தானத்தின் மீது பார்வையை செலுத்துகின்ற ராகு பகவானால், மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். உடலில் புதிய வலிமை உண்டானதுபோல் உணர்வீர்கள். உடல்நலத்தில் சில பாதிப்புகள் இருந்தாலும் அதனால் சங்கடங்கள் உண்டாகாது. நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு நல்ல சம்பவங்கள் இக்காலத்தில் ஏற்பட்டு உங்களை மகிழ்ச்சிப் படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் உங்களை வந்தடையும். எதிரிகளின் தொல்லை, வம்பு வழக்குகள் போன்றவற்றில் இருந்த நிலை மாறும். எதிரிகளை வீழ்த்தி வழக்குகளில் வெற்றியைக் காண்பீர்கள். வீட்டில் நவீன பொருட்கள், ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டத்திற்கும், வருமானத்திற்கும் சிலருக்கு வாய்ப்புண்டாகும்.

தொழில் ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை

8 ம் இடத்தில் அமர்ந்து 10 ம் இடமான தொழில் ஸ்தானத்தின் மீது பார்வை செலுத்துகின்ற ராகு பகவானால், செய்து வரும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் அதிக அக்கறையும் முயற்சியும் தேவைப்படும். புதிதாக முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். உங்கள் உழைப்பு எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு லாபம் ஏற்படும். தொழில் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாகனம் இயந்திரங்கள் வாங்க வசதிகள் உண்டாகும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும். பிரபலங்களின் சந்திப்பு நட்பு போன்றவற்றாலும், உறவினர் வகையிலும் உதவிகள் உண்டாகும். மேலதிகாரிகளின் உதவி அதிகளவில் உண்டாகும் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

ராகு பகவானின் ஸ்தான பலனும் பார்வைகள் பலனும் இத்தகையதாக இருக்க, கேது பகவான் எத்தகைய பலன்களை வழங்குவார்….

குடும்ப ஸ்தான கேதுவின் சஞ்சாரமும் பலன்களும்

8.10.2023 அன்று உங்கள் ராசிக்கு 2 ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் அங்கிருந்து 4 ம் இடமான சுகம் மற்றும் மாதூர் ஸ்தானத்தையும், 8 ம் இடமான ஆயுள் ஸ்தானத்தையும், 12 ம் இடமான விரய ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கிறார்.

2 ம் இடத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலத்தை லாபமும் சங்கடமும் இல்லாத காலம் என்றே சொல்ல வேண்டும். பொதுவாக சிம்ம ராசியினருக்கு ராகுவும் கேதுவும் பகையானவர்கள் என்றாலும், அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவர்கள். 3 ம் வீட்டில் இருந்து மிக யோகமான பலன்களை வழங்கி வந்த கேது பகவான் 2 ம் இடத்திற்கு வருகின்ற போது, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத அளவிற்கு உங்கள் நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் கூட நிம்மதியான நிலையை இக்காலத்தில் காண முடியாது. குழப்பமும் பூசலும் அதிகரிக்கும். ஏதாகிலும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கின்ற அளவிற்கு சங்கடங்கள் வந்துசேரும். எதிர்பார்த்த காரியங்களில் தடை, பொருளாதார நெருக்கடி, வீண் செலவு, தொழிலில் தடை, வருமானத்தில் நிறைவில்லாத நிலை, அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி அதனால் சங்கடங்கள், தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு, எதிர்காலம் குறித்த அச்சம் தோன்றும். நிம்மதியாக தூங்கினோம் உறங்கினோம் சந்தோஷமாக இருந்தோம் என்ற நிலையில் கூட இக்காலத்தில் எதிர்மறையான பலன்களே உண்டாகும். புதிய நண்பர்களால் பிரச்சினைகள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நம்பிய நிலையில் அதில் தோல்வி என்று பலவகையிலும் சங்கடங்கள் உண்டாகும். மனதில் நிம்மதியற்ற நிலையிருக்கும்.
இவையெல்லாம் 2 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உண்டாகப் போகும் பலன்கள் என்கிறபோது கேதுவின் பார்வைகளால் எத்தகைய பலன்கள் உண்டாகப் போகிறது…

