Tag: TAMILTAMIL NEWS TAMIL NEWS CHENNAI

மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் கருத்துக் கணிப்பால் திமுக திகைப்பு.

நம்பிக்கை அளிக்கும் கருத்து கணிப்பு- முதன் முதலாக தமிழகத்தில் உள்ள ஆத ன் தமிழ் சேனல் அதிமுக கூட்டணிக்கு 130 தொகுதிகளில் வெற்றியும் திமுக கூட்டணிக்கு 100 ...

வேளாண் திட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல பட்டதாரி இளைஞர்கள் ஆர்வம்.

வேளாண் திட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல பட்டதாரி இளைஞர்கள் ஆர்வம். பாஜக விவசாய அணி சார்பாக சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடி, ஓமலூர்,கொளத்தூர்,எடப்பாடி ஆகிய நான்கு இடங்களில் உழவர் ...

இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்ட இந்துக்கள் குடும்பத்தினரை இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதலும் தைரியமும் அளித்தார்.

இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்ட இந்துக்கள் குடும்பத்தினரை இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதலும் தைரியமும் அளித்தார்.

நெல்லை பாளையங்கோட்டை பர்கிட் மாநகரம் அருகிலுள்ள புதுமனை கிராமத்தில் முஸ்லீம் - இந்து மாணவர்களிடையே கிரிக்கெட் விளையாட்டு பிரச்சனை. இந்து மாணவர்கள் மீது தாக்குதல் கடைக்கு சென்ற ...

ஸ்ரீபெரும்புதூரில் மதமாற்றத்தை தடுத்து நிறுத்திய இந்து முன்னணி

ஸ்ரீபெரும்புதூரில் மதமாற்றத்தை தடுத்து நிறுத்திய இந்து முன்னணி

இந்து முன்னணி உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு மேலேரி கிராமத்தில், கடந்த ஆறு மாதங்களாக கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் ஜெபக்கூட்டம் நடத்தியதை இந்து ...

கிறிஸ்தவமிஷநரியின் சூழ்ச்சியை முறியடித்த இந்து முன்னணி..!

மனிதர்களை மாற்றி வந்த கிறிஸ்தவ மிஷநரிகளின் கும்பல் இன்று ஒரு படி மேல சென்று ஊரின் பெயர்களையே மாற்றி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ...

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

2021 நிதிநிலை அறிக்கை இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது: அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி வாயிலாக இன்று (04.02.2021) உரையாற்றினார். இந்திய ரயில்வே தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் குறித்து பேசிய அவர், “2021 நிதிநிலை அறிக்கை, இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. இந்திய ரயில்வேயில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூலதன செலவு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் தற்சார்பு இந்தியாவை நோக்கி இந்திய ரயில்வேயை வழிநடத்தவும் உந்துசக்தியாக இருக்கும்”, என்று கூறினார். இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரக மந்திரம் குறித்து பேசிய திரு கோயல், “முன்னுரிமைகளை வழங்கி, வளங்களை பிரித்தளித்து, திட்டங்களை விரைவாக முடிவடையச் செய்வதே இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரகமந்திரமாகும்”, என்று குறிப்பிட்டார். இந்திய ரயில்வேக்கு 2021-22 நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ரூ. 1,10,055 கோடி தொகையில் ரூ. 1,07,100 கோடி மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதிநிலை மதிப்பீடுகளை விட ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 37,050 கோடி (53%) அதிகமாகும். பெருந்தொற்று காலத்திலும் இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

குறு நீர்ப்பாசன திட்டத்திற்க்கு பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் கிழ் ரூ 5,000 கோடி ஒதிக்கீடு.

குறு நீர்ப்பாசன திட்டத்திற்க்கு பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் கிழ் ரூ 5,000 கோடி ஒதிக்கீடு.

பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஒரு துளி நீருக்கு அதிக பயிர்’ என்னும் மத்திய அரசு திட்டத்தை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் ...

