Tag: NEWS TVNEWS

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

2021 நிதிநிலை அறிக்கை இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது: அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி வாயிலாக இன்று (04.02.2021) உரையாற்றினார். இந்திய ரயில்வே தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் குறித்து பேசிய அவர், “2021 நிதிநிலை அறிக்கை, இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. இந்திய ரயில்வேயில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூலதன செலவு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் தற்சார்பு இந்தியாவை நோக்கி இந்திய ரயில்வேயை வழிநடத்தவும் உந்துசக்தியாக இருக்கும்”, என்று கூறினார். இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரக மந்திரம் குறித்து பேசிய திரு கோயல், “முன்னுரிமைகளை வழங்கி, வளங்களை பிரித்தளித்து, திட்டங்களை விரைவாக முடிவடையச் செய்வதே இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரகமந்திரமாகும்”, என்று குறிப்பிட்டார். இந்திய ரயில்வேக்கு 2021-22 நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ரூ. 1,10,055 கோடி தொகையில் ரூ. 1,07,100 கோடி மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதிநிலை மதிப்பீடுகளை விட ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 37,050 கோடி (53%) அதிகமாகும். பெருந்தொற்று காலத்திலும் இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

குறு நீர்ப்பாசன திட்டத்திற்க்கு பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் கிழ் ரூ 5,000 கோடி ஒதிக்கீடு.

குறு நீர்ப்பாசன திட்டத்திற்க்கு பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் கிழ் ரூ 5,000 கோடி ஒதிக்கீடு.

பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஒரு துளி நீருக்கு அதிக பயிர்’ என்னும் மத்திய அரசு திட்டத்தை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் ...

போர் விமானங்கள் பராமரிப்பில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்

போர் விமானங்கள் பராமரிப்பில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்

போர் விமானங்கள் பராமரிப்பதில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம் அளிக்கிறது. மிக்-21 பைசன் முதல் ரபேல் வரை வெளிநாட்டில் தயாரான பல போர் விமானங்கள்  வரை இந்திய விமானப்படை இயக்குகிறது.  இவற்றின் உதிரி பாகங்களுக்கு, இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருந்திருந்தது.  தற்சார்பு நிலையை அடைவதற்கு இவற்றின் உதிரி பாகங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பழுது பார்க்கும் மையங்கள் இந்தியாவில் இருப்பதில் இந்திய விமானப்படை அதிக கவனம் செலுத்துகிறது. போர் விமானங்களின் பராமரிப்புக்குத் தேவையான திருகு ஆணிகள், வயர்கள், கேஸ்கட், ஸ்பிரிங் போன்ற சாதாரண உதிரி பாகங்கள் முதல், அதிக தொழில்நுட்பம் வாய்ந்த விமான உதிரி பாகங்களையும் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதை விமானப்படை விரும்புகிறது. நாட்டின் பல பகுதிகள் உள்ள போர் விமான பழுது பார்க்கும் மையங்களும் உள்நாட்டு உதிரி பாகங்களை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதற்காக நாசிக்கில் மத்திய உள்நாட்டுமயமாக்கல் மற்றும் உற்பத்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 4,000 உதிரி பாகங்களை, உள்நாட்டில் தயாரிப்பதற்கு விமானப்படை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது. இந்த தேவைகளுக்காக, மத்திய அரசின் பொது கொள்முதல் இணையதளம் மூலம் வெளியிடப்பட்ட ஒப்பந்த கோரிக்கை விவரங்கள் விமானப்படை இணையளம் indianairforce.nic.in -ல் உள்ளது. மேலும், ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள,  200-க்கும் மேற்பட்ட  தொழில்நுட்ப உதிரிபாகங்கள் பட்டியல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையளம் srijandefence.gov.in -ல் உள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்  அலங்கார மீன் வளர்ப்பு முனையம் அமைப்பதற்கான திட்டம் பரிசீலிக்க படும் என மத்திய மீன் வளம்,  கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் ...

