Thursday, June 19, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

விடியல் அரசின் மெத்தனம் 10,000 டன் நெல் நாசம்… விவசாயிகள் பாதிப்பு! போராளிகள் எங்கே?

Oredesam by Oredesam
January 4, 2022
in செய்திகள், தமிழகம்
0
விடியல் அரசின் மெத்தனம் 10,000 டன் நெல் நாசம்… விவசாயிகள் பாதிப்பு! போராளிகள் எங்கே?
FacebookTwitterWhatsappTelegram

நேரடி கொள்முதல் நிலையங்களின் மெத்தன போக்கால் மழையில் நனைந்து 10,000 டன் நெல்கள் வீணாகியுள்ளது. நெல் விவசாயிகளின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. விடியல் அரசோ அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்குவதில் ஆர்வம்காட்டி வருகிறது. மக்கள் மீதோ விவசாயிகள் மீதோ அக்கறை கொள்ளாமல் ஆளும்கட்சிக்கு புகழ்பாடுவதில் ஊடங்கங்கள் போட்டி போட்டுவருகிறார்கள்.தமிழகத்தில் இது தான் இன்றைய நிலை என சமூக ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள்.

தஞ்சாவூரில் நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகள் அடுக்க இடம் இல்லாதால் வெட்டவெளியில் அடுக்கப்ட்டது. இதன்காரணமாக மழையில் நனைந்து 10,000 டன் நெல்கள் வீணாகியுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் சி.கிரனூர் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.

READ ALSO

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

இதனை நம்பி அந்த கிராமத்தை சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து நெல் மணி மூட்டைகளை கொண்டுவந்தார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் என நம்பி வந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.சங்கு கொள்முதல் நிலையம் திறக்கப்படடததால் 50000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது தான் மிச்சம்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 66 ஆயிரத்து 400 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் தாலுக்கா பகுதிகளில் மட்டும் 22 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருந்தனர். இதையடுத்து அறுவடை செய்த குருவை நெல்களை நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொள்முதல் செய்தனர்.

கும்பகோணம், திருவிடைமருதூர் பாபநாசம் வட்டாரத்தில் மட்டும் 3 லட்சத்து 48 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கும்பகோணம், சோழன் மாளிகை, சுவாமிமலை, திருப்புறம்பியம், பட்டீஸ்வரம், தாராசுரம், சோழபுரம், திருப்பனந்தாள்,ஆகிய பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட குறுவை நெல்மணிகள் அனைத்தும் திருநாகேஸ்வரத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கிருந்து ரயில்கள், லாரிகள் மூலம் சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, வேலூர் உள்ளிட்ட மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திருநாகேஸ்வரத்தை அடுத்த சன்னாபுரம் கிராமத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் போதிய இடவசதி இல்லாததால் திருநாகேஸ்வரத்தில் அருகே சன்னாபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன.

இந்த நெல் மூட்டைகள் மீது தரமற்ற தார்ப்பாய்கள் கொண்டு போர்த்தப்பட்டு இருந்ததால் அவை சிறிது நாட்களிலேயே வெயிலில் காய்ந்து கிழிந்து சேதமடைந்தது.இதனால் வெட்டவெளியில் கிடந்த 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கடந்த இரண்டு மாதமாக வெயில் மற்றும் மழையில் நனைந்து சாக்கு மூட்டைகள் கிழிந்து நெல்மணிகள் கீழே கொட்டி வீணாகி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் அந்த நெல் மூட்டைகள் மேலும் நனைந்து நெல்மணிகள் முளைப்புத்திறன் அடைந்ததோடு, நெல் முட்டைகள் கருத்துப் போய் பயன்படுத்த முடியாது நிலைக்கு சென்றுள்ளது. இந்த 40 ஆயிரம் நெல் மூட்டைகளில் இருந்து கிட்டத்தட்ட 10,000 டன் நெல்கள் வீணாக கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ரூ. 1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதி கிராமத்தின் உள் பகுதியில் அமைந்திருப்பதால் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விட்டதாகவும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையே தாங்கள் கஷ்டப்பட்டு அறுவடை செய்த நெல்லை அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் வீணடிப்பது மிகவும் வருத்தத்துக்குரிய செயலாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கிராமவாசிகள் கூறுகையில், சன்னாபுரம் திறந்த வெளி நெல் கிடங்கில் பல மாதங்களாக ஆயிரக்கணக்கான மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கிராமத்தின் ஒதுக்குபுறமான பகுதிகளில் உள்ளதால், எந்த அதிகாரியும் கண்டு கொள்வதில்லை. இதனால் பலத்த மழை பெய்ததால் நெல் மூட்டைகளின் கீழ் மழை நீரில் தெப்பம் போல் தேங்கி நின்றது.

இது குறித்து அப்போதே, அதிகாரிகளிடம் கூறினோம். ஆனால் கும்பகோணத்திலுள்ள அதிகாரிகள், ஒருவரை ஒருவர் மாறி மாறி சொல்லி அலைகழித்தனர். ஆனால் விவசாயிகள் கஷ்டப்பட்ட விளைவித்த நெல் மூட்டைகளை விலை கொடுத்து வாங்கி விட்டு, அலட்சியமாக இருந்ததால், பல கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Related Posts

condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Modi

அழுத்தம் திருத்தமாக மோடி சொன்ன அந்த சம்பவம் …விரைவில் பொது சிவில் சட்டம்.கதறும் எதிர்கட்சிகள்.

November 3, 2024
வெள்ளத்தில் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளதா?: இன்சூரன்ஸ் பெறும் வழி !

வெள்ளத்தில் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளதா?: இன்சூரன்ஸ் பெறும் வழி !

December 6, 2023
பட்டா கத்தியுடன் மசாஜ் சென்டரில் புகுந்து ஊழியர்களை தாக்கி பணம், நகை கொள்ளை அடித்த தி.மு.க பிரமுகர்- பதைபதைக்கும் காட்சிகள்

பட்டா கத்தியுடன் மசாஜ் சென்டரில் புகுந்து ஊழியர்களை தாக்கி பணம், நகை கொள்ளை அடித்த தி.மு.க பிரமுகர்- பதைபதைக்கும் காட்சிகள்

November 1, 2021
கைவிட்ட கிறிஸ்தவ மதத் தலைவர்கள்- மகளை மீட்க விஸ்வ ஹிந்து பரிஷத்தை நாடிய பெண்!

சட்டவிரோத ஜெபக்கூடத்திற்கு போட்டியாக இந்து முன்னணி கூட்டு வழிபாடு!

April 4, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.
  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?
  • 9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!
  • மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x