சுக ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை

2 ம் இடத்தில் அமர்ந்து 4 ம் இடமான சுகம் மற்றும் மாதூர் ஸ்தானத்தை பார்க்கும் கேது பகவானால், தாயாரின் உடல் நிலையில் சங்கடம் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். கண்டத்திற்கு நிகரான சங்கடங்கள் சிலருக்கு உருவாகலாம். செய்துவரும் தொழிலில் எதிர்பாராத தடைகள், பிரச்சினைகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் முழு கவனத்தையும் செலுத்த முடியாத அளவிற்கு சூழ்நிலைகள் மனதை தடுமாற வைக்கும். பொருளாதார தட்டுப்பாடும் கடன் தொல்லைகளும் அளவிற்கு மீறி இருக்கும். விவசாயம் கால்நடைகளில் பிற்போக்கான பலன்களே உண்டாகும். கால்நடைகளும் பயிரும் நோயால் பாதிப்படையும். எதிர்காலம் குறித்த பயம் மனதில் அதிகரிக்கும். குடும்பத்தினர் பற்றிய கவலையும், வாழ்க்கைக் குறித்த அச்சமும் சிலருக்கு பயத்தை ஏற்படுத்தும். உங்கள் உடல் நிலையிலும் சங்கடங்கள் தோன்றலாம். தீய நண்பர்களின் சேர்க்கையும், தீய பழக்கமும் இக்காலத்தில் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது எதிர்காலத்திற்கு நன்மை ஆகும்.

ஆயுள் ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை

2 ம் இடத்தில் அமர்ந்து ஆயுள் ஸ்தானத்தை பார்க்கும் கேது பகவானால், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் எதிர்மறையான பலன்களையே சந்திக்க நேரும். நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு பிரிந்து செல்லக்கூடிய நிலை உருவாகும். சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்று வாழ வேண்டிய, தொழில் செய்ய வேண்டிய நிலை சிலருக்கு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் நடவடிக்கைகளுக்கு ஆளாகலாம். சிலர் பணி நீக்கம் செய்யப்படுவதற்கும் வாய்ப்புண்டு. தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். வருமானத்தில் தடைகள் உண்டாகி சங்கடங்களை சந்திக்க நேரிடலாம். இந்த நேரத்தில் மனதைத் தளர விடாமல், செய்கின்ற தொழிலில் முழு கவனத்தையும் செலுத்தினால் ஓரளவிற்கு நன்மைகளைக் காண வாய்ப்புண்டு. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். எதிர்பாராமல் சில விபத்துகளை இக்காலத்தில் சந்திக்க நேரிடும். எனவே, பயணங்களிலும் வாகனத்தை இயக்கும் போதும் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அலட்சியம் காட்டினால் உடலில் ஊனம் ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே, வாகனப் பயனத்தின் போது மிகமிக நிதானம் தேவை. தெய்வ நம்பிக்கையும் வழிபாடும் நன்மையை உண்டாக்கும். எதிலும் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்து செயல்படுவது நல்லது. ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைத்தால் சங்கடங்களை தவிர்க்கலாம். பெண்களின் வழியே சில ஆண்களுக்கும், ஆண்களின் வழியே சில பெண்களுக்கும் கெட்ட பெயர், பொருள் நஷ்டம் ஏற்படவும் இக்காலத்தில் வாய்ப்புண்டு. பொதுவாக இக்காலம் உங்களுக்கு மிகவும் சங்கடமான காலமாகவே இருக்கும். உங்கள் செல்வாக்கும், அந்தஸ்தும், மதிப்பும் மரியாதையும் மறையக்கூடும்.

