இந்தியாவில் ஜனநாயகத்திற்கு ஆபத்து இல்லை,வாரிசு அரசியல் தான் ஆபத்தில் உள்ளது- அமித்ஷா அதிரடி !

உ.பி., மாநிலம் கவுசாம்பியில், ‘கவுசாம்பி மஹோத்சவ்’ நிகழ்ச்சியை துவக்கி வைத்த பிறகு அமித்ஷா கூறியதாவது: “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில்தான் மக்களவையிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்காக பார்லிமென்ட்டை முடக்கிய எதிர்க்கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இல்லை. வாரிசு மற்றும் ஜாதி அரசியல் தான் ஆபத்தில் உள்ளது.சமூகத்தின் அனைத்து பிரிவினரின் நலனுக்காக 2024ல் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக மக்கள் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Exit mobile version