கோவையில் மதபோதகர் பால் தினகரனைக்கு எதிரியாக ஒன்று சேர்ந்த இந்துக்கள்…

கோவையில் மதபோதகர் பால் தினகரனைக்கு எதிரியாக ஒன்று சேர்ந்த இந்துக்கள்…

கோவை அருகேயுள்ள நல்லுார்வயல் கிராமத்தின் பெயரை, 'காருண்யா நகர்' என மாற்றியதை கண்டித்து, நேற்று கண்டன பேரணி நடத்தப்பட்டது.மத போதகர் பால் தினகரன் நடத்தும், காருண்யா கல்வி ...

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: மாநிலங்களுக்கு 14-வது தவணையாக ரூ.6,000 கோடியை வழங்கியது மத்திய அரசு

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: மாநிலங்களுக்கு 14-வது தவணையாக ரூ.6,000 கோடியை வழங்கியது மத்திய அரசு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய,  14-வது வாரத் தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது. இவற்றில் ரூ.5,516.60 கோடி  ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக உள்ள 23 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.483.40 கோடி சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன (தில்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி).  மீதமுள்ள 5 மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை. https://www.youtube.com/watch?v=6Kmg8vHDiAU தற்போது, 76 சதவீத ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.76,616.16 கோடி மாநிலங்களுக்கும், ரூ.7,383.84 கோடி, சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி முறையை அமல்படுத்தியதால் ரூ.1.10 லட்சம் கோடி அளவிலான வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக,  மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பாக இந்த சிறப்பு சாளரத்தின் வாயிலாக இந்திய அரசு கடன்களைப் பெறுகிறது. 2020 அக்டோபர் 23-ஆம் தேதி முதல் இதுவரை 14 கட்டங்களாக கடன்கள்  பெறப்பட்டுள்ளன. தமிழகம், பிப்ரவரி 1-ம் தேதி வரை, மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ.9,627 கோடியை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ்  பெறவும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் ரூ.5229.92 கோடி திரட்டவும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரூ.565.54 கோடி கடன் கூடுதலாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தி, வர்த்தகம் மற்றும் இதர துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியை பட்ஜெட் அதிகரிக்கும்: வர்த்தக செயலாளர் டாக்டர்.

உற்பத்தி, வர்த்தகம் மற்றும் இதர துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியை பட்ஜெட் அதிகரிக்கும்: வர்த்தக செயலாளர் டாக்டர்.

இந்தியாவின் ஒட்டுமொத்த போட்டித்திறன் மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் குறித்த விரிவான அறிவிப்புகள், 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக மத்திய வர்த்தக தொழில் அமைச்சகத்தின் வர்த்தக துறைச் செயலாளர் டாக்டர் அனூப் வாத்வான் கூறியுள்ளார். இவற்றின் மூலம் இந்தியாவின் ஏற்றுமதிகளில் வளர்ச்சி, பன்முகத்தன்மை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒப்புதல்கள் பெறுவதையும், நடைமுறைகளையும் எளிமையாக்கி வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல், முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளை உருவாக்கி முதலீட்டுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துதல் ஆகிய இரண்டையும் இவை பூர்த்தி செய்கின்றன. 2021-22 பட்ஜெட் முன்னெடுப்புகள் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், துடிப்பான உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து, பயன்பாடுகளுக்கான சூழ்நிலையை உற்பத்தி துறைக்கு ஏற்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். ஜவுளித்துறையில் சர்வதேச வெற்றியாளர்களை உருவாக்கி அத்துறையை வளர்ச்சியடைய செய்வதற்கான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை நிறுவக்கூடிய திட்டமான மிகப்பெரிய முதலீடுகளுடனான ஜவுளிப் பூங்காக்கள் (மித்ரா) இந்த நடவடிக்கைகளில் ஒன்று அவர் கூறினார். அடுத்த மூன்று வருடங்களில் ஏழு ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும். மேலும் பேசிய அவர், கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், பெதுவாகாட் ஆகிய ஐந்து முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் நவீன மீன்பிடி துறைமுகங்களையும், மீன் மையங்களையும் உருவாக்குவதற்கான குறிப்பிடத்தகுந்த முதலீடுகள், தமிழ்நாட்டில் பல்முனை கடற்பாசி பூங்கா ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜவுளி மற்றும் கடல்சார்ந்த துறைகளில் ஏற்றுமதிகளின் வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கைகள் ஊக்கமளிக்கும்.

Page 16 of 21 1 15 16 17 21

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x