திருமாவளவன் தொகுதியில் கற்பழிக்கப்பட்ட மாணவி! கற்பழித்தவனை கைது செய்ய கூடாது என விசிக ரகளை! வி.சி.க வின் மனுதர்மம்

திருமாவளவன் எம்.பியாக உள்ள சிதம்பரம் தொகுதியில் 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தவனை கைது செய்ய கூடாது என விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்கள் ரகளையில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலம் பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவன் ஜெயக்குமார் என்பவன் கடந்த 6 மாதமாக மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளான், ஆசை வார்த்தைகள் கூறி 9 வது படிக்கும் மாணவியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். அந்த காமக்கொடூரன்.

இந்த நிலையில் நேரில் சந்தித்து மனம் விட்டு பேச வேண்டும் மாணவியை ஏமாற்றி, கடந்த ஆகஸ்ட் 15 ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் புகுந்து மாணவியை பலாத்காரம் செய்ததோடு அதனை வீடியோவாகவும் எடுத்துக் வைத்து கொண்டுள்ளான் ஜெயக்குமார் வீடியோவை வைத்து மிரட்டி மாணவியை தன்னுடைய ஆசைக்கு மீண்டும் மீண்டும் இணங்க வற்புறுத்தியுள்ளான். தனது தாய் வீட்டில் இல்லாதது குறித்து மாணவி தெரிவித்ததும் அங்கு வந்து அத்துமீறியுள்ளான்.

திருமாவளவனை கிழித்து தொங்கவிட்ட காய்தரி ரகுராம்
என்னா கிழி!

கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரின் செல்போனை காவல்துறையினர் சோதனையிட்டதில், பல பெண்களுடன் அவன் இருப்பது தெரிய வந்தது. அவை யெல்லாம் இன்ஸ்டாகிராம், முகனூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தன்னுடைய காதல் வலையில் சிக்கிய பெண்கள் என்று காவல்த்துறையிடம் கூறியுள்ளான் காமக்கொடூரன் ஜெயக்குமார், அந்த பெண்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியும், ஆசைவார்த்தை கூறி மயக்கியும் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பலாத்கார வழக்கில் மாணவன் ஜெயக்குமார் சிக்கியதும் அவனுக்கு ஆதரவாக காவல் நிலையம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் சிலர் அந்த மாணவனை போலீசில் சிக்கவைத்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அந்த மாணவன் மீது வழக்குப் போடக்கூடாது என்று ரகளை செய்தனர்.
இதற்கிடையே போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயக்குமாரை பெண் ஒருவர் ஆவேசமாக தாக்கினார்

இவன் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Exit mobile version