Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மாநிலங்களவைத் தேர்தல்களைத் தள்ளி வைத்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.

Oredesam by Oredesam
March 24, 2020
in இந்தியா
0
மாநிலங்களவைத் தேர்தல்களைத் தள்ளி வைத்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுக்க 17 மாநிலங்களில் இருந்து ஏப்ரல் 2020 உடன் ஓய்வுபெறும் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் 25.02.2020ல் அறிவித்தது. 06.03.2020 தேதியிட்ட அறிவிப்பாணை எண் 318/CS-Multi/2020(1) -ன்படி அந்த அறிவிப்பு வெளியானது.  வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி 18.03.2020ல் நிறைவடைந்த நிலையில், 10 மாநிலங்களில் இருந்து 37 இடங்களுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இப்போது, தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து 18 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 26.03.2020 (வியாழக்கிழமை) அன்று நடத்தப்பட வேண்டும். 30.03.2020 (திங்கள்கிழமை) தேதிக்குள் தேர்தல் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

            இதற்கிடையில், 11.03.2020 தேதியன்று, கோவிட் 19-ஐ உலக அளவிலான தீவிர நோய்த் தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவிக்கை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஆகியவை, கோவிட் 19 கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் பல்வேறு வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.  22.03.2020 தேதியிட்ட பத்திரிகை வெளியீட்டின் மூலம், கோவிட் – 19 சங்கிலித் தொடரில் பிணைப்புகளை உடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புறநகர் ரயில் சேவைகள் உள்பட அனைத்து ரயில் சேவைகளையும் 31.03.2020 வரையில் ரத்து செய்வது, மருத்துவமனைகள், தொலைத்தொடர்பு, மருந்துக் கடைகள், மளிகை பொருள் கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். அதன் தொடர்ச்சியாக, 24.03.2020 அன்று 23.59 ஐ.எஸ்.டி. நேரத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் இயங்காது என்று 23.03.2020 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கோவிட் – 19 கையாளுதல் மற்றும் கட்டுப்படுத்துதலுக்கு வசதியாக உள்ளூர் போக்குவரத்து வசதிகளை முடக்குவது குறித்து மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, ராஜஸ்தான் மாநிலங்களில், கோவிட் – 19 பரவுதலைக் கட்டுப்படுத்த அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி வைக்கும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

READ ALSO

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

            இந்த விஷயங்களை தேர்தல் ஆணையம் விரிவாக ஆய்வு செய்தது. எதிர்பாராத, இப்போதைய பொது சுகாதார அவசர சூழ்நிலைகள், எந்த வகையிலும் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்த்துகின்றன. அவ்வாறு செய்வது, அதில் ஈடுபடும் அனைவருக்கும் ஆரோக்கியத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேற்குறிப்பிட்ட தேர்தல்களுக்கான தேர்தல் நடைமுறைகளில், தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள், ஆதரவு நிலை அதிகாரிகள், அந்தந்த சட்டப்பேரவைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் வாக்குப் பதிவு நாளன்று ஓர் இடத்தில் கூட வேண்டிய அவசியம் ஏற்படும். இப்போது நிலவும், முன் எப்போதும் இல்லாத சூழ்நிலையில், அரசின் அறிவுறுத்தல்களின்படி, இது உகந்ததாக இருக்காது என்று கருதப்படுகிறது.

            மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் பிரிவு 153ன்படி, உரிய காரணங்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் கருதினால், ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிக்கையில், பிரிவு 39ன் துணைப் பிரிவு (1) அல்லது பிரிவு 30ன் கீழ் தேவையான திருத்தங்கள் செய்வதன் மூலம், எந்தத் தேர்தலையும் நிறைவு செய்வதற்கான காலத்தை நீட்டிக்கலாம் என வகை செய்யப்பட்டுள்ளது; அதன்படி மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்தின் பிரிவு 153ன்படி, இந்தத் தேர்தலை ஆணையம் தள்ளி வைத்து, அதை நிறைவு செய்வதற்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலின்படி, மேற்படி அறிவிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு, இந்தத் தேர்தலின் மீதி பணிகள் நிறைவு செய்யப்படும். வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான புதிய தேதிகள், சூழ்நிலைகளை ஆய்வு செய்து பின்னர் உரிய காலத்தில் அறிவிக்கப்படும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கொரோனா நிவாரண உதவியில் முன்மாதிரி ஆன, மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்! குவிகிறது பாராட்டு!

கொரோனா நிவாரண உதவியில் முன்மாதிரி ஆன, மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்! குவிகிறது பாராட்டு!

June 5, 2021
இந்திய சட்டபடி எந்த அரசும் எதையும் விற்க முடியாது,இந்தியாவில் விற்பனையானது கச்சதீவு ஒன்றுதான்.

இந்திய சட்டபடி எந்த அரசும் எதையும் விற்க முடியாது,இந்தியாவில் விற்பனையானது கச்சதீவு ஒன்றுதான்.

September 3, 2021
thiruma-edappadi palanisamy

எடப்பாடி பக்கம் யூ டர்ன் அடித்த திருமா … விசிக கொண்டாட்டம்… திமுக திண்டாட்டம்

September 10, 2024
ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய இந்திய ராணுவ முடிவு.

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய இந்திய ராணுவ முடிவு.

April 23, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x