அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு ! நன்றி சொன்ன அண்ணாமலை !

நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் முண்டாஅர்ஜுன் அவர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

1965ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டி நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. தமிழக பாஜகவின் தொடர் முயற்சியாலும், நரிக்குறவர் மக்களின் நீண்ட கால கோரிக்கையையும் மனதில் கொண்டு.

பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளார் நமது மாண்புமிகு பாரத பிரதமர். இந்த மகத்தான முடிவு நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு சம உரிமையையும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Exit mobile version