பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியின் கடைசி அத்தியாயம்! தனிக்கட்சி தொடங்கும் காங்கிரஸ் முதல்வர்!

பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்துள்ளது சோனியா குடும்பம்.

இதனால் கடுப்பாகி இருக்கும் அம்ரீந்தர்சிங் சோனியாவுக்கு நேரடியாகவே எச்சரிக்கும் விதத்தில் பஞ்சாப் அரசியலிலும் ஆட்சியிலும் தலையிடுவது நல்லதல்ல இதனால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார்.

அனைத்தையும் மீறி சித்துவிற்கு காங்கிரஸ் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அம்ரீந்தர்சிங் , சித்துவும் தங்களுக்கு உள்ள பலத்தை நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றர்கள் ஏனெனில் காங்கிரஸ் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் அறிவிக்க இருக்கிறது

இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என ஐந்து அமைச்சர்கள், 24க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். சுக்ஜீந்தர் ரந்தாவா, சுக்பிந்தர் சர்காரியா, சரண்ஜித் சன்னி உட்பட நான்கு அமைச்சர்கள், 24க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் நேற்று, அமைச்சர் டிரிப்ட் ராஜேந்தர் பஜ்வா வீட்டில் கூடினர்

அமரீந்தர் சிங்கை மாற்றக்கோரி காங்கிரஸ் மேலிடத்தை சந்திக்க ஐவர் குழு அமைக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் ரந்தாவா கூறியதாவது:முதல்வர் அமரீந்தரின் செயல்பாடுகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர் தலைமையில் சட்ட சபை தேர்தலை சந்தித்தால் தோல்வி நிச்சயம். ஆட்சியை தக்க வைக்கும் கனவு கானல் நீராகும். என கூறினார்.

இந்த நிலையில் அம்ரீந்தர் சிங் காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது இதனால் 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடி உறுதி.

கடந்த 2017 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ராகுலை பிரச்சாரத்திற்கே வர வேண்டாம் என்று கூறிய கேப்டன் அம்ரீந்தர் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் வால் போஸ்டரில் கூட சோனியா ராகுலின் படங்களை கூட போடாமல் பிரச்சாரம் செய்து காங்கிரஸை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர்த்தினார்.

இதனால் தான் அம்ரீந்தர் சிங்கிற்கு போ ட்டியாக சோனியா குடும்பத்தினர் சித்துவை வளர்த்து வந்தார்கள். இப்பொழுது சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரசின் தலைவராக சோனியா குடும்பம் கொண்டு வந்துள்ளது.

ஓரு வேளை கேப்டன் தனிக்கட்சி ஆரம்பித்து வருகி ன்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அம்ரீந்தர் சிங் சிரோன்மணி அகாலி தளம் இடையே தான் தேர்தலில் போட்டி இருக்கும்.

காங்கிரஸ் 4 வது இடத்திற்கு போய்விடும் வாய்ப்புகள் இருக்கிறது இதனால் தேர்த லுக்கு பிறகு பஞ்சாபில் பிஜேபியின் ஆதிக்கம் கொண்ட ஆட்சி அமைய முடியும்.

Exit mobile version