Tuesday, May 24, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு சிறந்த வழி.

Oredesam by Oredesam
May 28, 2020
in செய்திகள்
0
ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு சிறந்த வழி.
FacebookTwitterWhatsappTelegram

கோவிட்-19 காரணமாக எதிர்பாராத விதத்தில், உடல்நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு பல வழிகளிலும் முயன்று வருகிறார்கள்.

இதற்கு, முன்னால் நின்று தலைமை தாங்கும் முயற்சியாக மாண்புமிகு பிரதமர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உடலின் இயற்கையான பாதுகாப்பு முறையை வலுப்படுத்துவதற்கான பொதுவான வழிமுறைகள்” என்பது குறித்து சில விளக்கப்படங்களைப் (ஸ்லைடுகளைப்) பகிர்ந்து கொண்டுள்ளார்.

READ ALSO

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி

நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட நோய் வருமுன் காப்பதே சிறந்தது என்று தனது பதிவில் அறிவுரை கூறியுள்ள பிரதமர், தற்போது கோவிட் நோயை குணப்படுத்த எந்தவிதமான மருந்தும் இல்லை என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது என்று கூறியுள்ளார். ஆயுர்வேதம் சக்தி வாய்ந்தது என்றும், குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் சக்தி வாய்ந்தது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். நாள் முழுவதும் சூடான தண்ணீர் அருந்துவது, யோகாசனம் செய்வது, பிராணாயாமம் செய்வது, குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு தியானம் செய்வது, தினந்தோறும் காலையில் 10 கிராம் ச்யவன்ப்ராஷ் சாப்பிடுவது, சமையலில் மஞ்சள் தூள், சீரகம், தனியா, பூண்டு ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது ஹெர்பல் தேனீர், /கோல்டன் மில்க், மஞ்சள் தூள் சேர்த்த பால் ஆகியவற்றை அருந்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் உள்ளன.

கோவிட்-19 நோயைக் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ சி எம் ஆர்) போன்ற ஆராய்ச்சி அமைப்புகள் மூலம் அறிவியல் மதிப்பீடு செய்வதற்காக பணிக்குழு ஒன்றை மாண்புமிகு பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக உதவக்கூடிய வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆயுஷ் அமைச்சகமும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஆயுஷ் சஞ்சீவனி என்ற செயலியை உருவாக்கியுள்ளன. இந்த செயலி மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்களால் புதுதில்லியில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது கோவிட்-19 நோய் சிகிச்சைக்காக புதுதில்லியில் ஆயுஷ் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளையும் அமைச்சர் இந்நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

கோவிட்-19 நோயை எதிர்கொள்வதற்கு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சர், ஆயுஷ் அறிவுரைகளையும் நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளுதல், பயன்படுத்துதல் மற்றும் பின்பற்றுபவர்கள் பற்றிய விவரங்களை அறியவும், மக்களிடையே கோவிட்- 19 பாதிப்பைத் தடுப்பதில் இவை எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்பதை அறியவும் ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி உதவும் என்றும் கூறினார்.  இந்தச் செயலி 50 லட்சம் மக்களைச் சென்றடையும் இலக்கு உள்ளது என்றார்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஆயுர்வேதம் அதிகரிக்கும் என்றும், சஞ்சீவனி அலைபேசி செயலி மூலம் வீட்டிலேயே எளிமையான முறைகளைக் கொண்டு நோய் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் கோயம்புத்தூரை சேர்ந்த திரு. ராம்குமார் கூறுகிறார்.

கேரளாவில் இருந்த தனது குடும்பம் கோயம்புத்தூரில் குடியமர்ந்துள்ளதாகக் கூறும் திருமதி அகல்யா, தமது குடும்பம் எப்போதும், ஆயுர்வேத சிகிச்சை முறையையே சார்ந்திருப்பதாகக் கூறினார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஆயுர்வேதம் மிகவும் உதவிகரமாக உள்ளது என்று கூறிய அவர், இந்த சிறப்புச் செயலியை அறிமுகப்படுத்தியதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் உள்ள SIHS காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவரான ஆதித்யன், குழந்தைகளும், முதியவர்களும் கோவிட்-19 வைரஸ் நோயால் மிகவும் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள்; இந்த இரு சாராருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்தச் செயலி அறிவுரை வழங்குகிறது என்றார்.

இல்லங்களிலேயே கிடைக்கக்கூடிய பெருவாரியான பாரம்பரிய மருத்துவகுணம் வாய்ந்த பொருள்களைப் பயன்படுத்துவது பற்றி அறிவுரை அளிப்பதால், ஆயுஷ் சஞ்சீவினி செயலி மக்களின் கவனத்தை அதிக அளவில் பெற்று வருகிறது. இந்த நெருக்கடியான காலத்தில் அரசு எடுத்து வரும் பல்முனை அணுகுமுறையுடன் கூடிய பல்வேறு நடவடிக்கைகளுடன், இத்தகைய சக்தி வாய்ந்த நம்பத்தகுந்த செயலியின் உதவியுடன் பெருந்தொற்று நம் நாட்டிலிருந்து விரைவில் அகலும் என்று நாம் நம்பலாம்.

ShareTweetSendShare

Related Posts

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.
செய்திகள்

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.

May 21, 2022
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி
இந்தியா

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி

May 21, 2022
திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…
செய்திகள்

திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…

May 21, 2022
மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..
செய்திகள்

மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

May 21, 2022
கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !
செய்திகள்

கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !

May 20, 2022
அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!
செய்திகள்

அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!

May 20, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

தி.மு.க வின் புதிய தலைவர் இவரா? உதயநிதி அப்செட் உற்சாகத்தில் சீனியர்கள்!

தி.மு.க வின் புதிய தலைவர் இவரா? உதயநிதி அப்செட் உற்சாகத்தில் சீனியர்கள்!

February 11, 2020
மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!

ஜெய்ஹிந்த் களத்தில் இறங்கிய அமித் ஷா! ஜெய்ஹிந்த் வார்த்தையை எடுக்க சொன்னது யார்? வெளிவந்த தகவல்!

June 27, 2021
தலிபான் பயங்கரவாதத்தை முறியடிக்க ஜோபைடன்-மோடி மாஸ்டர் பிளான்.

தலிபான் பயங்கரவாதத்தை முறியடிக்க ஜோபைடன்-மோடி மாஸ்டர் பிளான்.

September 25, 2021
நம்புங்கள் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ போரை நிறுத்திய தினம் இன்று !

நம்புங்கள் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ போரை நிறுத்திய தினம் இன்று !

April 27, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.
  • பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி
  • திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…
  • மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x