2G ஆ.ராசா மீது புதிய வழக்கு தொடரும் சிபிஐ அடுத்த அதிரடியில் அரசியல்களம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார். அப்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி தலைமையில் விசாரணை தொடங்கியது. 

6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த வழக்கின் விசாரணையில் கடந்த 2017 ஏப்ரல் 19-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோன நிலையில், டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என 2017 டிசம்பர் 5-ந் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி  நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார். 

இதனை தொடர்ந்து ஆ ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ 28 கோடி சொத்து வழக்கு பதிய மத்திய அரசு அனுமதியை கோரியுள்ளது சிபிஐ!திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ ராஜா மீது சொத்துக்குவிப்பு வழக்கில் வழக்குப்பதிவு செய்ய மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அனுமதி கோரியுள்ளது.

2015 ஆம் ஆண்டில், ரூ 28 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக சிபிஐயால் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆதாரங்களின்படி, ராஜாவுக்கு எதிரான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

பல்வேறு அமைச்சகங்களுக்கு எம்.பி., அமைச்சராக பணியாற்றிய போது, 1999 மற்றும் 2010 க்கு இடையில் ரூ .28 கோடி அளவுக்கு அசாதாரண சொத்துக்களை ஏ ராஜா குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. வழக்கைப் பதிவு செய்த பிறகு, ஆகஸ்ட் 2015 இல், சிபிஐ தமிழ்நாடு மற்றும் டெல்லியின் பல இடங்களில் சோதனைகளை நடத்தியது.

2 ஜி வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஏ ராஜா மற்றும் பலர் விடுவிக்கப்பட்டனர்.சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்ற விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன.

Exit mobile version