விரய ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை

2 ம் இடத்தில் அமர்ந்து விரய ஸ்தானத்தை பார்க்கும் கேது பகவானால் மனம் எப்போதும் ஓர் நிலையில் இல்லாமல் போகும். சின்னச்சின்ன விஷயங்களுக்கு பெரிதாக கவலைப்படக்கூடியவராக இருப்பீர்கள். உறவினர்களால் தொல்லைகள் உண்டாகி சங்கடத்தை ஏற்படுத்தும். வழக்குகளாலும் கடன் தொல்லைகளாலும் அலைச்சல் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் வேளைக்கு உணவருந்த முடியாமல், நிம்மதியான உறக்கம் இல்லாமல் அவதிப்படுவீர்கள். சந்தோஷம், சுகம் என்பதில் கூட எதிர்மறையான பலன்களே உண்டாகும். எவ்வளவுதான் முயற்சித்தாலும் எதுவும் சரியாக கூடி வராது. நன்மையான செயலென்று நினைத்தாலும் அதுவும் கெடுதலாகவே முடியும். கெட்ட பெயர் ஏற்படும். உடலில் ஏதாவது நோய் வந்து மனதை வேதனைப்படுத்தும். குடும்பத்தில் பணத்தட்டுப்பாடு, வீண் மனஸ்தாபம் உண்டாகும். பொன் பொருட்களை விற்பனை செய்து தேவைகளை ஈடு கட்டலாம் என்று முயற்சித்தாலும் அதிலும் நஷ்டத்தையே காண்பீர்கள். கடன் வாங்கினாலும் அதை சீக்கிரம் அடைக்க முடியாமல் திணறுவீர்கள். செய்கின்ற தொழில் ஒன்றில்தான் மனதில் கொஞ்சம் அமைதி, உற்சாகம், மகிழ்ச்சி ஏற்படும். இருந்தாலும், தொழிலில் அலைச்சல் அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லாமல் போகும். வரவுக்குமேல் செலவுகள் உண்டாகி அவதிப்படுவீர்கள்.

பொதுப்பலன்கள்

ராகு கேதுவின் சஞ்சாரத்தை வைத்தும் அவர்கள் பார்க்கும் பார்வைகளை வைத்தும் உங்களுக்கு உண்டாகப் போகும் பலன்களில் பெருமளில் சங்கடங்களும் ஓரளவிற்கு நன்மையுமாக இருக்கப் போகிறது.

ராகு பகவான், ஆயுள் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகமான நிலை என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் பாதகமான நிலையாகவும் அமையாது. பாப கிரகமான ராகு பகவான் மறைவு ஸ்தானமான 8 ல் மறைவதும் நன்மை என்றே சொல்லலாம்.

கேது பகவான் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் அவர் 8 ம் இடத்தைப் பார்ப்பதால் உங்கள் உடலில் சில கோளாறுகள் உண்டாகலாம். ஒரு சிலர் விபத்தில்கூட சிக்கலாம். உடல்நிலை ஒரு நேரம் இருப்பதுபோல் மறு நேரம் இல்லாமல் போகும். நினைத்த செயல்களை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் தோன்றும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் எல்லையற்ற நெருக்கடி என்ற நிலையை இக்காலத்தில் அடைவீர்கள்.

உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி பலன்கள் நன்றாக இருந்தாலும், பூர்வ புண்ணிய பலம் மிகுந்திருந்தாலும் மேற்கண்ட பலன்களில் உள்ள சங்கடங்கள் உங்களை அதிக அளவில் பாதிக்காது.

குரு – சனி சஞ்சாரப் பலன்கள்

ராகு பகவான் ஆயுள் ஸ்தானமான 8 ம் இடத்தில், கேது பகவான் குடும்ப ஸ்தானமான 2 ம் இடத்தில் சஞ்சரிப்பதாலும், அவர்களுடைய பார்வைகளாலும் பலன்களை வழங்கிட உள்ள நிலையில், 30.4.2024 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 9 ம் இடத்தில் சஞ்சரித்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கிட உள்ளார். அவருடைய பார்வைகள் உங்கள் ஜென்ம ராசியையும், 3 ம் இடத்தையும், 5 ம் இடத்தையும் குரு பகவான் பார்ப்பதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள். சகோதர சகோதரிகளால் நன்மைகள் அதிகரிக்கும். மனதில் புதிய தைரியமும் துணிச்சலும் உண்டாகும். எது வந்தாலும் சமாளித்திடக்கூடிய மனநிலையை அடைவீர்கள். உங்கள் புத்திரர்களின் வழியாகவும் பெற்றோர் வழியாகவும் நன்மைகளை அடைந்து மகிழ்ச்சி அடைவீர்கள். பொதுவாக, சுப கிரகமான குருபகவான் 9 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்வரும் சங்கடங்கள் எல்லாம் இல்லாமல் போய்விடும் என்பது பொதுவிதி. தோல்விகளையும் சங்கடங்களையும் அனுபவித்து வந்தவர்களும் தலைநிமிரும் நிலையை, வெற்றிகளைக் கண்டு உயர்கின்ற நிலையை அடைவீர்கள் என்பதால், புதிய இடம் வாங்குவது, இருக்கின்ற இடத்தை சரி செய்வது, வாகனங்கள் வாங்குவது, சமுதாயத்தில் மதிப்புமிக்க ஒருவராக வாழ்வது, புதிய பதவிகளை அடைவது என்பதெல்லாம் 9 ம் இடத்து குரு பகவான் வழங்கிடும் பலன்களாகும். 1.5.2024 முதல் குரு பகவான் 10 ம் இடத்திற்கு செல்வதால் இந்த நிலையில் தலைகீழ் மாற்றம் உண்டாகும். 10 ம் இடத்து குரு பதவியை பறிப்பான் என்பதால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு ஆட்டம் காணும். சங்கடங்களும், நெருக்கடிகளும் அதிகரிக்கும்.

