2014 ஆம் ஆண்டு, முதல் முறையாக பாரத பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றது முதல்,நாட்டின் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருகிறது.
2014-ல் 2.29 லட்சம் கோடியாக இருந்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு,கடந்த நிதியாண்டில் 6.81 லட்சம் கோடி ரூபாய் 3 மடங்காக அதிகரித்திருந்தது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்புக்காக 7.85 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இது வரும் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதமாகும். மேலும் கடந்த ஆண்டில் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை விட சுமார் 24 சதவீதம் அதிகமாகும்.
ராணுவத் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கும் இராணுவ தளவாடங்களை நவீனமயமாக்கவும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இது தவிர முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின குடும்பத்தினரின் நலனுக்காக கடந்த நிதியாண்டை விட 45.49 சதவீதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
இது வழக்கமானதல்ல என்றும் இது இந்தியா எந்த அளவுக்குத் தேச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை விமர்சகரான Qamar Cheema கமர் சீமா ஒரு காணொளியில் கூறியுள்ளார்.
இந்த பட்ஜெட் ஒதுக்கீடு, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி அழுத்தங்கள் இருந்த போதிலும் இந்தியா ரஷ்யாவின் சுகோய் 57 போன்ற மேம்பட்ட போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் என்பதை உறுதி படுத்துவதாக Qamar Cheema கமர் சீமா தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தியாவின் அதிரடி தாக்குதலைத் தாங்க முடியாமல் பாகிஸ்தான் கெஞ்சியதால் ஆப்ரேஷன் சிந்தூரை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூனில் பாகிஸ்தான் அரசு தனது மொத்த பட்ஜெட்டில் 14.5 சதவீதத்தை ஒதுக்கி நாட்டின் இராணுவப் பட்ஜெட்டை 20.2 சதவீதமாக அதிகரித்தது. அதாவது 428 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக இருந்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை 2,550 பில்லியன் ரூபாயாக அதிகரித்தது.
இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.97 சதவீதம் ஆகும். பாகிஸ்தானின் உற்பத்தி அளவு விட இந்தியாவின் ராணுவ ஒதுக்கிய மதிப்பு அதிகம் என தெரிகின்றது.
இந்தியா இராணுவத் துறைக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி இருப்பது, சீனாவை விட பாகிஸ்தானுக்கே அதிக சவால்களை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















