Tag: TAMIL NEWS

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துங்கள் ! பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்!

ஸ்டாலின் எக்காலத்திலும் முதல்வராக முடியாது பாஜக தலைவர் முருகன்.

திமுக தலைவர் ஸ்டாலின் கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது. அவரது கனவு, கனவாக தான் இருக்கும். நனவாகாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், மின்வெட்டு ...

பிரசாந்த்கிஷோர் பொடும்திட்டம் எல்லாம் ஸ்டாலினுக்கு எதிராகவே மீண்டும் திரும்புகிறது…

திமுக நிர்வாகி மீது ஸ்டாலினிடம் அளித்த நில அபகரிப்பு புகார்… நாகப்பட்டினம், வடக்கு பொய்கைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவருடைய 39.5 சென்ட் நிலத்தை, கீழையூர் திமுக ...

சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 350 கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது.

சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 350 கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது.

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட வரி ஆலோசகர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்றை சென்னை வெளிப்புற மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் அமலாக்கம் மற்றும் இணக்க மேலாண்மை பிரிவு கைது செய்துள்ளது. 24 போலி நிறுவனங்களின் வாயிலாக போலி ரசீதுகள் மூலம் ரூ.299 கோடியும், இதர நிறுவனங்களுக்கு சட்டவிரோத உள்ளீட்டு வரி கடனை வழங்கியதன் மூலம் ரூ. 53.35 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளது தொழில்நுட்ப உதவியோடு நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல் முறையாக, ஒட்டுமொத்த கும்பலையும் (அதன் மூளையாக செயல்பட்டவர் உட்பட),  அமலாக்கம் மற்றும் இணக்க மேலாண்மை பிரிவு கைது செய்துள்ளது. தீவிர விசாரணை, பல்வேறு இடங்களில் நன்கு திட்டமிடப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தின் பயன்பாடு, சாத்தியமுள்ள அனைத்து ஆதாரங்களையும் சேகரித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதால், மோசடியின் மதிப்பு இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 பிப்ரவரி 12 அன்று கைது செய்யப்பட்ட இந்த கும்பலின் உறுப்பினர்கள், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான மாண்புமிகு நீதிபதி II முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின்பு இவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதர நபர்களின் கேஒய்சி ஆவணங்களை பயன்படுத்தி இந்த மோசடி செய்ததும், போலி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு உள்ளிட்டவற்றை வரி ஆலோசகர் செய்து தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கடன் மோசடிகளுக்காகவே தொடங்கப்பட்ட இந்த போலி நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகளை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன. இவற்றின் மூலம் பலனடைந்த நிறுவனங்கள் குறித்தும், வேறு யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்தை நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ வரி செலுத்துவோர் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 26142850 மற்றும் 26142852. மின்னஞ்சல்: Sevakendra-outer-tn@gov.in கூடுதல் ஆணையர் திருமதி. பி ஜெயபாலசுந்தரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்ட இந்துக்கள் குடும்பத்தினரை இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதலும் தைரியமும் அளித்தார்.

இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்ட இந்துக்கள் குடும்பத்தினரை இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதலும் தைரியமும் அளித்தார்.

நெல்லை பாளையங்கோட்டை பர்கிட் மாநகரம் அருகிலுள்ள புதுமனை கிராமத்தில் முஸ்லீம் - இந்து மாணவர்களிடையே கிரிக்கெட் விளையாட்டு பிரச்சனை. இந்து மாணவர்கள் மீது தாக்குதல் கடைக்கு சென்ற ...

அடுத்தடுத்து ராஜ்நாத்சிங்,மோடி,அமித்ஷா வருகை தமிழக அரசியலில் புயலை கிளப்பும் பாஜக.

அடுத்தடுத்து ராஜ்நாத்சிங்,மோடி,அமித்ஷா வருகை தமிழக அரசியலில் புயலை கிளப்பும் பாஜக.

கோவை தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது. பிரதமர் சென்னை வந்த ...

திமுகவின் முதல்வர் வேட்பாளர் கனிமொழியா?  தூத்துக்குடியில் ஆரம்பித்தது பனிப்போர்!

கனிமொழி முன் தொண்டர்களை தகாத வார்த்தையால் பெண்கள் முன் திட்டும் மாவட்ட செயலாளர்.

தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கனிமொழி, எம்.பி., திருப்பூரில், 12ம் தேதி திமுக சார்பில் தேர்தல் பிரசாரம் செய்தார். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த குமரன் ரோட்டில், வாகனத்தில் ...

புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா .

புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா .

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் ...

சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம் !

சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம் !

சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம்...! நேபாளம் மற்றும் இலங்கையில் கட்சியை விரிவுபடுத்துவதற்கும் இரு நாடுகளில் கட்சியை வலுப்படுத்தற்கும் ஆன அமித்ஷா திட்டமிட்டார் என ...

பிரதமர் உழவர் உதவி நிதி திட்டம், உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளின் பயிர் பாதுகாப்பை அதிகரிக்கவும்,  பயிர் காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு அதிகளவிலான பயனை உறுதி செய்யவும், பிரதமரின் பயிர் பாதுகாப்பு திட்டத்துக்கு 2021-22 ஆம் நிதியாண்டில், மத்திய அரசு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது ...

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

2021 நிதிநிலை அறிக்கை இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது: அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி வாயிலாக இன்று (04.02.2021) உரையாற்றினார். இந்திய ரயில்வே தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் குறித்து பேசிய அவர், “2021 நிதிநிலை அறிக்கை, இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. இந்திய ரயில்வேயில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூலதன செலவு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் தற்சார்பு இந்தியாவை நோக்கி இந்திய ரயில்வேயை வழிநடத்தவும் உந்துசக்தியாக இருக்கும்”, என்று கூறினார். இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரக மந்திரம் குறித்து பேசிய திரு கோயல், “முன்னுரிமைகளை வழங்கி, வளங்களை பிரித்தளித்து, திட்டங்களை விரைவாக முடிவடையச் செய்வதே இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரகமந்திரமாகும்”, என்று குறிப்பிட்டார். இந்திய ரயில்வேக்கு 2021-22 நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ரூ. 1,10,055 கோடி தொகையில் ரூ. 1,07,100 கோடி மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதிநிலை மதிப்பீடுகளை விட ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 37,050 கோடி (53%) அதிகமாகும். பெருந்தொற்று காலத்திலும் இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Page 207 of 233 1 206 207 208 233

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x