இந்த நேரத்தில் உங்கள் ராசிக்கு 6 ம் இடத்தில் வக்கிரமாக சஞ்சரித்து வரும் சனி பகவான் 20.12.2023 முதல் 7 ம் இடமான சப்தம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கப் போவதுடன் அங்கிருந்து உங்கள் ராசியையும் 7 ம் பார்வையால் பார்த்திடப் போகிறார் என்பதால் உடல் ரீதியாக நெருக்கடிகள் தோன்றும். நோய்களுக்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களின் நிலையிலும் சங்கடம் அதிகரிக்கும். ஆயுள் குறித்த அச்சம் மேலோங்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும். 30.4.2024 வரை உங்கள் ராசியின் மீது குரு பகவானின் பார்வை பதிவதால் சனி பகவான் வழங்கிடும் பாதிப்பில் இருந்து அதுவரையில் சமாளித்துக் கொள்வீர்கள் என்றாலும் 1.5.2024 முதல் குரு பகவானின் பார்வை உங்கள் ராசியை விட்டு விலகுவதால் உங்கள் நிலையில் கடும் பாதிப்பு உண்டாகும்.

பரிகாரம்
ஒருமுறை காளகஸ்திக்கு சென்று ராகு கேதுவிற்கு பரிகார பூஜை செய்துவர சங்கடங்கள் குறைய ஆரம்பிக்கும். தொடர்ந்து துர்க்கையையும் விநாயகப் பெருமானையும் முறையாக வழிபட்டு வர முன்னேற்றம் தோன்றும். ஒரு முறை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வழிபட்டுவர நெருக்கடிகள் குறைய ஆரம்பிக்கும்.

ShareTweetSendShare

Related Posts

திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்
ஆன்மிகம்

திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்

November 23, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.

November 23, 2023
அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் கற்பக விருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதிஉலா.
ஆன்மிகம்

அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் கற்பக விருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதிஉலா.

November 21, 2023
கடக ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி முழுபலன் 2023
ஆன்மிகம்

கடக ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி முழுபலன் 2023

November 2, 2023
ராகு கேது பெயர்ச்சி 2023 மிதுன ராசிக்கான முழு பலன்கள் என்ன
ஆன்மிகம்

ராகு கேது பெயர்ச்சி 2023 மிதுன ராசிக்கான முழு பலன்கள் என்ன

October 30, 2023
ராகு கேது பெயர்ச்சியில் 2023 மேஷ ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட் என்ன ?
ஆன்மிகம்

ராகு கேது பெயர்ச்சியில் 2023 மேஷ ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட் என்ன ?

October 29, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஸ்டாலினை தொடர்ந்து கொரானா குறித்து போலி செய்தியை பரப்பிய விசிக பாராளுமன்ற உறுப்பினர் !

ஸ்டாலினை தொடர்ந்து கொரானா குறித்து போலி செய்தியை பரப்பிய விசிக பாராளுமன்ற உறுப்பினர் !

March 24, 2020

கேரளத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளை பரப்பினால் 5 வருடம் சிறை பினராய்விஜயனுக்கு பா.சி கண்டனம்.

November 23, 2020
ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அமித்ஷா ஆவேசம் !

ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அமித்ஷா ஆவேசம் !

October 16, 2023
10,000 கோடி ஊழல் பிளான்! தமிழக அரசை நிலைகுலைய வைத்த அடுத்த சம்பவம்! பாஜக SR.சேகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ! #381பாஜக

10,000 கோடி ஊழல் பிளான்! தமிழக அரசை நிலைகுலைய வைத்த அடுத்த சம்பவம்! பாஜக SR.சேகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ! #381பாஜக

October 19, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.
  • திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.
  • தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x