Friday, February 3, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மாநிலங்களவைத் தேர்தல்களைத் தள்ளி வைத்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.

Oredesam by Oredesam
March 24, 2020
in இந்தியா
0
மாநிலங்களவைத் தேர்தல்களைத் தள்ளி வைத்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுக்க 17 மாநிலங்களில் இருந்து ஏப்ரல் 2020 உடன் ஓய்வுபெறும் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் 25.02.2020ல் அறிவித்தது. 06.03.2020 தேதியிட்ட அறிவிப்பாணை எண் 318/CS-Multi/2020(1) -ன்படி அந்த அறிவிப்பு வெளியானது.  வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி 18.03.2020ல் நிறைவடைந்த நிலையில், 10 மாநிலங்களில் இருந்து 37 இடங்களுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இப்போது, தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து 18 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 26.03.2020 (வியாழக்கிழமை) அன்று நடத்தப்பட வேண்டும். 30.03.2020 (திங்கள்கிழமை) தேதிக்குள் தேர்தல் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

            இதற்கிடையில், 11.03.2020 தேதியன்று, கோவிட் 19-ஐ உலக அளவிலான தீவிர நோய்த் தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவிக்கை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஆகியவை, கோவிட் 19 கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் பல்வேறு வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.  22.03.2020 தேதியிட்ட பத்திரிகை வெளியீட்டின் மூலம், கோவிட் – 19 சங்கிலித் தொடரில் பிணைப்புகளை உடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புறநகர் ரயில் சேவைகள் உள்பட அனைத்து ரயில் சேவைகளையும் 31.03.2020 வரையில் ரத்து செய்வது, மருத்துவமனைகள், தொலைத்தொடர்பு, மருந்துக் கடைகள், மளிகை பொருள் கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். அதன் தொடர்ச்சியாக, 24.03.2020 அன்று 23.59 ஐ.எஸ்.டி. நேரத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் இயங்காது என்று 23.03.2020 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கோவிட் – 19 கையாளுதல் மற்றும் கட்டுப்படுத்துதலுக்கு வசதியாக உள்ளூர் போக்குவரத்து வசதிகளை முடக்குவது குறித்து மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, ராஜஸ்தான் மாநிலங்களில், கோவிட் – 19 பரவுதலைக் கட்டுப்படுத்த அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி வைக்கும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

READ ALSO

குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே துடிக்கிறது.. ‘காசி தமிழ் சங்கமம்’ பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு !

            இந்த விஷயங்களை தேர்தல் ஆணையம் விரிவாக ஆய்வு செய்தது. எதிர்பாராத, இப்போதைய பொது சுகாதார அவசர சூழ்நிலைகள், எந்த வகையிலும் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்த்துகின்றன. அவ்வாறு செய்வது, அதில் ஈடுபடும் அனைவருக்கும் ஆரோக்கியத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேற்குறிப்பிட்ட தேர்தல்களுக்கான தேர்தல் நடைமுறைகளில், தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள், ஆதரவு நிலை அதிகாரிகள், அந்தந்த சட்டப்பேரவைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் வாக்குப் பதிவு நாளன்று ஓர் இடத்தில் கூட வேண்டிய அவசியம் ஏற்படும். இப்போது நிலவும், முன் எப்போதும் இல்லாத சூழ்நிலையில், அரசின் அறிவுறுத்தல்களின்படி, இது உகந்ததாக இருக்காது என்று கருதப்படுகிறது.

            மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் பிரிவு 153ன்படி, உரிய காரணங்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் கருதினால், ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிக்கையில், பிரிவு 39ன் துணைப் பிரிவு (1) அல்லது பிரிவு 30ன் கீழ் தேவையான திருத்தங்கள் செய்வதன் மூலம், எந்தத் தேர்தலையும் நிறைவு செய்வதற்கான காலத்தை நீட்டிக்கலாம் என வகை செய்யப்பட்டுள்ளது; அதன்படி மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்தின் பிரிவு 153ன்படி, இந்தத் தேர்தலை ஆணையம் தள்ளி வைத்து, அதை நிறைவு செய்வதற்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலின்படி, மேற்படி அறிவிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு, இந்தத் தேர்தலின் மீதி பணிகள் நிறைவு செய்யப்படும். வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான புதிய தேதிகள், சூழ்நிலைகளை ஆய்வு செய்து பின்னர் உரிய காலத்தில் அறிவிக்கப்படும்.

ShareTweetSendShare

Related Posts

குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.
இந்தியா

குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

December 1, 2022
பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே துடிக்கிறது.. ‘காசி தமிழ் சங்கமம்’ பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு !
இந்தியா

பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே துடிக்கிறது.. ‘காசி தமிழ் சங்கமம்’ பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு !

November 17, 2022
இந்தியா

ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் நிர்வாகி கைது.

November 16, 2022
ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு அல்ல- ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.
இந்தியா

ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு அல்ல- ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.

November 16, 2022
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தேசத்தின் தந்தை இமாம் அமைப்பின் தலைவர் புகழாரம்…
இந்தியா

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தேசத்தின் தந்தை இமாம் அமைப்பின் தலைவர் புகழாரம்…

September 23, 2022
இது ஆம்ஆத்மி மாடல் ! மதுபோதையில் தள்ளாட்டம்… விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் !
அரசியல்

இது ஆம்ஆத்மி மாடல் ! மதுபோதையில் தள்ளாட்டம்… விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் !

September 20, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

மீண்டும் பல் இளித்த சீனாவின் கம்யூனிசம்…

January 8, 2021

புரட்டாசி சனிக்கிழமை – தரிசனத்திற்கு விடாமல் கோவிலை பூட்டும் திட்டமா?

September 13, 2020
விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

September 7, 2020
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சிதம்பரம் தீட்சிதர்கள் ! கடிதத்தில் இருந்தது இதுவா ?

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சிதம்பரம் தீட்சிதர்கள் ! கடிதத்தில் இருந்தது இதுவா ?

June 4, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • “ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி
  • 6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !
  • இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.
  • ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x