Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தமிழகத்தில் ஜவுளி புரட்சி ! மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1000 ஏக்கரில் ஜவுளி பூங்கா! 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு !

Oredesam by Oredesam
August 6, 2023
in இந்தியா, செய்திகள்
0
தமிழகத்தில் ஜவுளி புரட்சி ! மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1000 ஏக்கரில்  ஜவுளி பூங்கா!  2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு !
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஜவுளி புரட்சி! மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1000 ஏக்கரில் ஜவுளி பூங்கா! 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் ஜவுளி புரட்சி! விருதுநகரில் 1000 ஏக்கரில் அமைகிறது மத்திய அரசின் பிரதம மந்திரி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

தொழில்துறையினர் தங்கள் ஜவுளி தொழிற்சாலைகளை ஒருங்கிணைந்து அமைப்பதற்கு அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக ஜவுளி பூங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான புதிய பூங்காக்களை வளர்ச்சி மையங்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தியா முழுவதும்

தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இத்திட்டத்தின் கீழ் 54 ஜவுளிப் பூங்காக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இதுவரை ரூ.14,243.69 கோடி முதலீட்டை ஈர்த்து , 1,05,709 பேருக்கு நேரடி மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் 51 சதவீத நிதி பங்களிப்பு, மாநில அரசின் 49 சதவீத நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது.

ஜவுளி பூங்கா விருதுநகரில் அமையும்பட்சத்தில் அப்பகுதியை சுற்றி இருக்கும் கிராமத்தினருக்கு சிறந்த மாற்று தொழிலாக இருப்பதுடன், அப்பகுதி பொருளாதார ரீதியாக வளர்ச்சியும் பெறும். தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பி.எம்., மித்ரா ஜவுளி பூங்கா இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் நிலத்தில் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதை மார்ச் 22ல் முதல்வர் ஸ்டாலின், மத்திய வர்த்தகம், ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையழுத்திடப்பட்டன. காணொளி காட்சி மூலம் பூஜையும் போடப்பட்டது.

1052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ரூ.2 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்துகிறது. இதில் 51 சதவீதம் மத்திய அரசும், 49 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இ.குமாரலிங்கபுரத்தை மையமாக கொண்டு அருகில் உள்ள அச்சம்பட்டி, கோவில்புலிக்குத்தி கிராமங்கள் வரை இந்த ஜவுளி பூங்கா பெரிய அளவில் அமைகிறது.

இதன் மூலம் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். அதிவீன உட்கட்டமைப்பு, ஒருங்கிணைந்த மதிப்பு சங்கிலி, சிறப்பு உற்பத்தி பகுதிகள், சமூக உட்கட்டமைப்பு, உற்பத்தியை உடன் தொடங்க சிறப்பு வசதிகள், வணிகப்பகுதி, பொது அடிப்படை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

ஒரு துணியின் துவக்கம் முதல் இறுதி வரை என்னென்ன தொழில் செய்யப்படுகின்றனவோ அதற்கான ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளன.

இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் செயப்பட உள்ளன. ஒரு ஏக்கரில் சிப்காட் அலுவலகம் அமைய உள்ளது. நான்கு வழிச்சாலையில் இருந்து குமாரலிங்கபுரத்திற்கு செல்லும் ரோடு 30 மீட்டருக்கு மாநில நெடுஞ்சாலைத்துறையால் அகலப்படுத்தப்பட உள்ளது. 1.8 கி.மீ., வரை விரிவாக்கம் செய்யப்படும். மண் பரிசோதனை முடிந்த விட்ட நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளன. பல கட்டங்களாக பணிகள் நடக்க உள்ளன.

ரூ.36 கோடிக்கு குடிநீர் பிளான்ட் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட உள்ளது. இந்த ஜவுளி பூங்கா முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வந்தவுடன் குமாரலிங்கபுரம், கோவில்புலிக்குத்தி கிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளிகளை தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட உள்ளன. பல கட்டங்களாக வளர்ச்சி பணிகள் செய்யப்பட உள்ளன.

முதல் கட்டத்தில் அமைய உள்ள ஆலைகள் மூலம் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். அடுத்தடுத்த கட்டங்களில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி 2 லட்சம் வேலைவாய்ப்புகள் வரை உருவாகும். இது விருதுநகர் மாவட்ட மத்திய பகுதி மக்களுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

குமாரலிங்கபுரம், எட்டூர்வட்டம், நடுவப்பட்டி, முத்துலிங்காபுரம், வாடியூர் பகுதி மக்கள் பட்டாசு தொழிலில் தான் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்களில் தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள் பலர் உள்ளனர்.
இவர்களுக்கு இந்த ஜவுளி பூங்கா அருமருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு மனது வைத்ததால் தமிழகத்திற்கும், விருதுநகர் மாவட்டத்திற்கும் வந்துள்ள இந்த திட்டம் தென் தமிழகத்தில் ஜவுளி தொடர்பான வேலைவாய்ப்புக்கு சிறந்த தளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜவுளி தொழில்கள் அனைத்திற்கும் இடமளிக்கும் வகையில் அலகு வாரியாக கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக சாய கழிவுகளை சுத்திகரிக்க சி.யு.டி., சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மண் பரிசோதனை முடிந்து விரைவில் பணிகள் துவங்கும். 160 முதல் 180 டெக்ஸ்டைல், அப்பேரல் அலகுகள் ஜவுளி பூங்கா மூலம் இடம்பெற உள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய ஜவுளி பூங்காவாக இது இருக்கும். ஒவ்வொரு கட்டமாக இதன் வளர்ச்சி இருக்கும். தற்போது 11 ஜவுளி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பிரசாந்த் கிஷோர் தலைமையில் CAA எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகிறது – பாஜக நிர்மல்குமார்

February 19, 2020
வெளிச்சம் தந்த மோடி ! பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலை கிராமத்துக்கு மின்சாரம் வழங்கியது மோடி அரசு!

வெளிச்சம் தந்த மோடி ! பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலை கிராமத்துக்கு மின்சாரம் வழங்கியது மோடி அரசு!

February 12, 2020
கப்பலில் போராடிய 14 பேரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை !

கப்பலில் போராடிய 14 பேரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை !

July 27, 2024

இன்று நரசிம்ம ஜெயந்தி

May 6, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x