Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தமிழகத்தில் ஜவுளி புரட்சி ! மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1000 ஏக்கரில் ஜவுளி பூங்கா! 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு !

Oredesam by Oredesam
August 6, 2023
in இந்தியா, செய்திகள்
0
தமிழகத்தில் ஜவுளி புரட்சி ! மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1000 ஏக்கரில்  ஜவுளி பூங்கா!  2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு !
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஜவுளி புரட்சி! மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1000 ஏக்கரில் ஜவுளி பூங்கா! 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் ஜவுளி புரட்சி! விருதுநகரில் 1000 ஏக்கரில் அமைகிறது மத்திய அரசின் பிரதம மந்திரி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

தொழில்துறையினர் தங்கள் ஜவுளி தொழிற்சாலைகளை ஒருங்கிணைந்து அமைப்பதற்கு அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக ஜவுளி பூங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான புதிய பூங்காக்களை வளர்ச்சி மையங்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தியா முழுவதும்

தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இத்திட்டத்தின் கீழ் 54 ஜவுளிப் பூங்காக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இதுவரை ரூ.14,243.69 கோடி முதலீட்டை ஈர்த்து , 1,05,709 பேருக்கு நேரடி மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் 51 சதவீத நிதி பங்களிப்பு, மாநில அரசின் 49 சதவீத நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது.

ஜவுளி பூங்கா விருதுநகரில் அமையும்பட்சத்தில் அப்பகுதியை சுற்றி இருக்கும் கிராமத்தினருக்கு சிறந்த மாற்று தொழிலாக இருப்பதுடன், அப்பகுதி பொருளாதார ரீதியாக வளர்ச்சியும் பெறும். தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பி.எம்., மித்ரா ஜவுளி பூங்கா இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் நிலத்தில் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதை மார்ச் 22ல் முதல்வர் ஸ்டாலின், மத்திய வர்த்தகம், ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையழுத்திடப்பட்டன. காணொளி காட்சி மூலம் பூஜையும் போடப்பட்டது.

1052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ரூ.2 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்துகிறது. இதில் 51 சதவீதம் மத்திய அரசும், 49 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இ.குமாரலிங்கபுரத்தை மையமாக கொண்டு அருகில் உள்ள அச்சம்பட்டி, கோவில்புலிக்குத்தி கிராமங்கள் வரை இந்த ஜவுளி பூங்கா பெரிய அளவில் அமைகிறது.

இதன் மூலம் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். அதிவீன உட்கட்டமைப்பு, ஒருங்கிணைந்த மதிப்பு சங்கிலி, சிறப்பு உற்பத்தி பகுதிகள், சமூக உட்கட்டமைப்பு, உற்பத்தியை உடன் தொடங்க சிறப்பு வசதிகள், வணிகப்பகுதி, பொது அடிப்படை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

ஒரு துணியின் துவக்கம் முதல் இறுதி வரை என்னென்ன தொழில் செய்யப்படுகின்றனவோ அதற்கான ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளன.

இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் செயப்பட உள்ளன. ஒரு ஏக்கரில் சிப்காட் அலுவலகம் அமைய உள்ளது. நான்கு வழிச்சாலையில் இருந்து குமாரலிங்கபுரத்திற்கு செல்லும் ரோடு 30 மீட்டருக்கு மாநில நெடுஞ்சாலைத்துறையால் அகலப்படுத்தப்பட உள்ளது. 1.8 கி.மீ., வரை விரிவாக்கம் செய்யப்படும். மண் பரிசோதனை முடிந்த விட்ட நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளன. பல கட்டங்களாக பணிகள் நடக்க உள்ளன.

ரூ.36 கோடிக்கு குடிநீர் பிளான்ட் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட உள்ளது. இந்த ஜவுளி பூங்கா முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வந்தவுடன் குமாரலிங்கபுரம், கோவில்புலிக்குத்தி கிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளிகளை தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட உள்ளன. பல கட்டங்களாக வளர்ச்சி பணிகள் செய்யப்பட உள்ளன.

முதல் கட்டத்தில் அமைய உள்ள ஆலைகள் மூலம் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். அடுத்தடுத்த கட்டங்களில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி 2 லட்சம் வேலைவாய்ப்புகள் வரை உருவாகும். இது விருதுநகர் மாவட்ட மத்திய பகுதி மக்களுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

குமாரலிங்கபுரம், எட்டூர்வட்டம், நடுவப்பட்டி, முத்துலிங்காபுரம், வாடியூர் பகுதி மக்கள் பட்டாசு தொழிலில் தான் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்களில் தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள் பலர் உள்ளனர்.
இவர்களுக்கு இந்த ஜவுளி பூங்கா அருமருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு மனது வைத்ததால் தமிழகத்திற்கும், விருதுநகர் மாவட்டத்திற்கும் வந்துள்ள இந்த திட்டம் தென் தமிழகத்தில் ஜவுளி தொடர்பான வேலைவாய்ப்புக்கு சிறந்த தளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜவுளி தொழில்கள் அனைத்திற்கும் இடமளிக்கும் வகையில் அலகு வாரியாக கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக சாய கழிவுகளை சுத்திகரிக்க சி.யு.டி., சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மண் பரிசோதனை முடிந்து விரைவில் பணிகள் துவங்கும். 160 முதல் 180 டெக்ஸ்டைல், அப்பேரல் அலகுகள் ஜவுளி பூங்கா மூலம் இடம்பெற உள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய ஜவுளி பூங்காவாக இது இருக்கும். ஒவ்வொரு கட்டமாக இதன் வளர்ச்சி இருக்கும். தற்போது 11 ஜவுளி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஹிந்துக்களையும்,பிரதமர் மோடியையும் இழிவாக பேசியவருக்கு அரசு மரியாதையா ? இந்து முன்னணி கண்டனம் !

ஹிந்துக்களையும்,பிரதமர் மோடியையும் இழிவாக பேசியவருக்கு அரசு மரியாதையா ? இந்து முன்னணி கண்டனம் !

October 9, 2024
இந்துக்களின் நாடு இந்தியா மட்டுமே: சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நெத்தியடி பதில்

இந்துக்களின் நாடு இந்தியா மட்டுமே: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெத்தியடி பதில்

March 26, 2020

அமித்ஷா வந்து போனபின் ஆட்டத்தை ஆரம்பித்த ரஜினி பின்னணி என்ன

December 3, 2020
கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்யக் கூடாது ட்ரெண்டிங்கில் #கோவை_மன்னிக்காது

கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்யக் கூடாது ட்ரெண்டிங்கில் #கோவை_மன்னிக்காது

October 11, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x