சீனாவிற்கு சொம்பு தூக்கிய தமிழக கம்யூனிஸ்ட்! அப்போ சீனாவுக்கு ஒடுங்க! வச்சு செய்த நெட்டிசன்கள்!

இந்தியா (27.08.2021) ஒரு நாளில் மட்டும் 1 கோடி தடுப்பூசிகளை நம் மக்களுக்கு செலுத்தி சாதித்துள்ளது. அதுபற்றியெல்லாம் வாய் திறக்காமல், சீனா 200 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி விட்டது என்பதை கொண்டாடுகிறது தமிழக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

இதில் வேடிக்கை என்னவென்றால், சீனாவின் 200 கோடி டோஸ் என்பது மிகப்பெரிய பொய் என்றும், அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், அதை சோதித்து யாராலும் பார்க்க கூட முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே.

நம் நாட்டின் சாதனையை கொண்டாட மனம் வராமல், கொரோனாவை உலகத்தைக்கு கொடுத்து, சீரழித்த சீனாவின் புழுகுமூட்டையை தூக்கி கொண்டாடும் இழி பிறவிகள் நிறைந்தது தமிழக கம்யூனிஸ்ட் கட்சி என்றால் அது மிகையாகாது.

மொத்த உலகத்தையும் கொரோனா என்ற வைரசை பரப்பி விட்டு நாசம் செய்த தேசம் சீனா..அதுமட்டுமல்ல,

கொரோனா காலா கட்டத்தில் நமது எல்லையை ஆக்கிரமிக்க பார்த்த சீனாவை அடித்து துரத்தியது இந்தியா இந்த மோதலில்,வீரமரணம் அடைந்துள்ளனர் நமது ராணுவ வீரர்கள்..

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது,எந்த தரவையும் சரிபார்த்து உண்மை என்று யூகிக்க முடியாமல்,சீன அரசு கொடுக்கும் செய்தியை மட்டுமே நம்பி அதை இங்கே பரப்பிக் கொண்டிருக்கிறது CPM..

இதை இன்னாரு மாநிலத்தில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை இது மானக்கேடான நிகழ்வு..ஒவ்வொரு தமிழனும் தலை குனிய வேண்டிய நிகழ்வு..இவர்களைப் பற்றி அன்றே சொன்னார் மார்ஷல் கரியப்பா

சீனா தான் ஒரு வல்லரசு என நம்புகின்றது, அதை உலகை நம்ப வைக்க படாதபாடு பட்டு கொண்டிருக்கின்றது..அதற்கு நம் கம்யூனிஸ்ட் தோழர்களும் தோள் கொடுக்கிறார்கள்.

Exit mobile version