Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

திணறிய கிளாம்பாக்கம்.. ரோட்டில் இறங்கிய மக்கள்… ஸ்டாலின் அரசை கிழித்து தொங்கவிட்ட சம்பவம்!

Oredesam by Oredesam
June 6, 2025
in செய்திகள், தமிழகம்
0
கிளம்பாக்கம்

கிளம்பாக்கம்

FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிளாம்பாக்கத்தில் அவசர அவசரமாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்று கூறி பயணிகள் மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோதே, நுழைவாயிலில் தண்ணீர் தேங்கும் பிரச்சினை, மாநகர பேருந்து நிலையத்துக்கும் புறநகர் பேருந்து நிறுத்தத்துக்கும் இடையே எளிதாக கடந்து செல்லும் வகையில் இணைப்பு இல்லாதது, அடிப்படை வசதிகள் இல்லாதது என பல்வேறு புகார்கள் இருந்து வந்தது.

மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தனது தந்தையின் பெயரை சூட்டி விளம்பரப்படுத்திக் கொள்வதில் அத்தனை அக்கறையுடனும் அவசரத்துடனும் திறக்கப்பட்ட காரணத்தால் தான் இவ்வவளவு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள் புதிய பேருந்து முனையம் தொடங்கும்போது ஆங்காங்கே ஒரு சில குறைகள் இருக்கும். அவை போகப் போக சரி செய்யப்படும் என முட்டு கொடுக்க ஆரம்பிதார்கள் திமுக சொம்பு தூக்கிகள். ஆனால், பேருந்து முனையம் செயல்பட ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் புகார்கள் வந்தவண்ணம் இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நாள்தோறும் 1,292 பேருந்துகளும், வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் கூடுதலாக 500 பேருந்துகளும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. முகூர்த்த நாளையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு அதிக அளவில் பயணிகள் சென்றுள்ளனர். முகூர்த்த நாட்களை போக்குவரத்துத் துறை முறையாக கவனத்தில் எடுத்துக் கொள்ளாததால் வழக்கமான பேருந்துகளே இயங்கியுள்ளன.

தென் மாவட்டங்களுக்கு செல்ல போதுமான பேருந்துகள் இல்லாமல் நள்ளிரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அவதிப்பட்டுள்ளனர். அவர்கள் பேருந்து முனைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், நள்ளிரவு நேரத்தில் ஜிஎஸ்டி சாலைக்கு வந்து மறியலில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. பின்னர் காவல் துறையினர் தலையிட்டு, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் பேசி, கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்து பயணிகளை அதிகாலை 2 மணிக்கு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த பின்பே நிலைமை சீரடைந்துள்ளது.

கோயம்பேட்டில் பேருந்து நிலையம் இருந்தபோது, போக்குவரத்து நெரிசலைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையையும் சென்னை நகர மக்கள் சந்திக்கவில்லை. ஆனால், கிளாம்பாக்கத்துக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்ட பிறகு, வெளியூர் சென்றுவர போதிய பேருந்துகள் இயக்கப்பட வில்லை என்ற குறை ஒருபுறம் இருந்தாலும், சென்னை நகர மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்வதே சொல்லொணாத் துயராக மாறிவிட்டது.

வெளியூர்களில் இருந்து கிளாம்பாக்கம் வந்திறங்கும் பயணிகளும் அங்கிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்கும் அதே சிரமத்தை சந்திக்கின்றனர். நகர மக்கள் கிளாம்பாக்கம் செல்வதற்கும், மீண்டும் வீடுகளுக்கு திரும்பவும் போதுமான அளவில் பேருந்துகளை போக்குவரத்து துறை இயக்கவில்லை என்பதை மாலை முதல் இரவு 10 மணி வரையிலும், பின்னர் அதிகாலை 4 மணியில் இருந்து 7 மணி வரையிலும் பேருந்து முனையத்தில் பயணிகள் தவிக்கும் காட்சியை சிறிதுநேரம் கவனித்தாலே விளங்கிவிடும். சாதனைகளை பட்டியலிடும் அரசு, மக்களின் சோதனைகளையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

ஆத்திரமடைந்த பயணிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் மூன்று கிலோமீட்டருக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜிஎஸ்டி ரோட்டின் இருபக்கத்திலும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் ஓட்டேரி போலீசார் மறியிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாருக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் விடிய விடிய மறியல் தொடர்ந்தது.

இரவு 9 மணிக்கு மேல் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. முன்பதிவு செய்தும், பஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர். இதனால் மணிக்கணக்கில் தூக்கம், பசியோடு குடும்பத்துடன் காத்திருக்க வேண்டி உள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதியளித்தனர். அதே பிறகே மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மனம் நொந்து ராஜினாமா செய்த விஏஓ துரை பிரிதிவிராஜ்! அரசு பணியை விட சமூக பணியே பெரிது !

மனம் நொந்து ராஜினாமா செய்த விஏஓ துரை பிரிதிவிராஜ்! அரசு பணியை விட சமூக பணியே பெரிது !

May 2, 2023
சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே உள்ளது : பிரதமர்.

சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே உள்ளது : பிரதமர்.

January 12, 2021
Murder

திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.

October 15, 2025
RNRAVI

ஆளுநர் ரவி போட்ட போடு… தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 40% அதிகரிப்பு…கதிகலங்கிய சமூக நீதி கட்சிகள்..

October 3, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x