மது போதையில் தி.மு.க தொண்டர் சேட்டை அதிர்ச்சியடைந்த உதயநிதி..!

மது போதையில் தி.மு.க தொண்டர் சேட்டை அதிர்ச்சியடைந்த உதயநிதி..!

திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 'விடியலை ...

அதானிக்கு லைசென்ஸ் கொடுத்தது யார்?

அதானிக்கு லைசென்ஸ் கொடுத்தது யார்?

அதானிக்கு பாம்ஆயில் லைசென்ஸ் கொடுத்தது யார்? ராஜீவ்காந்தி-காங்கிரஸ் வருடம்_1989 அதானிக்கு இந்தியாவின் மிகப்பெரிய #துறைமுகம்/கடல் வர்த்தகத்தை யார் வழங்கியது.?? நரசிம்மராவ்-காங்கிரஸ் வருடம்_1993!! அம்பானிக்குரிலையன்ஸ்ரீட்டைல்_லைசென்ஸ் கொடுத்தது யார்? மன்மோகன்சிங்- ...

பாதுகாப்பு துறையின் முக்கிய அறிவிப்புகள்

பாதுகாப்பு துறையின் முக்கிய அறிவிப்புகள்

பெங்களூருவில் நடைபெற்றும் ஏரோ-இந்தியா 2021 நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆவணங்கள் மற்றும் செயல்முறைகளை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் ...

கோவையில் மதபோதகர் பால் தினகரனைக்கு எதிரியாக ஒன்று சேர்ந்த இந்துக்கள்…

கோவையில் மதபோதகர் பால் தினகரனைக்கு எதிரியாக ஒன்று சேர்ந்த இந்துக்கள்…

கோவை அருகேயுள்ள நல்லுார்வயல் கிராமத்தின் பெயரை, 'காருண்யா நகர்' என மாற்றியதை கண்டித்து, நேற்று கண்டன பேரணி நடத்தப்பட்டது.மத போதகர் பால் தினகரன் நடத்தும், காருண்யா கல்வி ...

ஒரே நேரத்தில் 4 உலக சாதனைகள் படைத்தஇந்தியா.

ஒரே நேரத்தில் 4 உலக சாதனைகள் படைத்தஇந்தியா.

இந்தியாவில் ஒரே நேரத்தில் 4 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன, அதுவும் நெடுஞ்சாலை அமைப்பதில் என்பது மிகவும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 5 ஆயிரம் டன் ...

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: மாநிலங்களுக்கு 14-வது தவணையாக ரூ.6,000 கோடியை வழங்கியது மத்திய அரசு

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: மாநிலங்களுக்கு 14-வது தவணையாக ரூ.6,000 கோடியை வழங்கியது மத்திய அரசு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய,  14-வது வாரத் தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது. இவற்றில் ரூ.5,516.60 கோடி  ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக உள்ள 23 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.483.40 கோடி சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன (தில்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி).  மீதமுள்ள 5 மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை. https://www.youtube.com/watch?v=6Kmg8vHDiAU தற்போது, 76 சதவீத ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.76,616.16 கோடி மாநிலங்களுக்கும், ரூ.7,383.84 கோடி, சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி முறையை அமல்படுத்தியதால் ரூ.1.10 லட்சம் கோடி அளவிலான வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக,  மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பாக இந்த சிறப்பு சாளரத்தின் வாயிலாக இந்திய அரசு கடன்களைப் பெறுகிறது. 2020 அக்டோபர் 23-ஆம் தேதி முதல் இதுவரை 14 கட்டங்களாக கடன்கள்  பெறப்பட்டுள்ளன. தமிழகம், பிப்ரவரி 1-ம் தேதி வரை, மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ.9,627 கோடியை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ்  பெறவும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் ரூ.5229.92 கோடி திரட்டவும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரூ.565.54 கோடி கடன் கூடுதலாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Page 22 of 28 1 21 22 23 28

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x